கோடைக்காலத்தில் ஏற்படும் வெப்பத் தடிப்பு அல்லது வியர்க்குரு பிரச்சனைகளைத் தவிர்க்கவும், குணப்படுத்தவும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் Dr.G.K.Tara Jayasri MD(Ayu) அவர்கள் வழங்கிய இயற்கை வைத்திய முறைகளை இங்கு காணலாம். சரும ஆரோக்கியம் மற்றும் ஜோதிடம் பற்றிய தகவல்களை வழங்கும் Jothidam360 தளத்தில், இந்த ஆயுர்வேத குறிப்புகள் உங்கள் உடல் நலத்திற்கு பெரிதும் உதவும். மேலும், தமிழ் மக்களின் பாரம்பரிய முருகன் ஆலயங்கள் மற்றும் ஆறுபடை வீடுகள் பற்றி அறியவும், உங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்தவும் எங்கள் தளத்தைப் பயன்படுத்துங்கள்.
வியர்க்குரு (மிலியா) என்றால் என்ன?
வெப்பத் தடிப்பு என்பது மிலியா என்று அழைக்கப்படுகிறது. வியர்வை வடியும் போது தோலின் ஆழமான அடுக்குகளில் உள்ள வியர்வை சுரப்பிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாக இது ஏற்படுகிறது. உடற்பயிற்சி மற்றும் வெப்பமான வானிலை போன்றவையும் வியர்வையை தூண்டும். சில நேரங்களில் வீக்கம், சிவத்தல் மற்றும் கொப்புளங்கள் போன்ற புண்களை கூட உண்டு செய்யலாம். தொற்று ஏற்படுத்தலாம். எளிதில் வியர்வை ஏற்படும் நிலையில் வெப்ப சொறி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த தொற்றை குணப்படுத்தவும், தடுக்கவும் என்ன செய்யலாம் என்பது குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் Dr.G.K.Tara Jayasri MD(Ayu), The Arya Vaidhya Chikitsalayam and Research Institute, Coimbatore.
வியர்க்குரு என்று அழைக்கப்படும் இது சருமத்தில் அரிப்புத்தன்மை, கொப்புளம், சிவப்பு நிற புள்ளிகள் என உடலில் பல பகுதிகளையும் பாதிக்கும். கோடைக்காலத்தில் சருமத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இது முக்கியமானது. அதிக வெப்பம் மிகுந்த பருவகாலத்தில் உடல் அசெளகரியமாக இருப்பதோடு அதிகமாக வியர்க்கும் போது இந்த வியர்க்குரு பிரச்சனையும் தீவிரமாக இருக்கும்.
வியர்க்குரு அறிகுறிகள்
- சிறிய புடைப்புகள்: சிறிய புள்ளிகள் அல்லது பருக்கள் போன்று இருக்கும்.
- அரிப்பு/குத்துதல்: அரிப்பு அல்லது குத்துதல் போன்ற உணர்வு.
- வீக்கம்: இலேசான வீக்கம்.
- நிற மாற்றங்கள்: வெள்ளை தோல் புள்ளிகள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும் எரிச்சல்.
இது பொதுவாக முகம், கழுத்து, மார்பகங்கள் கீழ், ஆண்களில் விதைப்பையின் கீழ், தோல் மடிப்புகள் மற்றும் முதுகு, மார்பு மற்றும் ஆடைகள் உராயும் தோல் பகுதிகளில் பார்க்கலாம். அடர்ந்த தோலில் பார்ப்பது கடினமாக இருக்கும். எனினும் சரும மருத்துவரை அணுகினால் டெர்மோஸ்கோபி பயன்படுத்தி தோலை பரிசோதிக்க மைக்ரோஸ்கோப் கொண்டு அதன் கீழ் சருமத்தை ஆராயும் போது வெள்ளை உருண்டைகளாக தோன்றலாம். அதை சுற்றி இருண்ட ஒளிவட்டங்கள் இருக்கும்.
