இந்து மதத்தின் புனிதமான விரதங்களில் ஒன்றான அபரா ஏகாதசி, விஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த நாளாகும். 2025 ஆம் ஆண்டில் வரும் இந்த ஏகாதசி விரதம், பல ஜென்ம பாவங்களை நீக்கி, மன அமைதியையும், செல்வத்தையும் தரவல்லது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த ஜோதிட ரீதியான புனித நாளில் விரதம் மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும் அதன் பலன்களையும் இங்கு காணலாம்.
அபரா ஏகாதசி விரதத்தின் சிறப்பு
இந்து மத சாஸ்திரங்களின் படி, மற்ற விரதங்களை விட, ஏகாதசி விரதம் மிகவும் புண்ணியம் தரும் விரதம் என சொல்லப்படுகிறது. சில சமயங்களில் ஏகாதசி விரதத்தை இரண்டு நாள் தொடர்ந்து இருக்க வேண்டும் என சொல்வார்கள். குடும்பத்தோடு இருப்பவர்கள் முதல் நாள் விரதம் இருக்கலாம். சன்யாசிகள், விதவைகள், மோட்சம் வேண்டும் என நினைப்பவர்கள் இரண்டாவது நாள் விரதம் இருக்கலாம்.
ஜேஷ்ட மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு அபரா ஏகாதசி என்று பெயர். இந்த நாளில் விஷ்ணுவை வழிபட்டு விரதம் இருப்பார்கள். அபரா ஏகாதசி விரதம் இருந்தால் அனைத்து பாவமும் போய் விடும் என சொல்லப்படுகிறது. கடந்த பிறவியில் செய்த பாவங்களில் இருந்த விடுபட நினைப்பவர்கள் இந்த ஏகாதசி விரதத்தை பக்தியோட இருக்கலாம். இந்த விரதம் இருந்தால் நல்ல குணம், சந்தோஷம், செல்வம் அனைத்தும் கிடைக்கும்.
இந்த வருஷம் அபரா ஏகாதசி மே 23ஆம் தேதி இரவு 08.59 மணிக்கு துவங்கி, மே 23ஆம் தேதி மாலை 06.44 மணிக்கு ஏகாதசி திதி நிறைவடைகிறது. இந்த நாளில் புத ஆதித்ய ராஜ யோகமும் உண்டாகிறது. அதனால் இந்த பூஜைக்கு இன்னும் சக்தி கிடைக்கும். இந்த அரிய ஜோதிட சேர்க்கை விரதத்தின் பலனை அதிகரிக்கும்.
ஏகாதசி விரத விதிகள்
- தசமி அன்று: ஏகாதசிக்கு முந்தைய நாள் (தசமி) சாத்வீக சாப்பாடு சாப்பிட வேண்டும். பிரம்மச்சரியம் கடைபிடிக்கணும். பகலில் தூங்காமல், கெட்ட எண்ணங்கள் இல்லாமல் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- விரத நிறைவு: அடுத்த நாள் பிராமணர்களுக்கோ அல்லது ஏழைகளுக்கோ தானம் கொடுத்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
- பலன்: பிரம்மஹத்தி தோஷம் கூட இந்த ஏகாதசி விரதம் இருந்தால் போய் விடும் என பகவான் கிருஷ்ணரே தெரிவித்துள்ளார். பல ஜென்ம பாவங்களையும் போக்கக் கூடியதாகும். செல்வத்தை கொடுக்கும். இது ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்த விரதமாகும்.
ஏகாதசி விரத முறை
- அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, சூரியனுக்கு தண்ணீர் படைக்க வேண்டும்.
- விநாயகரை வணங்கி, பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
- பிறகு விஷ்ணுவையும், லட்சுமியையும் வணங்க வேண்டும்.
- தெற்கு திசை பார்த்து சங்கில் அபிஷேகம் செய்ய வேண்டும்.
- மலர்களால் அலங்கரித்து, வெண்ணெய், சர்க்கரை, இனிப்பு, துளசி இலைகளை படைத்து வழிபட வேண்டும்.
- ஊதுபத்தி, தீபம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும்.
- "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" மந்திரத்தை சொல்ல வேண்டும்.
- அன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பழம், பால், ஜூஸ் குடிக்கலாம்.
- மாலையில் ஏகாதசி கதையை படிக்கவோ, கேட்கவோ சொய்ய வேண்டும்.
- அடுத்த நாள் காலையில் விஷ்ணுவை கும்பிட்டு, ஏழைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.