Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

விநாயகருக்கு துளசி இலை ஏன் படைக்கக்கூடாது? அதன் புராண கதை

இந்திய கலாச்சாரத்தில் வழிபாடுகள் ஒரு முக்கிய அங்கம். ஒவ்வொரு கடவுளுக்கும் விருப்பமான மற்றும் விரும்பத்தகாத பொருட்கள் உள்ளன. அந்த வகையில், விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மிகவும் பிடித்தமானவை. ஆனால், துளசி இலைகளை விநாயகர் பூஜையில் பயன்படுத்துவது ஏன் கூடாது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். புராண காலங்களில் நடந்த ஒரு சுவாரஸ்யமான கதையே இதற்கு காரணம். இந்த பதிவில், விநாயகருக்கு துளசி இலை ஏன் படைக்கக்கூடாது என்பதற்கான முழுமையான புராண கதையை விநாயகர் பக்தர்களுக்கு விரிவாகக் காணலாம். ஜோதிடம்360 உங்கள் ஆன்மீக பயணத்திற்கு துணைபுரிகிறது.

விநாயகர் மற்றும் துளசியின் புராண கதை சுருக்கம்

  • துளசி தேவி, எமதர்மனின் மகள், விஷ்ணு பக்தை.
  • கங்கை கரையில் தியானத்தில் இருந்த விநாயகர் மீது காதல் கொண்டாள்.
  • விநாயகர் துளசியின் காதலை மறுக்க, கோபமுற்ற துளசி சாபமிட்டாள்.
  • விநாயகரும் துளசிக்கு சாபமிட்டார் - ஒரு அசுரனை மணப்பாள் என்று.
  • சாபத்தின் விபரீதத்தை உணர்ந்த துளசி, விநாயகரிடம் மன்னிப்பு கோரினாள்.
  • விநாயகர் மனமிரங்கி, விஷ்ணுவின் அருளால் புனித துளசி செடியாக மறுபிறப்பெடுப்பாய் என்று வரமளித்தார்.
  • ஆனால், விநாயகர் பூஜையில் துளசி பயன்படுத்தப்படாது என்ற நிபந்தனையையும் விதித்தார்.

விநாயகப் பெருமானுக்கு துளசி ஏன் கூடாது? முழுமையான விளக்கம்

விநாயகர் எளிமையான கடவுள் என்பதால் எந்த பொருளை வைத்து வழிபட்டாலும் ஏற்றுக் கொள்வார். அவருக்கு அருகம்புல், எருக்கம்பூ பிடிக்கும் என்பது போல், அவருக்கு பிடிக்காதது துளசி இலைகள் என சொல்லப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்பதையும், புராணங்களில் சொல்லப்படும் கதைகளையும் தெரிந்து கொள்ளலாம். விநாயகருக்கு துளசி பயன்படுத்தக் கூடாத காரணம்: விநாயகருக்கு எளிமையான அருகம்புல்லும் எருக்கம் பூ மாலையும் பிடித்தமானது. அதே நேரத்தில் துளசியை தப்பித்தவறி கூட விநாயகர் பூஜைக்கு பயன்படுத்தி விடக் கூடாது என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு புராணங்களில் ஒரு கதையும் சொல்லப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நேரத்தில் துளசியை ஏன் விநாயகர் பூஜையில் பயன்படுத்தக்கூடாது தெரிந்து கொண்டு, கவனமாக, மிகுந்த பக்தியுடன் விநாயகரை வழிபட்டு , அவரின் அருளை பெற வேண்டும். வினைதீர்க்கும் விநாயகரை வணங்கினால் எந்த சாபமாக இருந்தாலும் விலகி விடும் என்று கூறுவார்கள். ஆனால் அந்த விநாயகரே ஒருவருக்கு சாபமிட்ட சம்பவம் உள்ளது. அதுவும் அவரை விரும்பிய பெண்ணுக்கே விநாயகர் சாபமிட்டார். விநாயகர் ஏன் தன்னை விரும்பிய பெண்ணே சாபம் கொடுத்தார்? யார் அந்த பெண்? விநாயகர் கொடுத்த சாபத்தின் விளைவு என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

துளசி தேவியின் ஆசை

துளசி, மரணத்தின் கடவுளான எமதர்மனின் மகள் ஆவார். அவர் தன் இளம் வயதில் விஷ்ணுவின் தீவிர பக்தையாக இருந்தார். அவர் தினமும் கங்கை நதிக்கரையில் உள்ள விஷ்ணுவின் கோவிலுக்கு சென்று நதியில் நீராடி விஷ்ணுவை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவ்வாறு தினமும் செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் கங்கையின் மறுகரையில் ஒருவர் தியானத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்தார். அவரின் தேஜஸை கண்டு மயங்கிய துளசி அவர் மேல் காதலில் விழுந்தார். அந்த தியானத்தில் இருந்தவர் வேறு யாருமல்ல விநாயகர் தான்.

