சுகரை குறைக்க என்னலாம் சாப்பிடலாம் என்று கேட்பவர்களில் சிலருக்கு இந்த ஸ்கை ஃப்ரூட் விதை அல்லது தேன் காய் என்னும் பெயர் ஏற்கனவே அறிமுகமாகியிருக்கலாம். தேன் காய் என்பது ஆங்கிலத்தில் Sky Fruits அல்லது Mahogany Seeds என்று அழைக்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளில், இந்த பழத்தை பல ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் இந்த பழம், பிற உடல் பிரச்சனைகளுக்கும் பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த தேன் காய் விதைகள் பற்றி இந்த கட்டுரையில் தெரிஞ்சுக்கலாம் வாங்க.
தேன் காய் (Sky Fruits) என்றால் என்ன?
தன்னிடம் வரும் நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவு குறைய தேன் காய் சாப்பிடுவதாகவும், அதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு குறைவதாகவும் சொல்லியதால் இது பற்றிய பதிவை வெளியிட்டிருப்பதாக டாக்டர் பிரகாஷ் மூர்த்தி கூறியுள்ளார். தேன் காய் வாங்கும் போது அதன் உள்ளடக்கத்திலேயே தினசரி 1 காய் வீதம் 40 நாட்கள் சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக டாக்டர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேன் காயை சுவைத்து அது மிக கசப்புத்தன்மை கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனால் தேன் காய் இனிக்கும் என்று நினைக்க வேண்டாம்.
தேன் காய் சாப்பிடுவதால் உண்டாகும் பாதிப்புகள்
தேன் காய் சாப்பிடுவது சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்று சொல்லப்பட்டாலும், இது உடல் உறுப்புகளை பாதிக்கவும் செய்யலாம். தேன் காய் அதிகம் சாப்பிடும் போது அது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உறுப்பை பாதிக்கலாம். சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் மக்கள் தேன் காய் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவு குறையும் என்பதால் அதிகளவு பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால் அவர்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை தேன் காய்க்கு வெளிப்படையாகவே தடை உத்தரவு விதித்துள்ளது என்றும் டாக்டர் பிரகாஷ் மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
சர்க்கரை நோயாளிகள் தேன் காய் சாப்பிடலாமா?
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர தேன் காய் சாப்பிடலாம். ஆனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தாலும், சிறுநீரகம், கல்லீரல் ஆரோக்கியம் குறித்து உரிய பரிசோதனை செய்த பிறகுதான் சாப்பிட வேண்டும். கல்லீரல், சிறுநீரகம் இரண்டுமே ஆரோக்கியமாக நார்மல் நிலையில் இருந்தாலும், தினமும் 1 என்னும் அளவில் மட்டும் சாப்பிடுவது பாதுகாப்பானது. எனினும் எந்த உணவையும் சுயமாக எடுக்காமல் உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுப்பது பாதுகாப்பானது என்றும் டாக்டர் பிரகாஷ் மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
ஸ்கை ஃப்ரூட் எப்படி சாப்பிடலாம்?
ஸ்கை ஃப்ரூட் பழத்தை உடைத்து, விதையை எடுக்க வேண்டும். விதை சாப்பிடக்கூடியது. அதை மென்று வெதுவெதுப்பான நீரில் விழுங்கலாம். பழம் மிகவும் கசப்பாக இருக்கும். ஏனென்றால் அதில் சில தாவரக் கலவைகள் உள்ளன. அதை விட கொட்டை இன்னும் கசப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மருந்து, மூலிகை மற்றும் உணவுப் பொருட்கள் சில நேரங்களில் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இது போன்ற பாதிப்புகள் ஏற்கனவே மருத்துவ உலகில் பதிவாகியுள்ளன. ஸ்கைஃப்ரூட் விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தாலும், சிலருக்கு இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தேன் காயின் நன்மைகள் (ஆய்வு அடிப்படையில்)
கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான 25 ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில், தேன் காய் விதைகள் Non-Communicable Diseases எனப்படும் தொற்றா நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும் என்று தெரிய வந்துள்ளது. நீரிழிவு, இதய நோய்கள், நாள்பட்ட அழற்சி போன்ற நோய்களைக் குணப்படுத்த இந்த ஸ்கை ஃப்ரூட் உதவுகிறது. இவற்றில் பினோலிக் அமிலம், ஃபிளாவனாய்டுகள், லிமோனாய்டுகள், சாப்போனின்கள், டானின்கள் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இவை ஆக்சிஜனேற்ற, இரத்த சர்க்கரை குறைப்பு, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. எனினும் உங்களுக்கு இது ஏற்றதா என்பதை அறிய மருத்துவரை அணுகி உறுதி செய்ய வேண்டும். அதுவே பாதுகாப்பானது.
ஸ்கை ஃப்ரூட் விதைகள் பாதிப்பு குறித்து ஆய்வுகள் சொல்வது என்ன?
தென்கிழக்கு ஆசியாவில் ஸ்கைஃப்ரூட் விதைகள் எனப்படும் ஸ்வீடேனியா மக்ரோஃபில்லா விதைகளை உட்கொண்ட இரண்டு நபர்களுக்கு ஆட்டோ இம்யூன் பிரச்சனைகள் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டன. பலரும் இதை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதன் பயன்பாடு சில நேரங்களில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என்று Asian Journal of Dairy and Food Research இதழில் வெளிவந்த ஆய்வு கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. எந்த மூலிகைகளையும் பாரம்பரியமாக எடுப்பதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
முக்கிய சிறப்பம்சங்கள்
- தேன் காய் (Sky Fruit): சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ஒரு விதை.
- டாக்டர் பிரகாஷ் மூர்த்தி: நோயாளிகளின் அனுபவங்கள் மற்றும் ஆய்வு முடிவுகள் மூலம் இதன் பயன்பாடு பற்றி விளக்கியுள்ளார்.
- பக்கவிளைவுகள்: கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
- சர்வதேச தடை: சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் இதன் அதிகப்படியான பயன்பாடு கல்லீரல் பாதிப்புகளுக்கு வழிவகுத்ததால் தடை செய்யப்பட்டுள்ளது.
- பயன்பாட்டு எச்சரிக்கை: மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உட்கொள்ள வேண்டாம். சிறுநீரகம், கல்லீரல் ஆரோக்கியத்தை பரிசோதித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
- நன்மைகள்: ஆக்ஸிஜனேற்ற, இரத்த சர்க்கரை குறைப்பு, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகள் கொண்ட பைட்டோ கெமிக்கல்கள் இதில் உள்ளன.
- சுவை: மிகவும் கசப்புத் தன்மை கொண்டது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
பொறுப்பு துறப்பு:
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. இது இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு jothidam360 பொறுப்பேற்காது.