நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது, தங்கள் வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல், சளி, தலைவலி வந்தால், தன் அம்மா ஒரு காபி செய்து தருவார் என்றும், அதை குடித்ததுமே சளி, தலைவலி சரியாகிவிடும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அது என்ன காபி என்றால் கடுகு காபி என்று சொன்னார். நமக்கு கேட்க ஆச்சரியமாக இருக்கும், ஆனால் நம் முன்னோர்கள் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த ஒரு அற்புதமான நாட்டு மருத்துவம் இது. சளி, காய்ச்சல், தலைவலி போன்ற உபாதைகளில் இருந்து உடனடி தீர்வு தரும் இந்த கடுகு காபி பற்றி விரிவாகக் காண்போம்.
கடுகு காபி செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
- கடுகு - ஒரு டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - 300 மில்லி
- நாட்டுச் சர்க்கரை - 1 ஸ்பூன் (அல்லது சுவைக்கு ஏற்ப)
செய்முறை:
- ஒரு பெரிய டேபிள் ஸ்பூன் அளவு கடுகை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதை வெறும் வாணலியில் போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து வறுக்க வேண்டும். கடுகு தீய்ந்து விடாமல், நன்கு பொரிந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஆறவிடுங்கள்.
- இது நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்ய வேண்டும். இது பார்க்கவும் வாசனையும் காபி பொடி போல இருக்கும்.
- எடுத்து வைத்திருக்கும் 300 மில்லி தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் இந்த கடுகு பொடியை ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
- நன்கு கொதித்ததும் வடிகட்டினால் கடுகு காபி ரெடி. இதை சூடாக காபி போல குடிக்க வேண்டியது தான். தேவைப்பட்டால் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
கடுகு காபி குடிப்பதன் நன்மைகள்:
காய்ச்சல் சரியாக:
நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் காய்ச்சல் வந்தால், அதிலும் குளிர் ஜுரம் வந்தால் இந்த கடுகு காபி தான் செய்து குடிப்பார்களாம். இந்த காபியை நன்கு சூடாகக் குடித்து விட்டு, போர்வை போர்த்திப் படுத்துக் கொண்டால் கொஞ்ச நேரத்தில் நன்கு வியர்த்து விடும். காய்ச்சலும் உடல் வெப்பநிலையும் அப்படியே குறைந்துவிடுமாம். இது ஒரு எளிய வீட்டு வைத்தியம்.
தலைவலி மற்றும் சளி நீங்க:
மூக்கு ஒழுகிக் கொண்டிருக்கிற சளியாக இருந்தாலும் சரி, அல்லது மார்பில் தேங்கியிருக்கும் சளியாக இருந்தாலும் சரி, இந்த கடுகு காபி குடித்தால் சட்டுனு கரைந்து வெளியேறிவிடுமாம். அதேபோல நீண்ட நாள் தீராத ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் டென்ஷனால் ஏற்படும் தலைவலி இருக்கும்போது, இந்த கடுகு காபியை ஒரு டம்ளர் அளவு சூடாகக் குடித்தால் உடனே தலைவலி குறையுமாம். இது ஒரு சிறந்த ஆரோக்கிய குறிப்பு.
மூளை சுறுசுறுப்புக்கு:
தலைக்குக் குளித்து விட்டு வந்தவுடன் அல்லது அதிகமாக வியர்க்கும் போது தலையில் நீர்க்கோர்க்கும் பிரச்சனை உண்டாகும். இந்த பிரச்சனை ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கத் தான் அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு இந்த கடுகு காபி நல்ல தீர்வு தரும். இதை இன்னும் கொஞ்சம் அதிக தண்ணீரும் கடுகு பொடியும் சேர்த்து நீர்க்கோவை சரிசெய்ய பயன்படுத்தலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது எந்தவித மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு இணையானது அல்ல. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு Jothidam360 பொறுப்பல்ல.