Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

ராசி வாரியாக உறவு வலுப்படுத்த ஜோதிட பரிகாரங்கள்

உங்கள் திருமண உறவில் சண்டைகளும், சச்சரவுகளும் ஏற்படுகின்றனவா? கிரக நிலைகளும், ஜோதிடமும் உறவுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு ராசிக்கும் உரிய தனிப்பட்ட பரிகாரங்களைச் செய்வதன் மூலம் உங்கள் உறவை வலுப்படுத்தலாம். தமிழ் கலாச்சாரத்தில், முருகன் போன்ற தெய்வங்களின் அருள் பெறுவதும், ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் ஆலயங்களுக்குச் செல்வதும் பெரும் பலன்களை அளிக்கும்.

ஜோதிட பரிகாரங்களின் முக்கியத்துவம்

ஜோதிட நிபுணர்கள் கருத்துப்படி, நாம் செய்யும் பரிகாரங்கள் நம் கிரக நிலை மாற்றங்கள் மற்றும் கிரகங்கள் தரும் பலனை மாற்றியமைக்கும். திருமண வாழ்க்கையில் உண்டாகும் வாக்குவாதங்கள், சண்டை - சச்சரவுகளை தீர்க்க எந்த மாதிரியான பரிகாரங்கள் உதவும், ஒவ்வொரு ராசியினரும் முயற்சிக்க வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.

மேஷம் (செவ்வாய்)

நவகிரகங்களில் சிவப்பு கிரகமாக கருதப்படும் செவ்வாய் கிரகத்தை ஆளும் கிரகமாக கொண்டவர்கள் மேஷம் ராசியினர். தங்கள் ராசியை ஆளும் கிரகத்தை போன்று, முன் கோபம் அதிகம் கொண்ட ஒரு நபராக இவர்கள் இருப்பது உண்டு. மேஷ ராசியினரின் இந்த முன் கோபம், மண வாழ்க்கையில் மனஸ்தாபங்களை கொண்டு வரலாம். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, வாரம் தோறும் செவ்வாய், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவில் சென்று வழிபாடு செய்யலாம்!

ரிஷபம் (சுக்கிரன்)

சுக்கிரனை ஆளும் கிரகமாக கொண்ட ரிஷப ராசியினர், பெரும்பாலும் தங்கள் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறவர்கள். இதன் விளைவாக உறவில் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, விஷ்ணு பகவானுக்கு பூஜை செய்து வரலாம்.

மிதுனம் (புதன்)

அறிவாற்றலுக்கு பெயர் பெற்ற புதன் கிரகத்தை ஆளும் கிரகமாக கொண்ட மிதுன ராசியினர்; பன்முக சிந்தனை கொண்டவராக இருப்பினும், தங்கள் விருப்பம் போல் அனைத்தும் நடைபெற வேண்டும் என குறுகிய எண்ணம் கொண்டவராகவும் சில சமயங்களில் நடந்துக் கொள்கின்றனர். மிதுன ராசியினரின் இந்த குணம் உறவில் பிரச்சனைகளை கொண்டுவரக்கூடும். இதனை தவிர்க்க, வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு பூஜை செய்து வரலாம்.

கடகம் (சந்திரன்)

சந்திரனை ஆளும் கிரகமாக கொண்ட கடக ராசியினர், நொடிக்கு நொடி தனது விருப்பங்களை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டுள்ளனர். இவர்களின் இந்த விசித்திர பழக்கம், உறவில் பிரச்சனைகளை உண்டாக்கலாம். குடும்ப உறவில் உண்டாகும் இந்த பிரச்சனைகளை தவிர்க்க, விஷ்ணு பகவானுக்கு பால் பாயாசம் படைத்து பூஜை செய்து வரலாம்!

சிம்மம் (சூரியன்)

நவகிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரியனை ஆளும் கிரகமாக கொண்ட சிம்ம ராசியினர், உறவில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள். சிம்ம ராசியினரின் ஆளுமை பண்பு உறவில் வாக்குவாதங்களை கொண்டு வருகிறது, இதனை தவிர்க்க தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரலாம். சிம்ம ராசி கொண்ட பெண்கள், வியாழக்கிழமை விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

கன்னி (புதன்)

புதன் கிரகத்தை ஆளும் கிரகமாக கொண்ட கன்னி ராசியினர், எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்து செயல்படுத்தக் கூடியவர்கள். செய்யும் காரியங்களில் கன்னி ராசியினர் காட்டும் நிதானம், மண வாழ்க்கையில் மனஸ்தாபங்களுக்கு காரணமாகிறது. இதனை தவிர்க்க, பசுவிற்கு பசுமையான புல்லை உணவாக அளித்து வரலாம்.

