Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

வீட்டில் ஒருபோதும் காலியாக வைக்கக்கூடாத 5 முக்கிய பொருட்கள்

வாஸ்து சாஸ்திரம் நம்முடைய வீட்டில் மங்கலமும், செழிப்பும், செல்வமும் நிறைந்ததாக இருக்க வழிகாட்டுகிறது. எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை ஆற்றலை ஈர்க்க உதவுகிறது. அந்த வகையில், நம்முடைய வீட்டில் சில பொருட்கள் ஒருபோதும் முழுவதுமாக தீர்ந்து போக விடக்கூடாது என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட 5 முக்கிய வாஸ்து குறிப்புகள் என்னென்ன என்பதை இந்த ஜோதிடப் பதிவில் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

வீட்டில் காலியாக வைக்கக்கூடாத பொருட்கள்

1. அரிசி

இந்து சமயத்தில் உணவை தெய்வமாக கருதுகின்றனர், அதிலும் குறிப்பாக அரிசி மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி, ஒவ்வொருவரின் வீட்டிலும் அரிசி பாத்திரத்தை ஒருபோதும் காலியாக வைக்கவே கூடாது. அது முழுமையாக காலியாவதற்கு முன் அதை நிரப்புவது முக்கியம் என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. வீட்டில் அரிசி, தானியங்கள் தீர விட வேண்டாம், இதனால் வீட்டில் அதிர்ஷ்டம், செல்வ நிலை குறையும் என நம்பப்படுகிறது. இது தமிழ் கலாச்சாரத்தில் ஒரு முக்கிய நம்பிக்கையாகும்.

2. காலியான வாளி

வாஸ்து சாஸ்திரத்தின் படி, குளியல் அறையில் ஒருபோதும் வாளியில் நீரை காலியாக்கி வைக்க வேண்டாம். இதனால் வீட்டில் எதிர்மறை சக்திகள் நிரம்பும். நீங்கள் குளிப்பது அல்லது துவைத்த பின்னர், அந்த வாளியில் சிறிது நீரைப் பிடித்து வைப்பது நல்லது. இதன் காரணமாக உங்கள் வீட்டில் நிதி நெருக்கடிகள் குறையும் என நம்பப்படுகிறது. இது ஜோதிட ரீதியாகவும் சில பலன்களைத் தரும் என்று கூறுவார்கள்.

3. பணப்பையை காலியாக வைக்க வேண்டாம்

ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் சேமிப்பு. அதிலும் குறிப்பாக நீங்கள் வைத்திருக்கக் கூடிய பணப்பையில் குறைந்த பட்சம் ஓரிரு ரூபாய் நோட்டுகளையாவது வைத்திருப்பது நல்லது. உங்கள் பர்ஸில் உள்ள பணத்தை முழுவதுமாக செலவு செய்து விட வேண்டாம். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய பர்ஸில் கோவரி, கோமதி சக்கரம் அல்லது சங்கு கூட வைத்திருக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களின் நிதிநிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். இது செல்வத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய வாஸ்து குறிப்பு.

4. தண்ணீர் பானை மற்றும் குடங்கள்

உங்கள் வீட்டு பூஜை அறையில், இறைவனுக்காக வைக்கக்கூடிய தண்ணீர் பாத்திரத்தில் ஒருபோதும் தண்ணீர் காலியாக விடுவோ அல்லது, தண்ணீர் இல்லாமல் வைப்பது கூடாது. நீங்கள் எப்போதெல்லாம் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுகின்றீர்களோ அப்போதெல்லாம், அந்த சிறிய தண்ணீர் வைக்கக் கூடிய பாத்திரத்தை விளக்கி மீண்டும் நீரை நிரப்பி வைத்து வழிபாடு செய்யவும். அதேபோல உங்கள் வீட்டில் தண்ணீர் பிடித்து வைக்கக்கூடிய குடங்களும் முழுவதுமாக நீர் காலியாகும் வரை விட வேண்டாம். வீட்டில் ஓரிரு குடங்களில் தண்ணீர் எப்போதும் இருக்கும் வகையில் பராமரிப்பது நல்லது. இல்லையெனில் உங்கள் வீட்டில் நிதி நெருக்கடியைச் சந்திக்க வாய்ப்புள்ளது. தண்ணீர் என்பது வளத்தின் அடையாளம்.

5. உங்கள் நாக்கில் கவனம் தேவை (இனிமையான வார்த்தைகள்)

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் நம்முடைய நாக்கு தான். நாம் பேசக்கூடிய வார்த்தைகளுக்கு மிகப் பெரிய சக்தி உண்டு. அது ஒருவரை ஆக்கவோ அல்லது அழிக்கவோ கூடிய வல்லமை உள்ளது. அதனால் எப்போதும் இனிமையான வார்த்தைகளை மட்டுமே பேசுவது அவசியம். வீட்டில் உள்ள பெரியவர்களை மனம் புண்படும்படி ஒருபோதும் பேசக்கூடாது. இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்காமல் போகும். உங்கள் மீதான மரியாதையும் வீட்டில் இல்லாமல் போய்விடும். இதனால் நீங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமான, நேர்மறை வார்த்தைகளைப் பேசுவது நல்லது. இதுவும் ஒரு வகையில் வீட்டுக்குள் நேர்மறை ஆற்றலை உருவாக்கும் ஒரு வாஸ்து தந்திரம்.

முக்கிய வாஸ்து குறிப்புகள் சுருக்கம்

  • அரிசி பாத்திரத்தை ஒருபோதும் காலியாக விடாதீர்கள்.
  • குளியலறை வாளியில் எப்போதும் சிறிது நீர் இருக்கட்டும்.
  • உங்கள் பணப்பையை காலியாக வைக்க வேண்டாம்; சிறிய தொகையை எப்போதும் வைத்திருங்கள்.
  • தண்ணீர் பானைகள் மற்றும் குடங்களை முழுவதுமாக காலியாக விட வேண்டாம்.
  • எப்போதும் இனிமையான, நேர்மறை வார்த்தைகளையே பேசுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வாஸ்து சாஸ்திரம் என்பது பண்டைய இந்திய கட்டிடக்கலை அறிவியல் ஆகும். இது வீடு மற்றும் அலுவலக கட்டிடங்களை அமைக்க உதவுகிறது, அதன் மூலம் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும்.

பணப்பையை காலியாக வைக்காமல் இருப்பது, தண்ணீர் குடங்களை நிரப்பி வைப்பது, வீட்டில் அரிசி பாத்திரத்தை காலியாக விடாமல் இருப்பது போன்ற பல குறிப்புகள் செல்வத்தை ஈர்க்க உதவும்.

குளியல் அறையில் காலியான வாளிகளை தவிர்ப்பது, இனிமையான வார்த்தைகளைப் பேசுவது, நேர்மறை சிந்தனைகளை வளர்ப்பது ஆகியவை வீட்டில் எதிர்மறை ஆற்றலைக் குறைக்க உதவும்.

Our Other Services