ஆடிப்பெருக்கு விழா இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. ஆறுகளுக்கும் நீர்நிலைகளுக்கும் நன்றி செலுத்தும் இந்த திருநாளானது, வெறும் இயற்கைப் பெருக்கின் குறியீடு மட்டுமல்ல; அதற்குப் பின்னால் மகாபாரதத்துடன் தொடர்புடைய ஒரு ஆழமான புராணக் கதையும் உண்டு. இந்த ஆடிப்பெருக்கு நாளில், ஜோதிடம் மற்றும் ஆன்மிகத்தின் பார்வையில் அதன் முக்கியத்துவத்தை ஆராய்வோம்.
ஆடிப்பெருக்கு என்றால் என்ன?
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். நதியை பெண்ணாக வணங்கும் நாள். நதிகளுக்கு அல்லது நீர் நிலைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக ஆடிப்பெருக்க விழா கொண்டாடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 03ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.
ஆனால் ஆடிப்பெருக்கு கொண்டாடும் வழக்கம் எப்படி தோன்றியது என்பதை தெரிந்து கொள்ளலாம். புராணங்களில் கூறப்படும் ஆடி 18 என்பது மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்ஷேத்திரப் போரின் இறுதி நாளான 18 வது நாளை குறிக்கிறது.
குருச்ஷேத்திரப் போரின் 18 நாட்கள்: ஆடி 18 உடன் தொடர்பு
குருச்ஷேத்திரப் போரின் முதல் நாள், பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும், பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப்பட்டனர். பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, பீஷ்மரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது. பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப் போர்க் களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணர் ஆலோசனை கூறினார். கிருஷ்ணரின் ஆலோசனையின் படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்க்களத்திற்கு அனுப்பினர். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அர்ஜூனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப்படுக்கையில் கிடத்தினான்.
இப்படி தொடர்ந்து 15 நாள் போர் நடக்க ஒவ்வொருவராக போரில் இறந்து கொண்டே வந்தனர். 16ஆம் நாள் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான். கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார். கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பாண்டவப் படைகளைக் கொன்றான். அர்ஜூனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான். கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தன் தாய் குந்திக்கு வழங்கிய வரத்தின்படி, கொல்லாமல் விட்டு விட்டான்.
ஆயிரக்கணக்கான பாண்டவப் படைகளை த் தனது கூரிய அம்புகளால் கொன்று, பின் அர்ஜூனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான். ஒரு நேரத்தில், கர்ணன் அர்ஜூனனை கொல்ல, அர்ஜூனனின் கழுத்துக்கு குறி வைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அர்ஜூனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அர்ஜூனனின் தேர் பூமிக்குக்கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அர்ஜூனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தை தாக்கியதால், அர்ஜூனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர் தந்திரத்தால் அர்ஜூனன் உயிர் பிழைத்தான்.
குருச்ஷேத்திரப் போரின் இறுதியில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனின் மீது அம்புகள் ஏவச் சொன்னார். இந்திரன், கர்ணனின் கவச குண்டலங்களை தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணனின் மீது செலுத்தப்பட்ட அர்ஜூனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்ட இந்த நாள் தான் பதினெட்டாம் போர் என்று அழைக்கப்படும் ஆடி 18 ஆம் நாளாகும்.
ஆடிப்பெருக்கு மற்றும் மகாபாரதத்தின் முக்கிய அம்சங்கள்
- ஆடிப்பெருக்கு: ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை கொண்டாடும் விழா, நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் நாள்.
- பதினெட்டாம் பெருக்கு: இந்த நாளில் தான் மகாபாரத குருக்ஷேத்திரப் போர் முடிவுக்கு வந்து, தர்மம் நிலைநாட்டப்பட்டது.
- கிருஷ்ணரின் தந்திரம்: அர்ஜூனன் மற்றும் பாண்டவர்களை காக்க பகவான் கிருஷ்ணர் பல்வேறு தந்திரங்களை கையாண்டார்.
- தர்மத்தின் வெற்றி: அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய நாளாக ஆடி 18 விளங்குகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் பெருகி வருவதைக் கொண்டாடும் ஒரு பாரம்பரியத் திருவிழாவாகும். இது இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளாகவும், வளமையின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.
மகாபாரதத்தில் நடந்த குருக்ஷேத்திரப் போரின் இறுதி நாளான 18வது நாளில் அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் நிலைநாட்டப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளுக்கும், ஆடிப்பெருக்கு விழாவுக்கும் இடையே ஒரு ஆன்மீகத் தொடர்பு இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன, அதனாலேயே இது பதினெட்டாம் பெருக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
ஆடிப்பெருக்கு விழா நீர்நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும், வளமான வாழ்வு வேண்டி இறைவனை வழிபடும் நாளாகவும் திகழ்கிறது. மகாபாரதத் தொடர்பின் மூலம் தர்மத்தின் வெற்றியையும், கிருஷ்ணரின் லீலைகளையும் நினைவூட்டுகிறது.