சிவபெருமானின் திருவருளைப் பெறுவதற்குரிய அற்புதமான நாட்களில் ஒன்று மாணிக்கவாசகர் குருபூஜை. இந்த ஆண்டு ஜூன் 29 அன்று வரும் இந்நாளில், சிவபெருமானுக்கு விருப்பமான சில செயல்களைச் செய்வதன் மூலம் அவரது அருளைப் பெறலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளைப் போல, மாணிக்கவாசகரின் பாடல்களும் பக்தர்களை இறைவனுடன் இணைக்கும் வழிகள். ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ் சமயத்தின் பெருமைகளில் ஒன்றான இவரின் திருவாசகம் மூலம் நாம் அடையக்கூடிய பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சிவபெருமானே தேடி வருவார் - ஒரு ஆன்மிக உண்மை
சிவ பெருமானின் அருளை பெறுவதற்குரிய முக்கியமான நாட்களில் ஒன்றாக கருதப்படும் தினம் இந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி வருகிறது. இந்த நாளில் சிவ பெருமானுக்கு விருப்பமான சில விஷயங்களை நாம் செய்தால் சிவ பெருமானே நம்மை தேடி வர வழைக்க முடியும். சிவ பெருமான் நம்மை தேடி வருவாரா? சிவ பெருமானே தேடி வரும் அளவிற்கு நாம் என்ன அவ்வளவு புண்ணியமா செய்திருக்கிறோம் என தலைப்பை பார்த்த உடன் பலருக்கும் தோன்றி இருக்கும். ஆனால் கண்டிப்பாக வருவார் என்பது தான் உண்மை. இறைவனை கொண்டாடுபவர்களை விட, இறைனை போற்றி அடியார்களை கொண்டாடுபவர்களை இறைவனுக்கு மிக மிக பிடிக்கும் என்பார்கள். காரணம், இறைவன் என்பவன் அடியாருக்கு அடியாராக பக்தரின் உள்ளங்களில் வசிப்பதாக தான் ஆன்மிக சான்றோர்கள் சொல்லுகிறார்கள். அப்படி சிவபெருமானே தேடி வந்து அருள் செய்த ஒரு அடியாரான மாணிக்கவாசகரின் குரு பூஜை நாளில் சில எளிமையான விஷயங்களை செய்தால் நிச்சயம் நம்மை தேடியும் சிவ பெருமான் வருவார். அவரது அருள் நமக்கு இருப்பதையும், அவரே நம்முடன் இருப்பதையும் நம்மால் உணர முடியும்.
மனதை உருக்கும் திருவாசகம்
எந்த ஒரு சிவன் கோவிலுக்கு சென்றோ அல்லது சிவனை போற்றி பாடி வணங்க வேண்டும் என்றாலும் நம் அனைவருக்கும் நினைவில் வரும் பாடல், "நமச் சிவாய வாழ்க...நாதன் தாழ் வாழ்க...இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க" என்ற திருவாசகப் பாடல் தான். கேட்கும், படிக்கும் பக்தர்களின் மனங்களை மட்டுமின்றி, இறைவனின் உள்ளத்தையே உருக வைக்கும் இந்த திருவாசகம் பாடலை நமக்கு அருளியவர் மாணிக்கவாசகர். திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பார்கள். மாணிக்கவாசகர் சொல்ல சிவ பெருமானே தன்னுடைய கைப்பட எழுதிய பாடல் என்றால் அது எப்படிப்பட்ட அற்புதமான வரிகளாக இருக்க முடியும்?
திருவாசகத்தின் தனிச்சிறப்புகள்
திருவாசகம், வெறும் பாடல்கள் தொகுப்பு அல்ல; அது ஒரு பக்தனின் ஆழ்ந்த பக்தி உணர்வுகளின் வெளிப்பாடு. ஒவ்வொரு வரியும் சிவபெருமான் மீதான அன்பு, ஏக்கம், சரணாகதி, மற்றும் தத்துவ ஞானத்தை வெளிப்படுத்தும். இந்தத் தொகுப்பு சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துக்களை எளிமையாகவும், உருக்கமாகவும் எடுத்துரைக்கிறது. இறைவனை ஒரு நண்பனாக, குருவாக, காதலனாக, ஏன் ஒரு தாயாகக் கூடப் பாவித்து மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். திருவாசகத்தின் தனிச்சிறப்பே அதன் ஆழ்ந்த அனுபவ வெளிப்பாடுதான். வெறும் பக்திப் பாடல்களாக அன்றி, ஆன்மாவின் தேடலையும், இறைவனுடன் கலக்கும் அனுபவத்தையும் இது விவரிக்கிறது. சிவபெருமானின் கருணையையும், பக்தன் படும் பாட்டையும், இறுதியில் அடையும் பேரானந்தத்தையும் திருவாசகம் அழகாகச் சித்தரிக்கிறது.
மாணிக்கவாசகர்: நாயன்மார்களிலிருந்து வேறுபடுவது ஏன்?
