நம் முன்னோர்கள் போற்றி வந்த வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில எளிமையான மாற்றங்களை செய்வதன் மூலம் நேர்மறை ஆற்றலையும், அளவற்ற செல்வ செழிப்பையும் ஈர்க்க முடியும். குறிப்பாக, குறிப்பிட்ட சில வாஸ்து செடிகள் வறுமையை நீக்கி, லட்சுமி தேவியின் அருளைப் பெற்றுத் தரும் என ஜோதிடம் மற்றும் வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
லட்சுமி அருளும் வாஸ்து செடிகள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம் வீட்டின் வடக்கு திசை செல்வத்தையும் நேர்மறை ஆற்றலையும் ஈர்க்கும் ஒரு புனிதமான பகுதியாகும். இந்த திசையை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். லட்சுமி தேவியின் அருளைப் பெறவும், நிதி நெருக்கடிகளைத் தீர்க்கவும், வடக்கு திசையில் குறிப்பிட்ட சில செடிகளை வளர்ப்பது உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும் செல்வ செழிப்பையும் கொண்டு வரும்.
செல்வம் தரும் வாஸ்து தாவரங்கள்
வாழை மரம்:
உங்கள் வீட்டின் வடக்கு திசையில் வாழை மரத்தை நட்டு வளர்ப்பது விஷ்ணு மற்றும் லட்சுமி அன்னையின் அருளைப் பெற்றுத் தரும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த மரத்தை பூஜித்து, அதன் அடியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் அதிர்ஷ்டம் கிடைத்து, வாழ்வின் கஷ்டங்கள் நீங்கும்.
துளசி செடி:
துளசி வழிபாடு நம் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமானது. வீட்டின் வடக்கு திசையில் துளசி செடி வைத்து, அதற்கு நல்ல சூரிய ஒளி கிடைப்பது உறுதிசெய்து, முறையாக பராமரித்து வருவதால் வீட்டில் செல்வம் பெருகி, வேலைகள் சிறக்கும். வாட விடாமல் பாதுகாப்பது அவசியம்.
மணி பிளாண்ட்:
வீட்டில் நேர்மறை அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் வாஸ்து செடிகளில் மணி பிளாண்ட் முக்கியமானது. வடக்கு திசையில் ஒரு நீல நிற பாட்டில் அல்லது குவளையில் மணி பிளாண்ட் வைத்து வளர்க்கலாம். இது தரையை தொடாதவாறு பராமரிப்பது செல்வ செழிப்பிற்கு உகந்தது.
மூங்கில் செடி:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மூங்கில் செடியை வீட்டில் நடுவது மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வரும். வீட்டின் வடக்கு திசையில் மூங்கில் செடியை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை ஈர்த்து, எதிர்மறை சக்திகளை வீட்டிலிருந்து விலக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பொறுப்புத் துறப்பு:
இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. இவை முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. விரிவான மற்றும் கூடுதல் தகவலுக்கு, தொடர்புடைய துறையில் உள்ள நிபுணரை அணுகவும்.