இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, கிராமப்புற மற்றும் நகரப்புறங்களுக்கிடையேயான இடைவெளியைக் குறைக்க இந்திய அரசு தீவிரமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேலைவாய்ப்பு என்பது இந்த இடைவெளியைக் குறைப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். கிராமப்புறங்களில் நிலவும் வறுமை மற்றும் வேலையின்மையை ஒழித்து, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு தொடர்ச்சியான உணவு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்திய அரசு கொண்டுவந்த திட்டம் தான் சம்பூர்ணா கிராமின் ரோஸ்கர் யோஜனா (SGRY).
இப்பதிவில், இத்திட்டத்தின் அம்சங்கள், பின்னணி மற்றும் நோக்கங்களை விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
சம்பூர்ணா ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்றால் என்ன?
சம்பூர்ணா ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (Sampoorna Grameen Rozgar Scheme) என்பது இந்திய அரசாங்கத்தால் 25 செப்டம்பர் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அனைத்து தனிநபர்களுக்கும் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு மற்றும் உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.
சம்பூர்ணா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் நோக்கங்கள்
கிராமப்புறங்களில் வேலையில்லாதவர்களுக்கும், தகுதிக்கு ஏற்ற வேலையில்லா ஏழைகளுக்கும் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு மற்றும் உணவை வழங்குவதே சம்பூர்ணா கிராமின் ரோஸ்கர் யோஜனா திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். அதேசமயம், கிராமப்புறப் பகுதிகளை நீண்டகாலத்திற்கு செழிப்புடன் மாற்றுவதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதும் திட்டத்தின் மற்றொரு நோக்கமாக இருந்தது.
சம்பூர்ணா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பின்னணி
இந்திய அரசாங்கம் சம்பூர்ணா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, கிராம மக்கள் ஜவஹர் கிராம சம்ரிதி யோஜனா (JGSY) மற்றும் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (EAS) ஆகிய இரண்டு வேலைவாய்ப்புத் திட்டங்களை சார்ந்திருந்தனர். ஆனால், செப்டம்பர் 2001 ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைக்க முடிவு செய்தது, அதன் முடிவில் தான் சம்பூர்ணா கிராமின் ரோஸ்கர் யோஜனா (SGRY) என்ற புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த ஒரே திட்டத்தின் கீழ், மேலே குறிப்பிட்ட இரண்டு திட்டங்களின் பயன்களும் அடங்கியது. அதாவது, கிராமப்புறங்களில் கட்டுமான அமைப்புகளை உருவாக்கும் அதே வேளையில், கிராமப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பையும் அதிகரிப்பது தான் இத்திட்டத்தின் இலக்காக இருந்தது.
நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் எந்தவொரு திட்டமும் மத்திய மற்றும் மாநில அரசுகளை உள்ளடக்கியதாக தான் இருக்கும். அதேபோல தான் SGRY திட்டமும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு திட்டமாக செயல்படுத்தப்பட்டன. அதன்படி, SGRY திட்டம் 25 சதவீதம் மாநில அரசின் நிதியில் இருந்தும், 75 சதவீதம் மத்திய அரசின் நிதியில் இருந்தும் செயல்படுத்தப்பட்டது.
சம்பூர்ணா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் அம்சங்கள்
- இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 25 சதவீதம் ரொக்கமாகவும், மீதமுள்ள தொகை உணவு தானியங்களாகவும் வழங்கப்படும். ஒரு தொழிலாளிக்கு குறைந்தபட்சமாக 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி போன்ற உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டன. மீதமுள்ள ஊதியம் ரொக்கமாக வழங்கப்பட்டன. இந்த வழிமுறை கிராமப்புறங்களில் நிலவும் வேலையின்மை மற்றும் பசி இரண்டையும் ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்தது.
