உடலில் பல்வேறு உறுப்புகளையும் வெவ்வேறு விதங்களில் நாம் கழிவுகளை நீக்கி டீடாக்ஸ் செய்வோம். ஆனால் கருப்பை டீடாக்ஸ் பற்றி பெரிய அளவில் கவனம் செலுத்துவதே இல்லை. கருப்பையை முறையாக டீடாக்ஸ் செய்யாதபோது ஒழுங்கற்ற மாதவிடாய், நீர்க்கட்டிகள், உடல் எடை அதிகரிப்பு, அதிகப்படியான முகப்பருக்கள் ஆகியவை உண்டாகும். இவை பிசிஓடி (PCOD) அறிகுறிகள் ஆகும். இவற்றை சரிசெய்து ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தி கருப்பையை சுத்தம் செய்து பிசிஓடி பிரச்சினையை சரிசெய்ய இந்த இயற்கை மூலிகை பானம் உதவி செய்யும்.
பிசிஓடி-யை சீர்செய்ய உதவும் மூலிகை பானம்
நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியே ஒரு மருத்துவப் பெட்டி தான். அதற்குள் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமும் மருத்துவ குணங்களும் இருக்கிறது. அதில் இப்போது நாம் தயாரிக்கப் போகும் பானம் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம், இளப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தேவையான பொருள்கள்:
- சீரகம் - 1 ஸ்பூன்
- ஓமம் - 1 ஸ்பூன்
- சுக்குப் பொடி - அரை ஸ்பூன்
- நெய் - 1 ஸ்பூன்
இந்த நான்கு பொருள்கள் இருந்தால் போதும். உங்கள் பிசிஓடி-யை ரிவர்ஸ் செய்ய உதவும் பானத்தைச் செய்து விடலாம்.
இந்த பானத்தை செய்வது எப்படி?
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சீரகம், ஓமம் ஆகியவற்றை முதலில் ஒவ்வொன்றாகச் சேர்த்து அதில் சிறிது நெய் விட்டு நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு அதில் சுக்குப் பொடி சேர்த்துக் கிளறுங்கள். ஆறியதும் அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்ததும் அதில் இந்த பொடியை சேர்த்து கொதிக்க விடுங்கள்.
- அது பாதியாகக் குறைந்ததும் வடிகட்டினால் குடிக்கத் தயாராக இருக்கும். இதை ஒரு நாளைக்கு ஒரு கப் வீதம் தினமும் குடித்து வாருங்கள்.
இந்த பானம் எப்படி பிசிஓடி-யை சரிசெய்ய உதவி செய்யும்?
- சீரகம்: வயிறு உப்பசத்தைக் குறைக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.
- ஓமம்: செரிமானத்தை மேம்படுத்தும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும் உதவி செய்யும்.
- சுக்குப்பொடி: மாதவிடாய் வலியைக் குறைக்கும். சீரற்ற மாதவிடாய் பிரச்சினையைச் சரிசெய்யவும் ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தவும் உதவும்.
- நெய்: ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு மட்டும் இன்றி இனப்பெருக்க அமைப்பையும் பலப்படுத்த உதவி செய்யும்.
யாரெல்லாம் இந்த பானத்தை குடிக்கலாம்?
- ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை உள்ளவர்கள் (irregular periods)
- பிசிஓடி (PCOD) உள்ளிட்ட பிரச்சினை உள்ளவர்கள், அதற்கு அடிப்படைக் காரணமான ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினை உள்ளவர்கள்
- ஜீரணக் கோளாறு, உடல் வீக்கம், இன்ஃபிளமேஷன்கள், கருப்பைக் கழிவுகள் ஆகியவை அதிகமாக இருப்பவர்கள்
- இனப்பெருக்க மண்டலம் சார்ந்த பிரச்சினைகளைச் சரிசெய்ய நினைப்பவர்கள்
இதில் சேர்க்கப்படும் பொருள்களின் நன்மைகள் (விரிவாக)
சீரகம் ஏன் சேர்க்கிறோம்?
- செரிமான ஆற்றலை மேம்படுத்தும். பிசிஓஎஸ் பிரச்சினை உள்ள பெண்களுக்கு அடிக்கடி வயிறு உப்பசம் உண்டாகும்.
- ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தும். உடலில் இன்சுலின் அளவையும் சீராக வைத்திருக்கச் செய்யும்.
- சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் அனீமியாவை தடுத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.
ஓமம் சேர்ப்பதன் பயன்கள் என்ன?
- செரிமான ஆற்றலை மேம்படுத்தும். உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.
- பிசிஓடி பிரச்சினையால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு, வயிறு வீக்கம் ஆகியவற்றைக் குறைக்கும் தன்மை உண்டு.
- இயற்கையான நச்சு நீக்கியாக இது செயல்படும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
- மாதவிடாய் உதிரப் போக்கு சீராக இருக்கும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் கடும் வயிற்று வலியைக் கட்டுப்படுத்தும்.
சுக்குப் பொடியின் நன்மைகள்
- உலர்ந்த இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மாதவிடாய் பிடிப்பு மற்றும் இடுப்பு வலி ஆகியவற்றைக் குறைக்கும்.
- பிசிஓடி பிரச்சினை இருப்பவர்களுக்கு அதிகமாக இன்சுலின் சகிப்புத் தன்மை பிரச்சினை இருக்கும். அவற்றை சரிசெய்து ஹார்மோன் ஒழுங்குமுறைக்கு உதவி செய்யும்.
- கருப்பையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கும்.
நெய் மருத்துவ குணங்கள்
- இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கு தேவையான ஹார்மோன்களின் உற்பத்தியை சீர் செய்யும் தன்மை கொண்டது.
- வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு மிகச்சிறந்த முறையில் உதவி செய்யும் தன்மை நெய்க்கு உண்டு.
- கருப்பையை வளப்படுத்தும்.
இறுதியாக, மேற்கண்ட இந்த பானம் செய்து தினமும் பெண்கள் குடித்து வரும்போது பெண்களுக்குத் தேவையான எல்லா வகையான குறிப்பாக கருப்பை மற்றும் இனப்பெருக்க மண்டலம் தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்ய உதவி செய்யும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
பொறுப்புத் துறப்பு:
இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டும். இதன் உண்மைத்தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறனுக்கு Jothidam360 பொறுப்பாகாது. மருத்துவ ஆலோசனைக்கு நிபுணர்களை அணுகவும்.