முருகப் பெருமான் கருணையின் சிகரம் என்று பக்தர்கள் போற்றுவதுண்டு. குறிப்பாக திருச்செந்தூரில், அவரை 'கருணைக் கடல்' என சிறப்பித்து அழைப்பதன் பின்னணியில் ஒரு வரலாற்று ரகசியம் ஒளிந்துள்ளது. முருகன் தனது எதிரிக்கும் கூட அருள்புரிந்த இணையற்ற அன்பை இக்கட்டுரையில் காண்போம்.
திருச்செந்தூர்: கருணையின் திருத்தலம்
முருகப் பெருமானை கருணைக் கடல் என சொல்லுவது உண்டு. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு முன்பு, கடலுக்கு அருகிலேயே இந்த வாசகம் அனைவரின் கண்ணிலும் படும் படி எழுதி வைத்திருப்பார்கள். அனைவருக்கும் முருகப் பெருமான் தன்னுடைய அருளை பாரபட்சமின்றி வாரி வழங்கக் கூடியவர் தான். இருந்தாலும் திருச்செந்தூர் கோவிலில் மட்டும் ஏன் இந்த வாசகத்தை பெரியதாக எழுதி வைத்துள்ளார்கள் என்பதற்கு இந்த தலத்தில் வரலாறே காரணமாக சொல்லப்படுகிறது.
சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொரியில் இருந்து தோன்றியவர் தான் முருகப் பெருமான். அவரின் அவதார நோக்கமே சூரபத்மனை வதம் செய்து, தேவர்களை காப்பது தான். அந்த நோக்கம் நிறைவேறிய தலம், திருச்செந்தூர். சூரபத்மனையும் அவனது படைகளையும் முருகப் பெருமான் வதம் செய்ததை குறிப்பதற்காகவே தற்போது வரை சூரசம்ஹார நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முருகன் ஆலயங்கள், குறிப்பாக திருச்செந்தூர், அவரது கருணைக்கு சான்றாக விளங்குகின்றன.
அனைத்து தெய்வங்களுமே தீமையின் வடிவமாக விளங்கிய அசுரர்களை, அவர்களுடன் போரிட்டு அழித்ததாக தான் புராண கதைகள் சொல்கின்றன. ஆனால் மற்ற தெய்வங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானவர் முருகப் பெருமான். சிவனின் அம்சமாக தோன்றிய அவர், பராசக்தியின் மொத்த சக்தியும் திரட்டிய வேலை ஆயுதமாக உடன் வைத்திருந்தும் போர்களத்திற்கு சென்றதும் சூரனை கொல்லவில்லை. எதிரியாக இருந்த போதிலும் அவனும் திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, முதலில் வீரபாகு தேவரை சூரனிடம் தூதாக அனுப்பி, சமாதானம் பேசினார்.
இருந்தும் சூரன் அதை மதிக்காமல், ஆணவத்துடன் தொடர்ந்து முருகப் பெருமானுடன் போரிட்டான். வந்திருப்பது தனக்கு வரமளித்த ஈசனின் மகன் என்பதை அறிந்தும் சூரன் போரிட்டான். அப்போதும் அவனது ஆணவத்தை அடக்க வேண்டும் என்று தான் முருகப் பெருமான் நினைத்தார். இறுதியாக கடலுக்கு நடுவே மாமரமாக உருமாறிய சூரபத்மனை அழித்து கொல்லவில்லை. மாறாக அந்த மாமரத்தை தனது வேலால் இரண்டு கூறுகளாக பிளந்து, ஒரு பாதியை மயிலாக மாற்றி தன்னுடைய வாகனமாக ஏற்றுக் கொண்டார். மற்றொரு பாதியை சேவற்கொடியாக மாற்றி தன்னுடைய வைத்துக் கொண்டார்.
தன்னை அழிப்பதற்காக தன்னுடன் போரிட்ட எதிரியான சூரனைக் கூட கொல்லாமல், அனைவரும் வணங்கும் படியான உயர்ந்த இடத்தை கொடுத்து, தன்னுடைய வைத்துக் கொண்ட கருணை மனம் கொண்டவர் முருகப் பெருமான். அதனால் சூரனை முருகன் வதம் செய்தார் என்பதே தவறானது. சூரனை ஆட்கொண்டார் என்பதே சரியானதாகும். எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் தீய குணங்களை அழித்து, அவர்களையும் தன்னுடைய பக்தனாக மாற்றி, அவர்களுக்கும் அருள் செய்யக் கூடிய கருணைக் கடலாக விளங்குபவர் முருகப் பெருமான். ஜோதிடம் கூறும் மனித வாழ்வின் கர்ம வினைகளையும், முருகனின் கருணையால் மாற்ற முடியும் என்பதை இது உணர்த்துகிறது.
முருகன் தன்னுடைய கருணை எப்படிப்பட்டது என உணர்த்திய தலமும் திருச்செந்தூர் தான். கொடிய சூரனுக்கும் கூட கருணையை அளவில்லாத அளித்த கருணை கடல் என்பதால் தான் முருகனை, கருணை கடலே கந்தா போற்றி என போற்றி வழிபடுகிறோம். அவரது புகழைப் பாடும் பல தமிழ் பாடல்களும் இந்த கருணையை போற்றுகின்றன.
முருகனின் கருணைக்கு சான்றுகள்
- தூது அனுப்பியது: சூரனை அழிக்காமல், முதலில் வீரபாகு தேவரை சமாதானம் பேச தூதனுப்பினார்.
- உருமாற்றம்: சூரனை மாமரமாக மாற்றியதும் அழிக்காமல், அதை தனது வாகனமாகவும், கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.
- ஆட்கொண்ட கருணை: எதிரியையும் தனது பக்தனாக மாற்றி, உயர்ந்த இடத்தை அளித்தவர்.
- திருச்செந்தூர் சிறப்பு: முருகனின் இக்கருணை வெளிப்பட்ட திருத்தலம். இது ஆறுபடை வீடுகள் ஒன்றான திருச்செந்தூர் சிறப்பு.