வியர்க்குருவை குணமாக்கும் இயற்கை வைத்திய முறைகள்
வேப்பிலை
வேப்பிலை கிருமி நாசினிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. வியர்க்குரு இருக்கும் போது வேப்பிலைகளால் செய்யப்பட்ட பேஸ்ட், வெப்ப தடிப்புகளை தணிக்க பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஆன் டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக காட்டுகின்றன.
எப்படி பயன்படுத்துவது? வேப்பிலை பொடியை தண்ணீருடன் சேர்த்து பேஸ்ட் செய்யலாம். இந்த பேஸ்ட்டை சொறியில் தடவி, சில நிமிடங்கள் வைத்திருந்து பிறகு சுத்தம் செய்யலாம். வெதுவெதுப்பான குளியலில் வேப்பிலை பொடி சேர்க்கலாம்.
சந்தனம்
சந்தனம் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணியாக செயல்படுகின்றன. இது குளிர்ச்சித்தன்மை கொண்டது. சருமத்தில் அரிப்பு, எரிச்சலை தணிக்கும். வேனிற் கட்டிகளில் வலியை குறைக்கும். பெரும்பாலும் சந்தனம் சருமத்துக்கு பக்கவிளைவுகள் உண்டு செய்யாது என்றாலும் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து பயன்படுத்துவது நல்லது.
எப்படி பயன்படுத்துவது? சந்தனப்பொடியை நீரில் குழைத்து பேஸ்ட் போல் பதப்படுத்தி பிறகு சருமத்தில் சொறி இருக்கும் இடங்களில் தடவி விடவும். குறிப்பாக எரிச்சலுடன் இருக்கும் வேனிற் கட்டியை சரி செய்ய இவை உதவும். அரிப்பையும் குணப்படுத்தும்.
கற்றாழை
கற்றாழை என்பது அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டவை. இயற்கையாக எல்லா இடங்களிலும் பரவலாக கிடைக்கும் இதை வீட்டிலும் வளர்க்கலாம். உள்ளுக்கும் சருமத்துக்கு வெளியேயும் பயன்படுத்தலாம். இது சருமத்தை குளிர்விக்கும் மேலும் தொற்றுகளை தடுக்கும். இது வீக்கம் மற்றும் வலியை தணிக்க உதவும்.
எப்படி பயன்படுத்துவது? கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்து, நேரடியாக வியர்க்குரு இடத்தில் தடவலாம். தினமும் குளிப்பதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை தடவி குளித்து வந்தால் வியர்க்குரு குணமாகும்.
மஞ்சள்
மஞ்சள் மற்றும் தேன் கிருமி நாசினி இது பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. மஞ்சளை தேனில் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடலாம். பிறகு 20 நிமிடங்கள் வைத்திருந்து குளிக்கலாம்.
வியர்க்குரு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
- கோடையில் இரண்டு வேளை குளியல் அவசியம்.
- இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
- போதுமான நீரேற்றம் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும்.
- அதிக வெயில் நேரத்தில் வெளியே செல்ல கூடாது.
- உடலை உட்புறமிருந்தும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
கோடைக்காலத்தில் வரக்கூடிய வியர்வைக்கு தீர்வாக சோற்று கற்றாழை, மஞ்சள், சந்தனம், வேப்பிலை கொண்டு எப்படி தீவிரமாகாமல் தடுப்பது என்பதை பார்த்தோம். வியர்க்குரு இருந்தால் இந்த வீட்டு வைத்திய முறையை பின்பற்றலாம். வியர்க்குரு கட்டி பெரிதாக இருந்து வலி, எரிச்சலை அதிகரித்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு சமயம் தமிழ் பொறுப்பேற்காது.
இதேபோல், தமிழ் கலாச்சாரம், ஜோதிடம் மற்றும் முருகன் ஆலயங்கள் தொடர்பான மேலும் பல தகவல்களுக்கு Jothidam360.in வலைத்தளத்தைப் பார்வையிடவும்.