Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

பணக் கஷ்டம் தீர 8 எளிய ஆன்மிகப் பரிகாரங்கள்

வாழ்க்கையில் பணப் பிரச்சனைகள் மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து நிரந்தரமாக விடுபட வழி தேடுகிறீர்களா? கஷ்டங்கள் தீர்ந்து, செல்வம் பெருக சில எளிய ஆன்மிகப் பரிகாரங்கள் மற்றும் வாஸ்து குறிப்புகள் ஜோதிடம்360 உங்களுக்காக வழங்குகிறது. இந்த பணக்கஷ்டம் தீர்க்கும் பரிகாரங்களை தொடர்வதன் மூலம் உங்கள் நிதி நிலை மேம்பட்டு, வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.

பணக் கஷ்டம், பணத் தட்டுப்பாடு, கடன் பிரச்சனை ஆகியவை இல்லாமல் வாழ வேண்டும் என்பது தான் அனைவருக்கும் ஆசை. அதற்காக தான் அனைவரும் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் சில சமயங்களில் பண கஷ்டத்திற்கான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. சிலர் உடனடியாக அதிலிருந்து மீண்டு வந்து, சமாளித்து விடுவார்கள். ஆனால் பலர், அடுத்தடுத்த நிதி நெருக்கடிகளில் சிக்கிக் கொள்வது உண்டு. ஆனால் சில ஆன்மிக பரிகாரங்களை செய்வதால் எப்போதும் பணக் கஷ்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதுடன், உங்களை தேடி பணம் வந்த கொண்டே இருக்கும். இந்த எளிய பரிகாரங்களை செய்வதால் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை காண முடியும். குறிப்பாக பொருளாதார நிலையில் மிகப் பெரிய முன்னேற்றத்தை காண முடியும்.

பணக்கஷ்டம் தீர 8 சக்திவாய்ந்த ஆன்மிகப் பரிகாரங்கள்:

