Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

விநாயகர் சிலை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

விநாயகப் பெருமானை வீட்டிற்கு அழைத்து, பூஜை செய்து வழிபட்டு, அவரது அருளை பரிபூரணமாக பெறுவதற்கு ஏற்ற நாளான விநாயகர் சதுர்த்தி விழா விரைவில் வருகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் துவக்கமாக, புதிதாக செய்யப்பட்ட மண் பிள்ளையார் சிலைகளை வீட்டிற்கு வாங்கி வந்து வழிபடுவது வழக்கம். ஆனால், விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு முன் சில முக்கிய விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த கட்டுரை உங்களுக்கு சரியான விநாயகர் சிலையை தேர்வு செய்ய உதவும்.

விநாயகர் சதுர்த்தி சிறப்பு மற்றும் வழிபாட்டு பலன்கள்

விநாயகரின் ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு வகையான பலனை தரக்கூடியது என்பதால், விநாயகர் சதுர்த்திக்கு வாங்கி வந்து வழிபட ஏற்ற வடிவம் எது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். விநாயகர் பல வடிவங்களில் அருள் புரியக் கூடியவர். இந்த உருவங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சிறப்புகளும், பலன்களும் உண்டு. எந்த மாதிரி உருவ அமைப்பு கொண்ட பிள்ளையார் சிலையை வீட்டில் வாங்கி வைத்து, விநாயகர் சதுர்த்தி அன்று வழிபட்டால் இந்த ஆண்டு முழுவதும் நம்முடைய வீட்டிற்கு அதிர்ஷ்டம், நேர்மறை ஆற்றல், செல்வ வளம் ஆகியவை நிறைந்து இருக்க செய்ய முடியும் என்பதை இங்கு காண்போம்.

இதனால், பிள்ளையார் சிலை வாங்கும் போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான 5 விஷயங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிள்ளையார் சிலை வாங்கும் போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்

  • 1. விநாயகரின் துதிக்கை அமைப்பு

    வீட்டில் வைத்து வழிபட நீங்கள் வாங்கும் பிள்ளையார் சிலையில் விநாயகரின் துதிக்கை இடது பக்கமாக திரும்பி உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். இடது பக்கம் துதிக்கையை திருப்பி இருக்கும் விநாயகருக்கு வக்ரதுண்ட விநாயகர் என்று பெயர். விநாயகரின் இந்த வடிவம் மிகவும் மங்களகரமானது என்றும், வழிபடுவதற்கு ஏற்ற மிக சரியான வடிவம் என்றும் சொல்லப்படுகிறது. வக்ரதுண்ட விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடுவதால் நிறைவான செல்வ வளம், அமைதி, குடும்ப ஒற்றுமை, வெற்றி ஆகியவற்றை வீட்டில் ஈர்க்கும். வலது பக்கம் துதிக்கை திருப்பி இருக்கும் விநாயகர் வடிவம் மிக மிக சிறப்பு வாய்ந்தது தான். ஆனால் அவற்றை பொது இடங்களிலும், கோவில்களிலும் மட்டுமே வைத்து வழிபட வேண்டும். இது மிகவும் சக்தி கொண்ட, வலிமையான வடிவமாக சொல்லப்படுகிறது.

  • 2. சரியான நிறத் தேர்வு

    பிள்ளையார் சிலையின் நிறத்தை தேர்வு செய்வதும் மிக முக்கியம். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய நிறத்தில் இருக்கும் விநாயகர் சிலைகளை வீட்டிற்கு வாங்கி வந்து வைத்து வழிபடுவது மிக மிக மங்களகரமானதாகும். இது போன்ற மங்களகரமான, நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தும் விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபடுவது நல்லது. இந்த நிறங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டம், செல்வ வளம், ஞானம், நிறைவான செல்வம் ஆகியவற்றை வீட்டிற்கு அழைத்து வரும் தன்மை கொண்டதாக நம்பப்படுகிறது.