- SGRY திட்டத்தில் எஸ்சி/எஸ்டி மற்றும் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
- SGRY திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து வேலைகளிலும் 30% பெண் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
- ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் இருவருக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட்டன. இந்த ஊதியம் வாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட நாளில், பஞ்சாயத்துக்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
சம்பூர்ணா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு யார் தகுதியானவர்கள்?
கூலி வேலை தேவைப்படும் அனைத்து கிராமப்புற ஏழை மக்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். முக்கியமாக:
- விவசாய கூலி வேலை செய்பவர்கள்
- விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகள்
- விவசாயம் அல்லாத தொழில்களில் கூலி செய்பவர்கள்
- பட்டியல் சாதி அல்லது பழங்குடியின சமூகத்தினர்
- பெண்கள்
- இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நபர்கள்
- ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்
- கூலி வேலை செய்ய விரும்பும் ஊனமுற்ற பெற்றோரின் பிள்ளைகள்
சம்பூர்ணா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள்
இத்திட்டத்தின் கீழ், நீண்டகால கிராமப்புற செழிப்புக்கான பொது சொத்துக்களை உருவாக்குவதற்கு உதவியாக இருக்கும் அனைத்து பணிகளும் தகுதியுடைவையாக இருந்தாலும், பின்வரும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு செய்யப்பட்டன:
- பள்ளிக் கட்டிடங்கள், சமூக கூடங்கள் மற்றும் பஞ்சாயத்து அரங்குகள் கட்டும் பணி
- தடுப்பணைகள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றை தூர்வாரும் பணி
- குளங்களில் வண்டல் மண் அள்ளும் பணி
- கிராமப்புற சாலைகள் மற்றும் பாலங்களை பராமரிக்கும் பணி
- கிராமப் பகுதிகளை தூய்மை படுத்தும் பணி
பிபிஎல் பிரிவைச் சேர்ந்த எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான பணிகள்
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான பணிகள்:
- அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களை மேம்படுத்தும் பணி
- பட்டியல் அல்லது பழங்குடியின சமூகத்தை சேர்ந்த தனியார் நிலங்களில் எரிபொருள் மரத் தோட்டங்கள் மற்றும் தீவன நடவு செய்யும் பணிகள்
- வறுமையில் வாடும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு சொந்தமான தனியார் நிலங்களில் மலர் வளர்ப்பு, தோட்டக்கலை பணிகள்
- திறந்தவெளி நீர்ப்பாசன கிணறுகள் அல்லது ஆழ்துளை கிணறுகள் தோண்டும் பணிகள்
- குளம் தோண்டும் அல்லது மறு அகழாய்வு செய்யும் பணிகள்
சம்பூர்ணா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மாற்றம்
தொடர்ந்து 5 வருடம் செயல்பாட்டில் இருந்த இந்த சம்பூர்ணா கிராமின் ரோஸ்கர் யோஜனா திட்டமானது 2006 ஆம் ஆண்டு தேசிய வேலைக்கான உணவுத் திட்டத்துடன் (NFFWP) இணைக்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் திட்டத்துடனும் (MGNREGA) இணைக்கப்பட்டது.
தற்போது, சம்பூர்ணா கிராமின் ரோஸ்கர் யோஜனா திட்டத்துக்கு பதிலாக இந்தியாவில் செயல்பட்டு வரும் கிராமப்புறங்களில் தேசிய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமாக 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' தான் செயல்பட்டு (100 நாள் வேலை திட்டம்) வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வெறும் உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மற்றும் வயதானவர்களுக்கு 100 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வாழும் மக்களின் நல்வாழ்விற்கான இத்தகைய அரசு திட்டங்கள், ஜோதிடம் காட்டும் பாதையைப்போல் ஒரு வழிகாட்டியாக அமைந்து, முருகப்பெருமானின் அருளால் அனைவரும் நல்வாழ்வு பெற துணைபுரிகின்றன. ஆறுபடை வீடுகள் போன்ற ஆலயங்கள் அமைந்திருக்கும் நம் தமிழ் மண்ணில் இத்தகைய சமூக நல திட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.