விநாயகர் மீது காதல்

தியானத்தின் போது அவர் எழுப்பிய ஒலி அவரின் வசீகரத்தை மேலும் அதிகரித்தது. இதனால் அவரிடம் சென்று தன் காதலை வெளிப்படுத்த எண்ணினார், துளசி. அதனை நிறைவேற்றவும் செய்தார். உடனடியாக பிள்ளையாரிடம் சென்று தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிள்ளையார் அமைதியாக துளசியின் காதலுக்கும், திருமணம் பற்றிய வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவித்தார். துளசி அதற்கு காரணம் கேட்ட போது, தன் தந்தை சிவபெருமானுக்கு எப்படி பார்வதி தேவி சிறந்த துணையாக இருக்கிறாரோ அதே போல தானும் தனக்கு தன் அன்னையை போல இருக்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள இயலும் என்று கூறினார்.

விநாயகர் கொடுத்த சாபம்

விநாயகரின் இந்த பதில் துளசியின் கோபத்தை அதிகரித்தது. இதை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதினார். தன் உணர்ச்சிகளை மதிக்காத பிள்ளையாரை அதற்காக தண்டிக்க எண்ணினார். எனவே பிள்ளையாருக்கு சாபமிட துணிந்தார். தன் காதலை மதிக்காத பிள்ளையாருக்கு வருங்காலத்தில் அவர் எண்ணங்களுக்கு எதிராகவே திருமணம் நடக்க வேண்டும் என்று சாபமிட்டார். அது வரை பொறுமை காத்த பிள்ளையார் துளசியின் சாபத்தால் கோபமுற்றார். எனவே வருங்காலத்தில் நீ ஒரு அசுரனைத்தான் திருமணம் செய்து கொள்வாய் என்று துளசிக்கு சாபமிட்டார்.

விநாயகர் கொடுத்த வரம்

விநாயகர் அளித்த சாபத்தின் விபரீதத்தை உணர்ந்த துளசி தான் செய்த தவறை உணர்ந்தார். உடனடியாக தன் தவறை உணர்ந்த துளசி விநாயகரிடம் மன்னிக்கும்படி கெஞ்சினார். துளசி கண்ணீர் விட்டு கெஞ்சுவதை பார்த்த விநாயகர் மனமிரங்கினார். பிள்ளையார் தான் அளித்த சாபத்தையே வரமாக மாற்றினார். அதன்படி விஷ்ணுவின் அருளால் துளசி புனிதமான துளசி செடியாக மறுபிறப்பு எடுப்பாய் எனவும், விஷ்ணுவை உன்னை கொண்டு பூஜிப்பார்கள் எனவும் கூறினார்.

ஏன் துளசி பயன்படுத்தக் கூடாது?

ஆனாலும் நீ என்னிடம் இருந்து எப்போதும் விலகி தான் இருப்பாய். என்னை உன்னை கொண்டு பூஜிக்கக் கூடாது என்று கூறினார். விநாயகர் கொடுத்த சாபம் பலித்தது. அதன்படி துளசி அரக்கர்களின் மன்னனான ஜலந்தரனையே மணக்க நேரிட்டது. அரக்கனான அவன் செய்த தவறுகளுக்காக பின்னாளில் அவனை சிவபெருமானால் வதைக்கப்பட்டான். அதன்பின் தானும் இறந்த துளசி, விநாயகர் கூறியது போலவே புனிதமான துளசி செடியாக பிறந்தார். இன்றைக்கும் விநாயகர் பூஜைக்கு துளசியை பயன்படுத்தாமல் உள்ளதன் காரணம் இதுதான். இதனை மீறி யாராவது விநாயகருக்கு துளசி படைத்து வழிபட்டால், அதனால் விநாயகரின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

விநாயகப் பெருமான், தன்னை விரும்பிய துளசி தேவிக்கு, தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், துளசி கோபமடைந்து விநாயகருக்கு சாபமிட்டாள். பதிலுக்கு விநாயகரும் துளசிக்குச் சாபமிட்டார். பின்னர், துளசி தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டபோது, விநாயகர் மனமிரங்கி, விஷ்ணுவிற்குப் பிரியமானவளாக இருப்பாள் என்றும், துளசி செடியாகப் பிறப்பாள் என்றும் வரமளித்தார். ஆனால், விநாயகரின் பூஜையில் துளசி பயன்படுத்தப்படாது என்றும் கூறினார். இந்த புராணக் கதையே விநாயகர் பூஜையில் துளசியை விலக்குவதற்கான முக்கிய காரணமாகும்.

புராணங்களின்படி, துளசி தேவி எமதர்மனின் மகள். அவள் விஷ்ணுவின் தீவிர பக்தையாக இருந்தாள். விநாயகரின் சாபத்திற்குப் பிறகு, அவள் ஒரு அசுரனை மணந்து, பின்னர் புனிதமான துளசி செடியாக மறுபிறப்பு எடுத்தாள். விஷ்ணு பூஜைக்கு துளசி இலைகள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன.

விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை, மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி போன்ற எளிமையான நைவேத்தியங்கள் மிகவும் பிடித்தமானவை. அவரை இவற்றைக் கொண்டு வழிபட்டால் மனமகிழ்ந்து அருள் புரிவார்.

Our Other Services