  • 3. வாகனத்தின் இருப்பு (மூஷிகம்)

    இந்து புராணங்களின் படி, விநாயகரின் வாகனமாக மூஷிகம் அல்லது சுண்டெலி கருதப்படுகிறது. ஒருவருக்கு ஏற்படும் ஆணவம் மற்றும் ஆசைகளை அடக்கி கட்டுக்குள் வைப்பதன் அடையாளமாக மூஷிகம் கருதப்படுகிறது. அதாவது ஆணவம், ஆசைகளை அடக்கி, நம்மை சரியான பாதையில் அழைத்துச் செல்பவராக விநாயகர் விளங்குவதாக குறிப்பதே இந்த வாகனம். அதனால் விநாயகரின் வாகனத்தை வீட்டிற்கு எழுந்தருளச் செய்து வழிபடுவது அவசியம். எனவே மூஷிக வாகனத்துடன் இருக்கும் விநாயகர் உருவ சிலையை வாங்கி வந்து வைத்து வழிபடுவது அளவில்லாத நன்மைகளை தரும்.

  • 4. விநாயகரின் கைகளில் பிரசாதம்

    வாழ்க்கைக்கு தேவையான செல்வ வளங்கள், வெற்றி, பலம் ஆகியவற்றை ஈர்க்கவும், விநாயகரின் அருளை பெறவும், விநாயகர் தன்னுடைய கைகளில் பிரசாதத்தை (மோதகம், லட்டு) வைத்திருப்பது போன்ற உருவ சிலையை வீட்டில் வாங்கி வந்து வைத்து வழிபட வேண்டும். இது வெற்றியை மட்டுமின்றி, வாழ்விற்கும், குடும்பத்திற்கும் தேவையான அனைத்து நலன்களையும் நிறைவாக கொடுத்து அருள்வார்கள் என்பது நம்பிக்கை. மோதகம், லட்டு போன்றவை விநாயகருக்கு விருப்பமானவை. இவற்றை கைகளில் வைத்திருக்கும் விநாயகர் உருவம், நம்முடைய வாழ்க்கையிலும் இனிமை சேர்க்கும் என நம்பப்படுகிறது.

  • 5. விநாயகரின் அமைந்திருக்கும் நிலை

    பல வகையான உருவங்களில் இருக்கும் விநாயகர் சிலைகள் கடைகளில் விற்கப்படுகிறது. மொபைல் பேசுவது போல், கம்ப்யூட்டர் இயக்குவது போல், கிரிக்கெட் விளையாடுவது போல், நடனம் ஆடுவது போல் என பல விநாயகர் உருவங்களை உருவாக்குகிறார்கள். ஆனால் சரியான விநாயகர் வடிவத்தை தேர்வு செய்து வழிபட்டால் மட்டுமே நம்முடைய விருப்பங்கள் நிறைவேறும். பொதுவாக அமர்ந்த நிலையில் இருக்கும் விநாயகர் சிலையை மட்டுமே வாங்கி வழிபட வேண்டும். விநாயகர் அமர்ந்த நிலையில் இருக்கும் வடிவத்திற்கு சுகாசனம் என்று பெயர். இது அமைதி, தூய்மை, மகிழ்ச்சி ஆகியவற்றை குறிக்கும் அமைப்பாகும். இந்த உருவத்தை வழிபடுவது மிகவும் சிறப்பானது. அதே போல் நடன கோலத்தில் இருக்கும் வர்த்தன விநாயகர் வடிவத்தையும் வாங்கி வைத்து வழிபடலாம். இவர் மகிழ்ச்சி, வலிமையின் வடிவமாக கருதப்படுகிறார்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

இடது பக்கமாக துதிக்கையை திருப்பி இருக்கும் வக்ரதுண்ட விநாயகர் வடிவம் வீட்டிற்கு மிகவும் மங்களகரமானது மற்றும் வழிபடுவதற்கு ஏற்றது. இது செல்வ வளத்தையும் அமைதியையும் ஈர்க்கும்.

சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும் விநாயகர் சிலைகளை வாங்கி வழிபடுவது நல்லது. இந்த நிறங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டம், செல்வ வளம் மற்றும் ஞானத்தை கொண்டு வரும்.

மூஷிக வாகனம் உடன் இருக்கும் சிலை, கைகளில் பிரசாதம் (மோதகம், லட்டு) வைத்திருக்கும் சிலை, மற்றும் பொதுவாக அமர்ந்த நிலையில் (சுகாசனம்) அல்லது நடன கோலத்தில் (வர்த்தன விநாயகர்) இருக்கும் விநாயகர் சிலைகளை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது.

Our Other Services