ஜோதிட சாஸ்திரத்தின்படி, நமது கர்ம பலன்களுக்கு ஏற்ப நவகிரகங்களின் அமைப்பும், அதன் மூலம் ஏற்படும் பலன்களும் அமைகின்றன. சில கிரக தோஷங்களில் இருந்து விடுபட விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வழங்குவதன் மூலம் தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மன அமைதியையும், செல்வ செழிப்பையும் தரும்.
விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவளிப்பதன் பொதுவான நன்மைகள்
சிட்டுக்குருவி, எறும்புகள், காகம், அணில், புறா, கிளி போன்ற பறவைகளுக்கும், நாய், மாடு, மீன் போன்ற விலங்குகளுக்கும் தொடர்ந்து உணவளிப்பதன் மூலம் நம்முடைய மன அமைதி, திருப்தி அதிகரிக்கும். மேலும், நம்முடைய கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். வீட்டில் யாருக்கேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பின் அதன் தீவிரம் குறையும். இது ஜோதிடத்தில் மிக முக்கிய பரிகாரமாக கருதப்படுகிறது.
நவகிரக தோஷ நிவர்த்திக்குரிய பரிகாரங்கள்
சூரிய தோஷம் தீர
ஒருவரின் ஜாதகத்தில் சூரியனின் அமைப்பானது சாதகமில்லாமல் இருப்பின், அந்த நபர் கோதுமை, நெய் அல்லது சமைத்த உணவுகளை ஏழை எளியவர்களுக்குக் கொடுக்கலாம். கோதுமையை விலங்குகளுக்கு அளிக்கலாம். மேலும், சூரிய பகவானை வழிபாடு செய்வதால் தோஷங்கள் நீங்கி, சூரியனின் நல்லருளைப் பெற்றிடலாம்.
சந்திர தோஷத்தை போக்க
நவகிரகங்களில் சந்திரன் ஏற்படக்கூடிய தோஷத்தை நிவர்த்தி செய்ய ஏழைகளுக்கு அரிசி அல்லது தண்ணீர் தானம் கொடுப்பது நன்மை தரும். அதோடு மன அழுத்தம் குறையும். சந்திர தரிசனத்தன்று வழிபாடு செய்வதும், சந்திர மந்திரத்தை உச்சரிப்பதும் மன அமைதியைப் பெற உதவும். இது ஜோதிடத்தில் சிறந்த பரிகாரம்.
செவ்வாய் தோஷத்தை நீக்க
மங்களன், அங்காரகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவான் தோஷம் ஜாதகத்தில் இருப்பின், சிவப்பு நிற பசுவிற்கு வெல்லம் கொடுப்பது சிறந்த தீர்வாக இருக்கும். மேலும், நண்பர்கள், சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறலாம்.
புதன் பகவானின் தோஷம் தீர
நவகிரகங்களின் இளவரசனாகிய புதன் பகவானின் தோஷம் தீர்ந்து, அவரின் நல்ல அருளைப் பெற்றிட பச்சை பயிறு தானம் செய்வதும், கால்நடைகளுக்கு அறுகம்புல், அகத்திக்கீரை கொடுப்பதும் நன்மை தரும். சிவ வழிபாடு செய்து அவித்த பச்சை பயிறு பிரசாதமாக கொடுப்பதும் சிறந்த பரிகாரமாகும்.
குரு தோஷம் நீங்க
மங்களங்களைத் தரக்கூடிய குரு பகவானின் நல்லருளைப் பெற்றிட பசுவிற்குக் கொண்டைக்கடலை கொடுப்பது நன்மை தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைப்பேறு கிடைக்கவும், பிள்ளைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணவும் இது உதவும். குரு தோஷ நிவர்த்திக்கு இது முக்கியம்.
சுக்கிர தோஷத்தை போக்க
பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு சோளத்தை உணவாக கொடுப்பதன் மூலம் சுக்கிர கிரகத்தின் தோஷங்கள் குறையும். மேலும், சுக்கிர பகவானை அனைவரும் வழிபாடு செய்ய உங்களின் அழகு, வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கையில் ஆடம்பரமும், செல்வ செழிப்பும் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
சனி தோஷம் நீங்க
பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உளுந்து அல்லது கடுகு எண்ணெய் கலந்த உணவை கொடுப்பதன் மூலம் சனி தோஷம் குறையும். சனி பகவானால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் பிரச்சனைகள் நீங்கும். இது ஒரு சிறந்த சனி பரிகாரம்.
ராகு தோஷம் நீங்க
கர்ப்ப கிரகமான ராகு பகவானின் தோஷம் குறைய, பறவைகளுக்கும், விலங்குகளுக்கு ராகியால் செய்த உணவை அளிப்பது நன்மை தரும். குறிப்பாக காகம் மற்றும் நாய்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் சனி, ராகு தோஷம் நீங்கும். ராகு தோஷ நிவர்த்திக்கு இது சிறந்தது.
கேது தோஷம் நீங்க
ஏழு வகையான தானியங்களான நவதானியங்களால் செய்யப்பட்ட மாவு உருண்டையை மீன்களுக்கு கொடுக்க கேது தோஷம் நீங்கும். மேலும், கேதுவின் மூலம் நேர்மறையான தாக்கத்தைப் பெறலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் பழைய சொத்துக்கள் திரும்ப கிடைப்பதோடு, உங்களின் வருவாய் அதிகரிக்கும். அதன் மூலம் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த மாவை மீன்களுக்கு உணவாக அளிப்பதால் பிரச்சனைகள் குறைவதோடு, வீட்டில் மங்களகரமான சூழல் உண்டாகும்.