துலாம் (சுக்கிரன்)

சுக்கிரனை ஆளும் கிரகமாக கொண்ட ராசி துலாம் ராசி. அழகு, ஆடம்பரம், பெயர், புகழுக்கு அதிகம் மதிப்பு அளிக்கும் இவர்களின் பண்பு, மண வாழ்க்கையில் சில மனஸ்தாபங்களை கொண்டு வருகிறது. உறவில் உண்டாகும் பிரச்சனைகளை தவிர்க்க துலாம் ராசியினர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று விஷ்ணு கோவிலுக்கு சென்று பூஜை செய்து வரலாம்.

விருச்சிகம் (செவ்வாய்)

செவ்வாய் கிரகத்தை அதிபதியாக கொண்ட ராசி விருச்சிக ராசி. இயற்கைக்கு மாற்றான விருப்பங்களில் அதிகம் ஆர்வம் செலுத்த கூடியவர்கள், இவர்களின் விருப்பம் உறவுக்குள் பிரச்சனைகளை கொண்டு வரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். விருச்சிக ராசியினரின் காதல் , மண வாழ்க்கையில் உண்டாகும் பிரச்சனைகளை தவிர்க்க, செவ்வாய் தோறும் லட்சுமி தேவியை பூஜித்து வரலாம்!

தனுசு (குரு)

குரு பகவானை ஆளும் கிரகமாக கொண்ட தனுசு ராசி, தங்கள் திருமண வாழ்க்கையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரச்சனைகளை சந்திக்கலாம். இந்த பிரச்சனைகளை சமாளிக்க, பருப்பு மற்றும் வெல்லம் கொண்டு தயார் செய்யப்படும் இனிப்பு பிரசாதத்தை பசுவிற்கு ஊட்டலாம். இதனுடன், வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் குரு பகவானுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்து வாருங்கள்!

மகரம் (சனி)

சனி கிரகத்தை அதிபதியாக கொண்ட மகர ராசி நண்பர்கள், தங்கள் ராசியை ஆளும் கிரகத்தின் பெயரால் அடிக்கடி தங்கள் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, சனிக்கிழமைகளில் நவகிரக கோவிலுக்கு சென்று கடுகு எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்!

கும்பம் (சனி)

மற்ற ராசியினருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சனை என்றால், கும்ப ராசியினருக்கு திருமணம் நடப்பதே பிரச்சனையாக இருக்கும். சனி பகவானை அதிபதியாக கொண்ட இந்த கும்ப ராசியினர், திருமணத்தை முடிப்பதில் பெரும் சிக்கல்களை சந்திப்பார்கள். திருமணத்திற்கு பின், கருத்து வேறுபாடுகளால் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடுவார்கள். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, அரச மரத்துடன் இணைந்து வளர்க்கப்பட்ட வேப்ப மரத்தை 7 முறை சுற்றி குளத்தில் தலை முழுக வேண்டும். மாதம்தோறும் 2-ஆம் சனி அன்று இவ்வாறு செய்ய திருமண தடை நீங்கும், திருமண உறவில் காணப்படும் மனஸ்தாபங்களும் மறையும்.

மீனம் (குரு)

குரு பகவானை ஆளும் கிரகமாக கொண்ட மீன ராசியினர், தங்கள் பிடிவாத குணத்திற்கு பெயர் பெற்றவர்கள். தங்கள் பிடிவாத குணத்தின் காரணமாக காதல், திருமண வாழ்க்கையிலும் எண்ணற்ற பிரச்சனைகளை இவர்கள் சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, வாரம் தோறும் வியாழன் அன்று குரு பகவானை நினைத்து "ஓம் கிராம் க்ரீம் கிராம் சஹ குருவே நமஹ்" எனும் மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள்!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒவ்வொரு ராசிக்கும் தனிப்பட்ட பரிகாரங்கள் உள்ளன. கிரக நிலைக்கு ஏற்ப ஆஞ்சநேயர், விஷ்ணு, குரு பகவான் போன்ற தெய்வங்களை வழிபடலாம். குறிப்பிட்ட கிழமைகளில் விரதம் இருப்பதும், ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதும் சிறந்த பலன்களைத் தரும்.

மேஷ ராசியினர் தங்கள் முன் கோபத்தைக் கட்டுப்படுத்த, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவில் சென்று வழிபாடு செய்யலாம். இது உறவில் மனஸ்தாபங்களைக் குறைக்க உதவும்.

கும்ப ராசியினர் திருமண தடை நீங்க, அரச மரத்துடன் இணைந்து வளர்க்கப்பட்ட வேப்ப மரத்தை 7 முறை சுற்றி குளத்தில் தலை முழுக வேண்டும். மாதம்தோறும் 2-ஆம் சனி அன்று இதைச் செய்ய திருமண தடை நீங்கும் மற்றும் உறவில் உள்ள மனஸ்தாபங்களும் மறையும்.

Our Other Services