உடலில் இரத்த ஓட்டம் சரியாக இல்லாததற்கான காரணங்கள் மற்றும் அதை ஆயுர்வேதத்தின் மூலம் சரி செய்யும் முறைகள் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் அரிய மூலிகைகள் மூலம் உங்கள் இரத்த ஓட்டத்தை சீராக்கி, உடல் உபாதைகளில் இருந்து விடுபடுங்கள்.
உடல் தோஷம் மற்றும் இரத்த ஓட்டம்: ஆயுர்வேத தொடர்பு
ஆயுர்வேதத்தின்படி, ஒவ்வொருவரின் உடல் அமைப்பு மற்றும் தோஷங்களுக்கேற்ப இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இது வாத பித்த கப தோஷங்கள் மூலம் வேறுபடுகிறது:
- வாத தோஷம்: இரத்த ஓட்டம் சீராக இருக்காது. கை, கால்கள் சில்லிட்டு போகலாம். உடல் வறண்டு, சோர்வு அதிகமாக இருக்கும். நரம்பு மண்டல பிரச்சனைகள் மற்றும் பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- பித்த தோஷம்: பொதுவாக இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். ஆனால், சமநிலை தவறினால் உடலில் சூடு அதிகமாகும். கை, கால்களில் வீக்கம், சிவந்து போதல் போன்றவை ஏற்படும்.
- கப தோஷம்: இரத்த ஓட்டம் மந்தமாக இருக்கும். இதனால் உடல் கனமாக இருக்கும். உடலில் நீர் தேங்கி வீக்கம் வரலாம்.
உடலில் இரத்த ஓட்டம் சீராக வாழ்க்கை முறையில் செய்ய வேண்டியவை
- ட்ரை பிரஷ்ஷிங்: குளிப்பதற்கு முன் சருமத்தை பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்கவும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் நிணநீர் வடிகாலுக்கும் நல்லது.
- தினசரி உடற்பயிற்சி: யோகா, வேகமான நடை, நீச்சல் போன்றவற்றை செய்யலாம். கப வகை கொண்டவர்கள் அவசியம் செய்ய வேண்டும். இது வ்யான வாயுவை தூண்டி, இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
- சூடான தண்ணீர்: நாள் முழுவதும் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்ச்சியான பானங்கள் மற்றும் உணவுகள் இரத்த ஓட்டத்தை குறைக்கும். வாதம் உள்ளவர்கள் எப்போதும் உடல் சூடாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
- சூரிய நமஸ்காரம்: பித்த உடல்வாகு கொண்டவர்களுக்கு நல்லது. இது உடல் சூட்டை குறைத்து, இரத்த ஓட்டம், உடல் வளைவுத்தன்மை, ஆக்சிஜன் அளவை மேம்படுத்தும்.
மசாஜ் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்
தினசரி எண்ணெய் மசாஜ் செய்வது உடலுக்கு நல்லது. குறிப்பாக வாதம் மற்றும் கபம் உள்ளவர்கள் இதைச் செய்ய வேண்டும். எள் அல்லது கடுகு எண்ணெயை சூடாக்கி மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தலைக்கு பிருங்கிராஜ் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் மன அமைதியை கொடுக்கும்.
உடலில் இரத்த ஓட்டம் சீராக உதவும் ஆயுர்வேத மூலிகைகள்
அஸ்வகந்தா
மன அழுத்தத்தை குறைத்து, வீக்கத்தையும் குறைக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகி இதயம் பலமாக இருக்கும். வெதுவெதுப்பான நீர் அல்லது பாலுடன் கலந்து குடிக்கலாம்.
வல்லாரை
மனதை கூர்மையாக்கி, மன அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகி இதய ஆரோக்கியம் மேம்படும். வல்லாரை பொடியை வெந்நீரில் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.
திரிபலா
உடல் நச்சுக்களை நீக்கி, செரிமானத்தை ஆதரிக்கிறது. இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, அழற்சியை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தினமும் இரவு படுக்கைக்கு முன்பு வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
குக்குலு
கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்க உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மருத்துவர் ஆலோசனைப்படி மாத்திரை அல்லது காப்ஸ்யூலை எடுத்துக் கொள்ளலாம்.
மஞ்சள், பூண்டு, இஞ்சி, பட்டை
அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் மஞ்சள், பூண்டு, இஞ்சி, பட்டை போன்றவையும் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும்.
வல்லாரை பிராமி
இது இரத்த நாளங்களை வலுப்படுத்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக, சிரை பற்றாக்குறையைச் சரிசெய்கிறது. பொடி, மாத்திரை அல்லது காப்ஸ்யூல்களாக எடுத்துக்கொள்ளலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தம் உறைதல், அல்லது இரத்தக் குழாய்கள் சுருங்குதல் போன்றவை உடலில் இரத்த ஓட்டத்தை பாதிக்க முக்கிய காரணங்கள்.
வாத, பித்த, கப தோஷங்கள் இரத்த ஓட்டத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கும். வாதம் சீரற்ற ஓட்டத்தையும், பித்தம் உடலில் சூட்டையும், கபம் மந்தமான ஓட்டத்தையும் ஏற்படுத்தும்.
ட்ரை பிரஷ்ஷிங், தினசரி உடற்பயிற்சி (யோகா, நடைபயிற்சி), வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது, சூரிய நமஸ்காரம், மற்றும் தினசரி எண்ணெய் மசாஜ் ஆகியவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.