தெய்வீக உலகில் பல ஆழமான அர்த்தங்கள் பொதிந்துள்ளன. அதில், செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தாயார், காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் பாதங்களை பிடித்துக் காட்சி தருவதன் பின்னணியில் உள்ள ஜோதிட மற்றும் ஆன்மீக ரகசியங்களை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது. இது ஒரு அரிய தமிழ் ஆன்மீகக் குறிப்பு.
வழக்கமாக பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் ஆலயங்கள் அனைத்திலுமே மகாலட்சுமி தாயார் அவரது திருவடிகளை பிடித்தபடியே காட்சி தருவார். பெருமாள் நின்ற கோலத்திலோ அல்லது அமர்ந்த நிலையிலோ காட்சி தரும் ஆலயங்களில் மட்டுமே மகாலட்சுமி பல்வேறு திருநாமங்களில் தனி சன்னதியில் இருந்து அருள் செய்வார். திருப்பாற்கடலிலும் மகாலட்சுமி தாயார், மகாவிஷ்ணுவின் பாதங்களை பிடித்தபடியே அமர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பெருமாள், மகாலட்சுமியை தவிர வேறு எந்த தெய்வங்களும் இது போன்ற கோலத்தில் காட்சி தருவது கிடையாது. ஏன் காக்கும் கடவுளான பெருமாளும், செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியும் இப்படி ஒரு கோலத்தில் காட்சி தருகிறார்கள்? இதன் உள் அர்த்தம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது, அந்த உறவில் இருவர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இருக்கும் வாழ்க்கையே சிறந்தது. அந்த வகையில் திருப்பாற்கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை அவரது மனைவி மகாலட்சுமி பிடித்து விடுவது போன்று பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களை நாம் பார்த்திருப்போம். மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் அன்பான ஒரு சிறந்த தம்பதிகள். அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் அவர்களின் குடும்பத்தில் சொத்துக்கள், செல்வங்கள் வந்து சேரும் என்பது உண்மை என்று கூறுகின்றார்கள்.
ஜோதிட ரீதியான முக்கியத்துவம்: ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனி கிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக கூறியுள்ளார்கள். ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால் வரை உள்ள பகுதி மட்டும் சனி கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும். இதனால் தான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி, மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
சனி மற்றும் சுக்கிரனின் தாக்கம்: சனி பகவான், நாம் செய்யும் நன்மை-தீமைகளுக்கு ஏற்ப துன்பங்களை தரக் கூடிய கிரகமாக விளங்குபவர் சனி பகவான். ஆனால் சுக்கிரன், சுக போகங்கள் செல்வத்தை வழங்கக் கூடிய கிரகம். சனியின் ஆதிக்கம் அதிகரிக்காமல் இருக்க மகாலட்சுமி, அவர் ஆதிக்கம் செலுத்தும் இடமான கணுக்கால்களை பிடித்து அழுத்துகிறார்கள். இதனால் பெருமாள் மற்றும் மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு சனியின் பாதிப்பு இருக்காது. மாறாக சுக்கிரனின் ஆதிக்கம் அங்கு ஓங்கி இருப்பதால் செல்வ வளம் அதிகரிக்கும். இதனால் தான் பெருமாள் கோவிலுக்கு சென்றால் முதலில் தாயாரை வணங்கி விட்டு, பிறகு பெருமாள் சன்னதிக்கு சென்று, அவரின் பாதங்களை தரிசித்து விட்டு, பிறகு முகத்தை பார்த்து தரிசனம் செய்து விட்டு வர வேண்டும் என சொல்கிறார்கள்.
முக்கிய அம்சங்கள்
- மகாலட்சுமி பெருமாளின் பாதங்களை பிடிப்பதன் ஆன்மீக ரகசியம்.
- ஜோதிடத்தில் சனி மற்றும் சுக்கிர கிரகங்களின் பங்கு.
- செல்வ வளம் பெருக்கும் பெருமாள், மகாலட்சுமி வழிபாடு.
- தமிழ் கலாச்சாரத்தில் இறை வழிபாட்டின் சிறப்பு.