  1. 1. சிவனுக்கு பச்சரிசி காணிக்கை
    கோவிலில் இருக்கும் சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் பச்சரிசி வாங்கி காணிக்கையாக அளிப்பது நல்லது. வீட்டில் சிவலிங்கம் இருந்தால் அதற்கு பச்சரிசியால் அபிஷேகம் செய்தோ அல்லது பச்சரிசியை நைவேத்தியமாக படைத்தோ வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது "ஓம் நமசிவாய" மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பு. இந்த எளிய பரிகாரம் சிவ பெருமானின் அருளை பெற்றுத் தரும். இதனால் பணப் பிரச்சனைகள் தீர்ந்து, வாழ்க்கையில் அமைதி, அதிர்ஷ்டம் வரும். வீடு தேடி செல்வ வளம், நேர்மறை ஆற்றல் வரும்.
  2. 2. குபேர யந்திரம் நிறுவுதல்
    பொருளாதார நிலை உயர வேண்டும் என்பவர்கள் வீட்டில் குபேர யந்திரம் வாங்கி வைக்கலாம். வீட்டின் வடகிழக்கு மூலையில் வைப்பது சிறப்பு. இது செல்வத்திற்கு அதிபதியான குபேரருக்குரிய திசையாகும். இந்த குபேர யந்திரம் செல்வ வளத்தை ஈர்க்கும் தன்மை கொண்டதாகும். இது நிதி நிலைமை உயர உதவியாக இருக்கும். பணப் பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிக்கும். வாஸ்து சாஸ்திரப்படி, வடகிழக்கு திசையில் கனமான பொருட்கள், உடைந்த மற்றும் தேவையற்ற பொருட்கள், செருப்பு ஆகியவற்றை வைக்கக் கூடாது. கழிவறையும் இந்த திசையில் அமைக்கக் கூடாது. வடகிழக்கு திசை எப்போதும் சுத்தமாக, பிரகாசமாக இருக்க வேண்டும். இதனால் நிதி, வெற்றி ஆகிய இரண்டும் வீட்டில் எப்போது நிலைத்து இருக்கும்.
  3. 3. நீர் கசிவை உடனே சரிசெய்யுங்கள்
    வீட்டில் சிறிய நீர்கசிவு இருந்தாலும் அதை அலட்சியம் செய்து விடாதீர்கள். இதனால் பெரிய அளவில் செலவு, பண இழப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் குழாய்கள், கழிவறைகள் ஆகியவற்றில் நீர் கசிவு இருந்தால் அந்த வீட்டில் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து செலவு வந்து கொண்டே இருக்கும். வீண் செலவு, பண விரயம், பண இழப்பு ஆகியவை ஏற்பட்டு, பண பற்றாக்குறையும் இருந்து கொண்டே இருக்கும். சமையலறை, கழிவறை என எங்கு நீர் கசிவு இருந்தாலும் அதை உடனடியாக சரி செய்து விடுங்கள். இது உங்களின் நிதி ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
  4. 4. வாஸ்துப்படி கழிவறை திசை
    வாஸ்து சாஸ்திரப்படி, வடக்கு திசை என்பது குபேரனுக்குரிய திசை. இது பணம் மற்றும் வெற்றியுடன் தொடர்புடைய திசையாகும். இந்த திசையில் கழிவறை அமைத்தால் செல்வம் சேருவதை தடுக்கும். வீட்டில் தீய சக்திகளின் அதிர்வலைகள் அதிகரிக்கும். வடக்கு அல்லது மேற்கு திசையில் கழிவறை அமைப்பதற்கு பதிலாக நீர் அமைப்புகளை வைக்கலாம். இது வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க செய்து, நன்மைகள் அதிகரிக்க வழிவகுக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகும்.
  5. 5. வீட்டில் மணிபிளான்ட் வளர்ப்பது
    மணி பிளான்ட் என்பது பொருளாதார வளர்ச்சி, நேர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதனால் வீட்டில் பசுமையான மணி பிளான்ட்டை வைத்து வளர்ப்பது சிறப்பு. இதை வீட்டிற்கு தென்கிழக்கு திசையில் வைப்பது சிறப்பு. இது சுக்கிரனுக்குரிய திசையாகும். இது மகாலட்சுமி உடனும் தொடர்புடையதாகும். அதனால் இந்த திசையில் வளர்ச்சியான பொருளை வைக்கும் போது வீட்டில் செல்வ நிலை, நேர்மறையான விஷயங்கள், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி ஆகியவை வீட்டில் நிறைந்திருக்கும். வாஸ்து சாஸ்திரப்படி, மணி பிளான்ட்டை வாட விடாமல் நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும். காய்ந்த இலைகள் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும். எந்த காரணத்திற்காகவும் வடகிழக்கு திசையில் மணி பிளான்ட்டை வைத்து விடக் கூடாது. அதே போல் நேரடியாக தரையிலும் வளர்க்கக் கூடாது. மணி பிளான்ட் வளர வளர வீட்டில் இருக்கும் பணப் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
  6. 6. பீரோவில் கண்ணாடி வைத்தல்
    சுத்தமான, தெளிவான முகம் பார்க்கும் கண்ணாடியை உங்களின் பணம் வைக்கும் பெட்டி அல்லது பீரோவில் வைப்பது மிகவும் சிறப்பான விஷயங்கள் அளிக்கும். வாஸ்து சாஸ்திரப்படி, கண்ணாடி என்பது உங்களின் செல்வ வளத்தை எதிரொலிக்கக் கூடியதாகும். பணம் வைக்கும் இடத்தில் கண்ணாடியை வைத்தால் வீட்டிற்கு இரண்டு மடங்காக பணம் வந்து கொண்டே இருக்கும். இத உங்களின் சேமிப்பை பல மடங்காக பெருகச் செய்வதற்கு மிகச் சிறப்பான வழியாகும். இது செல்வ வளத்தை பெருக செய்வதுடன், பொருளாதார வளர்ச்சியை நிலைத்து இருக்க செய்ய உதவும்.
  7. 7. குபேரர் சிலை அல்லது குபேரர் பை
    கையில் பண மூட்டையுடன் இருக்கும் குபேரர் சிலையை வாங்கி வீட்டில் வைப்பது சிறப்பு. அல்லது குபேரரின் பை என சொல்லப்படும் பையை வாங்கி அதில் காசுகள், மஞ்சள், அரிசி, ஏலக்காய் உள்ளிட்ட மங்கள பொருட்களை போட்டு வீட்டில் வைப்பது நல்லது. இவை அனைத்தையும் கூட போட்டு வைக்கலாம். இவை அனைத்தும் வெற்றி, செல்வ வளம், அதிர்ஷ்டம், ஆற்றல்கள் ஆகியவற்றை ஈர்க்கும் தன்மை கொண்டதாகும். இந்த பை எப்போது வீட்டில் இருந்தால் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி காணும். செல்வ வளமும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
  8. 8. சக்திவாய்ந்த லட்சுமி மந்திரம்
    "ஸ்ரீம்" என்ற லட்சுமி மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் செல்வம் சேருவதுடன், மகாலட்சுமியின் அருளும் வாழ்க்கையில் நிறைந்து இருக்கும். பணத்தை ஈர்ப்பதற்கு இது மிகவும் சுலபமான வழியாகும். முழு நம்பிக்கையுடன், அடி மனதில் இருந்து உச்சரிப்பதால் குறையாத செல்வம், அமைதி, அதிர்ஷ்டம் ஆகியவை பெருகிக் கொண்டே இருக்கும். தினமும் இந்த மந்திரத்தை சொல்வதை வழக்கமாக வைத்திருந்தால் உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படுவதை உணர முடியும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

சிவபெருமானுக்கு பச்சரிசி காணிக்கை அளிப்பது, குபேர யந்திரம் வீட்டில் வைப்பது, நீர் கசிவை உடனே சரிசெய்வது, மணி பிளான்ட் வளர்ப்பது, பீரோவில் கண்ணாடி வைப்பது, குபேரர் சிலை அல்லது குபேரர் பை வைத்தல், லட்சுமி மந்திரம் உச்சரிப்பது போன்ற பல எளிய பரிகாரங்கள் மூலம் பணக்கஷ்டம் தீரும்.

செல்வத்திற்கு அதிபதியான குபேரருக்குரிய திசையான வீட்டின் வடகிழக்கு மூலையில் குபேர யந்திரத்தை வைப்பது மிகவும் சிறப்பு. இது செல்வ வளத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது.

"ஸ்ரீம்" என்ற லட்சுமி மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து உச்சரித்து வந்தால், செல்வம் பெருகும், மகாலட்சுமியின் அருளும் வாழ்க்கையில் நிறைந்து இருக்கும். இது பணத்தை ஈர்ப்பதற்கு மிகவும் சுலபமான வழியாகும்.

Our Other Services