சிவ பெருமானின் அருளை பெறுவதற்கு அவரையே வழிபடலாமே எதற்காக மாணிக்கவாசகரை வழிபட வேண்டும் என்ற கேள்வி மனதில் தோன்றும். அதற்கும் காரணம் உண்டு. அதாவது, சைவ சமயத்தில் சிவ பெருமானை போற்றி பாடியவர்களை நாயன்மார்கள் என்பார்கள். நாயன்மார்கள் என 63 பேரை மட்டுமே குறிப்பிடுவார்கள். இவர்களில் மாணிக்கவாசகர் இடம்பெற மாட்டார்கள். அவரை சமய குரவர்கள் நால்வரில் ஒருவராக மட்டுமே குறிப்பிடுவார்கள். இதற்கு காரணம், மற்றவர்களை போல் மாணிக்கவாசகரை யாரும் சாதாரண சிவனடியாராக கருதவில்லை. மாறாக சிவ பெருமானின் மறு வடிவமாக தான் கருதுகிறார்கள். அதனால் தான் இன்றும் திருப்பெருந்துறையில் நடக்கும் அனைத்து உற்சவங்களும் மாணிக்கவாசகருக்கே நடத்தப்படுகிறது.
சமயக்குரவர்களில் மாணிக்கவாசகரின் தனித்துவம்
சமயக் குரவர்கள் நால்வர் என்பவர்கள் சைவ சமயத்தைப் பரப்பிய மிக முக்கியமான ஆச்சாரியர்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் இந்த நால்வரில் அடங்குவர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்து, தங்கள் பாடல்கள் மூலமும், வாழ்க்கை முறைகள் மூலமும் சிவ பக்தியைப் பரப்பினர். மற்ற நாயன்மார்களைப் போலன்றி, மாணிக்கவாசகரின் வாழ்க்கை சிவபெருமானுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. சிவபெருமான் குருவாக வந்து அவருக்கு உபதேசம் செய்தது, நரிகளைக் குதிரைகளாக்கியது, இறுதியில் திருவாசகத்தை எழுதி வாங்கிக்கொண்டு மறைந்தது என அவரது வாழ்க்கை முழுவதும் சிவபெருமானின் திருவிளையாடல்கள் நிறைந்தவை. இவை அனைத்தும் மாணிக்கவாசகரின் சிறப்பம்சங்களாகும்.
மாணிக்கவாசகர் குருபூஜை அன்று செய்ய வேண்டியவை
- மாணிக்கவாசகர், சிவ பெருமானுடன் ஜோதியாக ஐக்கியமானது ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் என புராணங்களில் சொல்லப்படுகிறது. இந்த நாளையே மாணிக்கவாசகர் குருபூஜை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மாணிக்கவாசகர் குருபூஜை ஜூன் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
- இந்த நாளில் சிவன் கோவில்களில் நடக்கும் மாணிக்கவாசகர் குருபூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம். அல்லது சிவ தரிசனம் செய்யலாம்.
- திருநீறு பை, ருத்ராட்சம், திருவாசகர் புத்தகம் ஆகியன வாங்கி தானம் செய்யலாம்.
தானத்தின் மகத்துவம்
மாணிக்கவாசகர் குருபூஜையின் அன்று சிவ வழிபாட்டுப் பொருட்களை தானம் செய்வது, சிவ பக்தியைப் பரப்புவதற்கும், ஆன்மீக அறிவைப் பெருகுவதற்கும் வழிவகுக்கும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல எண்ணங்களையும், நேர்மறை அதிர்வுகளையும் கொண்டு வரும். இது இறைவனுடன் நமக்கு இருக்கும் தொடர்பை அதிகப்படுத்தும் செயலாகும். அதுவும் சிவ பெருமானுக்கு விருப்பமான, சிவ அம்சமாக கருதப்படும் பொருட்களை தானமாக அளிப்பது சிவ பெருமானின் மனதை மகிழ்வித்து, அவரது அருளை விரைவாக பெற்றுத் தரும்.
வாழ்நாளில் ஒருமுறை: திருவாசகம் படித்தல்
மாணிக்கவாசகர் குருபூஜை அன்று முடிந்தவர்கள் திருவாசகத்தை முழுவதுமாக படிக்கலாம். அன்று முடியா விட்டாலும் வாழ்நாளில் ஒருமுறையாவது திருவாசகத்தை முழுமையாக படிக்க வேண்டும். சிவனின் மீது பக்தியுடன் படித்தால் நிச்சயம் அதற்கான அர்த்தம் புரியும். அப்படி அர்த்தம் புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் படித்தால் சிவ பெருமானே நிச்சயம் நமக்கு அதற்கான அர்த்தத்தை புரிய வைப்பார். அவரே எழுதிய வரிகள் என்பதால், சிவனே குருவாக இருந்து நமக்கு திருவாசகத்திற்கு பொருள் சொல்வார்கள். சிவனுக்கு அருகிலேயே இருக்கும் உணர்வையும். நமக்குள் சிவன் இருக்கும் உணர்வையும் பெற வேண்டும் என்பவர்கள் மாணிக்கவாசகர் குருபூஜை நாளில் திருவாசகம் படிப்பது மிகவும் சிறப்பானதாகும்.