Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

மகாளய பட்சத்தில் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய பொருட்கள்

மகாளய பட்சம் என்பது நம் முன்னோர்களின் ஆசிகளை பெற்று, அவர்களின் ஆத்மாவை சாந்தி அடைய செய்யும் மிகவும் முக்கியமான 15 நாட்களாகும். இந்த புண்ணிய காலத்தில் நாம் செய்யும் எளிமையான வழிபாடுகள் கூட பல தலைமுறை முன்னோர்களின் ஆத்மாக்களை மகிழ்விக்கும். ஆனால், அறியாமல் நாம் செய்யும் சில தவறுகள் முன்னோர்களின் கோபத்திற்கு ஆளாகி, பல்வேறு துன்பங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக, சில பொருட்களை இந்த பித்ரு பட்ச காலத்தில் வாங்குவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் எச்சரிக்கிறது. மகாளய பட்சத்தின் சிறப்புகளையும், இந்த காலத்தில் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய பொருட்களையும் இங்கு விரிவாக காண்போம்.

மகாளய பட்சத்தின் முக்கியத்துவம்: முன்னோர்களின் ஆசி

மகாளய பட்சம் என்பது முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெறுவதற்கு மிகவும் ஏற்ற 15 நாட்களாகும். பொதுவாக இந்து நாட்காட்டியின் படி, 15 திதிகளில் ஏதாவது ஒரு திதியில் தான் அனைவருமே பிறக்கவும், இறக்கவும் செய்திருப்போம். மகாளய பட்சத்தின் 15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் நம்முடைய பல தலைமுறைக்கு முந்தைய முன்னோர்கள் எந்த திதியில் இறந்தார்கள் என்பது தெரியாவிட்டாலும், இந்த தர்ப்பணம் அவர்களின் ஆத்மாவை சாந்தி அடைய செய்யும். இது முன்னோர்களின் மனதை மகிழ்விக்கும் காலம் என்பதால், பித்ரு பட்சத்தில் சில பொருட்களை வாங்கக் கூடாது என்றும், அப்படி வாங்குவதால் முன்னோர்களின் கோபத்தை பெற வேண்டி இருக்கும், தீமைகளை அனுபவிக்க நேரிடும் என்றும் ஜோதிட சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

மகாளய பட்சத்தில் தவிர்க்க வேண்டிய 5 பொருட்கள்:

  1. 1. நகைகள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள்
    மகாளய பட்சம் காலத்தில் தங்கம், வெள்ளி, அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை வாங்கக் கூடாது. இந்த 15 நாட்களும் எளிமையான வாழ்க்கையை மட்டுமே வாழ வேண்டும். முன்னோர்களை வழிபட வேண்டுமே தவிர, வாழ்வியல் இன்பங்களை தேடக் கூடாது. உலகியல் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை சேர்ப்பதற்காக ஆன்மீக தேடல்களை மேற்கொள்வதற்கு பதிலாக, தானம், வழிபாடு, சடங்குகளை செய்வதற்காக பொருட்களை பயன்படுத்த வேண்டும். முன்னோர்களின் ஆத்மாவை சாந்தி அடைய செய்வதற்கான பணிகளை செய்வதன் மூலம் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
  2. 2. சொத்துகள் மற்றும் வாகனங்கள்
    பித்ரு பட்சம் காலத்தில் புதிய வாகனங்கள், சொத்துக்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த சொத்துக்களை வாங்குவது தீய விளைவுகளை ஏற்படுத்தும் என இந்து பாரம்பரிய வழக்கத்தில் குறிப்பிடப்படுகிறது. இது மறைந்த முன்னோர்களின் ஆசிகளை பெற வேண்டும், அவர்களின் மனக்குறைகளை போக்கி, குடும்பத்திற்கு ஆசியை பெற வேண்டும் என்ற நோக்கத்தையும், கவனத்தையும் திசை திருப்புவதால் இவைகள் சரியானது அல்ல என சொல்லப்படுகிறது. பித்ரு பட்சம் காலத்தில் முன்னோர்களை மறந்துவிட்டு, மற்ற ஆடம்பர செலவுகளில் கவனம் செலுத்துவதால் குடும்பத்தில் பொருளாதார சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் மகாளய பட்சத்தில் பொருளாதார முதலீடுகள், செலவுகளை செய்வதை நிறுத்த வேண்டும்.
  3. 3. தோல் பொருட்கள்
    ஷூ, பெல்ட் அல்லது பைகள் என தோலால் செய்யப்பட்ட பொருட்களை பித்ரு பட்சத்தில் வாங்குவது நல்லதல்ல. இவைகள் எதிர்மறை ஆற்றலுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இதனால் பித்ருக்கள் கோபமடைவார்கள். இது அவர்களை அவமதிக்கும் செயலாகும். இதனால் தோல் பொருட்களை வாங்குவதை பித்ரு பட்சம் முடியும் வரை தவிர்க்க வேண்டும்.
  4. 4. எலக்ட்ரானிக் சாதனங்கள்
    விலை உயர்ந்த மொபைல் போன்கள், லேப்டாப்கள் போன்ற விலை உயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பித்ரு பட்சத்தில் வாங்கக் கூடாது. புதிய பொருட்களை வாங்குவதற்கு பதில் முன்னோர்கள் வழிபாட்டிலும், தியானம் செய்வதிலும், தானங்கள் செய்வதிலும் நேரத்தை செலவிட வேண்டும். முன்னோர்களின் பெயரால் தர்ப்பணம், தானங்கள் ஆகியவற்றை செய்வது அவசியம்.
  5. 5. புதிய ஆடைகள்
    பித்ரு பட்சத்தில் புதிய ஆடைகளை வாங்கி அழகுப்படுத்திக் கொள்ளும் வேலைகளை தவிர்க்க வேண்டும். எளிமையாக, இரக்க குணத்துடன், முன்னோர்களை நினைவு கூறும் செயல்களில் ஈடுபட வேண்டும். அவர்களின் ஆசிகளை பெறுவதற்கான வழிகளில் ஈடுபட வேண்டும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். புதிய ஆடைகள் வாங்குவது என்பது கொண்டாட்டம், மகிழ்ச்சி ஆகியவற்றை குறிப்பதாகும். இது முன்னோர்களின் வழிபாட்டின் மீது இருக்கும் கவனத்தை திசை திருப்பும். இதனால் குடும்பத்திற்கு தீமைகள் வரும் என சொல்லப்படுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

மகாளய பட்சம் என்பது முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளைப் பெறுவதற்கு உகந்த 15 நாட்கள் ஆகும். இந்த காலத்தில் தர்ப்பணம் மற்றும் சடங்குகள் செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடையும்.

இந்த காலம் முன்னோர்கள் வழிபாட்டிற்கும், தியானத்திற்கும், தானதர்மங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகும். புதிய ஆடம்பர பொருட்களை வாங்குவது முன்னோர்களின் ஆசி பெறுவதற்கான நோக்கத்தை திசை திருப்பும் என்றும், இது பித்ருக்களின் கோபத்திற்கு ஆளாக்கும் என்றும் நம்பப்படுகிறது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்தல், ஏழைகளுக்கு தானம் வழங்குதல், விரதம் இருத்தல், மற்றும் இறை வழிபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இது முன்னோர்களின் ஆத்மாவை சாந்தி அடைய செய்து, குடும்பத்திற்கு நன்மைகளை கொண்டு வரும்.

Our Other Services