கர்மவினைகள்: நம் வாழ்க்கைச் சக்கரத்தை தீர்மானிக்கும் சக்திகள்! ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்ப துன்பங்களுக்குக் காரணமாக அமையும் கர்மவினைகள் பற்றியும், அவற்றை நீக்கி ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் நம் வாழ்வை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றியும் இங்கு விரிவாகக் காணலாம். முருகன் அருளால் கர்மவினைகளின் தாக்கத்தைக் குறைத்து நிம்மதியான வாழ்வை பெற இந்த வழிகாட்டியைப் படியுங்கள்.
கர்மவினைகள் என்றால் என்ன?
கர்மவினைகள் என்பது ஒருவர் முந்தைய பிறவிகளிலும், கடந்த காலங்களிலே செய்த செயல்கள் அல்லது பாவங்களின் விளைவுகள் ஆகும். இதை வினைப்பயன் என்றும் சொல்கிறார்கள். இந்து, பெளத்தம், சமண சமயங்களில் இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கர்மவினைகளே நம்முடைய தற்போதைய வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.
கர்மவினைகள் என்பது சஞ்சித கர்மம் (முந்தைய பிறவிகளில் செய்தது), பிராரப்த கர்மம் (இந்த பிறவியில் செய்த பாவங்கள்), ஆகாம்ய கர்மம் (தற்போதைய செயல்களால் எதிர்காலத்தில் ஏற்பட போகும விளைவுகள்) என மூன்று வகையாக சொல்லப்படுகிறது. கர்மவினைகளே நம்முடைய இன்ப, துன்பங்களுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இவற்றில் இருந்து விடுபட நாம் சில தர்ம காரியங்களில் ஈடுபட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. இவற்றில் எது முடிகிறதோ அதை முடிந்தவரை சிரத்தையுடன் செய்வது சிறப்பு.
கர்மவினைகளை குறைக்கும் தர்ம காரியங்கள்
நமது கர்மவினைகளின் தீவிரத்தைக் குறைக்க, பல எளிய மற்றும் சக்திவாய்ந்த தர்ம காரியங்களை சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. இவை நமக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும். குறிப்பாக, ஜோதிட ரீதியாக தோஷங்கள் இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது சிறந்தது.
- 1. பறவைகளுக்கு நீர், தானியங்கள் வைத்தால்
- 2. நாய்களுக்கு உணவளித்தல்
- 3. மீன்களுக்கு உணவளித்தால்
- 4. குரங்குகளுக்கு உணவளித்தால்
- 5. குதிரைகளுக்கு உணவளித்தால்
- 6. யானைகளுக்கு உணவு அளித்தால்
- 7. பசுக்களுக்கு உணவளித்தால்
- 8. ஆடுகளுக்கு உணவளித்தால்
- 9. தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால்
- 10. சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தல்
- 11. கர்பஸ்திரிகளுக்கு பசிக்கு உணவு, தாகத்திற்கு தண்ணீர் அளித்தல்.
- 12. ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் உணவு அளித்தல்
- 13. கணவன் அல்லது மனைவி ஒருவருக்கொருவர் உணவு அளித்தல்
- 14. அனாதை அல்லது முதியோர் இல்லங்களுக்கு உணவு அளித்தல்
- 15. நோயளிகளுக்கு மருந்து, உணவு அளித்தல்
- 16. மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல்
- 17. திருமணம் செய்து வைத்தல்
- 18. ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.
இவைகள் எந்த அளவிற்கு கர்மவினைகளை குறைத்து நமக்கு இருக்கும் துன்பங்களை குறைக்குமோ, அதே போல் இந்த உயிரினங்களுக்கு துன்பம் விளைவித்தால் நம்முடைய கர்மவினைகள் அப்படியே 3 மடங்காக அதிகரிக்கும்.
கர்மவினைகளை நீக்கும் ஆன்மீக பரிகாரங்கள்
`ஜோதிடம்` கூறும் பல பரிகாரங்களில், ஆன்மீக ரீதியான செயல்கள் கர்மவினைகளை நீக்க மிகவும் பயனுள்ளவை. குறிப்பாக முருகன் மற்றும் பிற தெய்வங்களின் ஆலயங்களில் செய்யும் சேவைகள் நற்பலன்களைத் தரும்.
- 1. கோயிலில் சுற்றி திரியும் மயில்கள், காகம், சேவல், கோயில் யானை, கோயில் குளத்தில் உள்ள மீன்கள், கோயில் பூசாரி ஆகியோருக்கு உணவு அளிப்பதும் கர்மவினைகளை குறைக்க உதவும் செயல்கள் ஆகும்.
- 2. விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு உணவு அளிப்பது
- 3. கோயில் அன்னதானத்திற்கு உதவுதல்
- 4. அன்னதானம் அளித்தல்
- 5. கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல்
- 6. கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல்
- 7. கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு அளித்தல்
- 8. இறைவனுக்கு பூ மாலை தொடுத்து கொடுத்தல்
- 9. முன்னோர்கள் வழிபாடு
- 10. மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி கொடுப்பது
- 11. ஏழை மாணவர்கள் படிக்க உதவுவது
- 12. தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல் மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விஷயத்தையும் உணர்ந்து செய்தாலும் 99 சதவீதம் கர்மாவை கழிக்கலாம்.
மேலே குறிப்பிட்டவை அனைத்தும் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக உங்களின் முதுமை அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வப்போது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்களை நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி வாழ்வதே சிறந்தது. ஜோதிடம் குறித்த சரியான வழிகாட்டுதல்களைப் பெற jothidam360.in வலைத்தளத்தை அணுகவும். முருகன் அருள் என்றும் துணை நிற்கும்!
கர்மவினைகளை குறைக்க உதவும் முக்கிய வழிகள்
- ✓ தான தர்மங்கள்: விலங்குகளுக்கு உணவளித்தல், ஆதரவற்றோருக்கு உதவுதல்.
- ✓ குடும்ப பொறுப்புகள்: தாய் தந்தையர், சகோதர சகோதரிகளுக்கு உதவுதல்.
- ✓ சமூக சேவை: ஏழை மாணவர்களுக்கு கல்வி, நோயாளிகளுக்கு மருந்து, திருமணம் செய்து வைத்தல்.
- ✓ ஆன்மீக ஈடுபாடு: கோயில் அன்னதானம், கட்டுமானப் பணிக்கு உதவுதல், முன்னோர்கள் வழிபாடு, முருகன் ஆலயங்களில் சேவை.
- ✓ இறை உணர்வு: தெய்வங்களை அறிதல், புராணங்களை படித்தல், கும்பாபிஷேகங்களில் பங்கேற்றல்.