Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

கர்ம வினைகளை குறைக்கும் எளிய பரிகாரங்கள்

கர்மவினைகள் என்பது ஒருவர் முந்தைய பிறவிகளிலும், கடந்த காலங்களிலே செய்த செயல்கள் அல்லது பாவங்களின் விளைவுகள் ஆகும். இதை வினைப்பயன் என்றும் ஜோதிடம் மற்றும் தமிழ் ஆன்மீக மரபுகளில் சொல்லப்படுகிறது. இந்து, பெளத்தம், சமண சமயங்களில் இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கர்மவினைகளே நம்முடைய தற்போதைய வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.

கர்ம வினைகளின் வகைகள்:

கர்மவினைகள் என்பது சஞ்சித கர்மம் (முந்தைய பிறவிகளில் செய்தது), பிராரப்த கர்மம் (இந்த பிறவியில் செய்த பாவங்கள்), ஆகாம்ய கர்மம் (தற்போதைய செயல்களால் எதிர்காலத்தில் ஏற்பட போகும் விளைவுகள்) என மூன்று வகையாக சொல்லப்படுகிறது. கர்மவினைகளே நம்முடைய இன்ப, துன்பங்களுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இவற்றில் இருந்து விடுபட நாம் சில தர்ம காரியங்களில் ஈடுபட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. இவற்றில் எது முடிகிறதோ அதை முடிந்தவரை சிரத்தையுடன் செய்வது சிறப்பு.

கர்ம வினைகளை குறைக்க உதவும் செயல்கள்:

நம்முடைய கர்மவினைகளை குறைப்பதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை நீக்கி நல்வாழ்வு பெறலாம். இதோ சில எளிமையான வழிகள்:

  • 1. பறவைகளுக்கு நீர், தானியங்கள் வைத்தால்
  • 2. நாய்களுக்கு உணவளித்தல்
  • 3. மீன்களுக்கு உணவளித்தால்
  • 4. குரங்குகளுக்கு உணவளித்தால்
  • 5. குதிரைகளுக்கு உணவளித்தால்
  • 6. யானைகளுக்கு உணவு அளித்தால்
  • 7. பசுக்களுக்கு உணவளித்தால்
  • 8. ஆடுகளுக்கு உணவளித்தால்
  • 9. தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால்
  • 10. சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தல்
  • 11. கர்ப்பிணிப் பெண்களுக்கு பசிக்கு உணவு, தாகத்திற்கு தண்ணீர் அளித்தல்.
  • 12. ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் உணவு அளித்தல்
  • 13. கணவன் அல்லது மனைவி ஒருவருக்கொருவர் உணவு அளித்தல்
  • 14. அனாதை அல்லது முதியோர் இல்லங்களுக்கு உணவு அளித்தல்
  • 15. நோயாளிகளுக்கு மருந்து, உணவு அளித்தல்
  • 16. மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல்
  • 17. திருமணம் செய்து வைத்தல்
  • 18. ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.

இவைகள் எந்த அளவிற்கு கர்மவினைகளை குறைத்து நமக்கு இருக்கும் துன்பங்களை குறைக்குமோ, அதே போல் இந்த உயிரினங்களுக்கு துன்பம் விளைவித்தால் நம்முடைய கர்மவினைகள் அப்படியே 3 மடங்காக அதிகரிக்கும்.

ஆன்மீக பரிகாரங்கள் மற்றும் இறைவனின் அருள்:

கர்மவினைகளை குறைப்பதற்கான சில முக்கிய ஆன்மீக பரிகாரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • கோயிலில் சுற்றி திரியும் மயில்கள், காகம், சேவல், கோயில் யானை, கோயில் குளத்தில் உள்ள மீன்கள், கோயில் பூசாரி ஆகியோருக்கு உணவு அளிப்பதும் கர்மவினைகளை குறைக்க உதவும் செயல்கள் ஆகும்.
  • 1. விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு உணவு அளிப்பது
  • 2. கோயில் அன்னதானத்திற்கு உதவுதல்
  • 3. அன்னதானம் அளித்தல்
  • 4. கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல்
  • 5. கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல்
  • 6. கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு அளித்தல்
  • 7. இறைவனுக்கு பூ மாலை தொடுத்து கொடுத்தல்
  • 8. முன்னோர்கள் வழிபாடு
  • 9. மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி கொடுப்பது
  • 10. ஏழை மாணவர்கள் படிக்க உதவுவது
  • 11. தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல் மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விஷயத்தையும் உணர்ந்து செய்தாலும் 99 சதவீதம் கர்மாவை கழிக்கலாம்.

மேலே குறிப்பிட்டவை அனைத்தும் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக உங்களின் முதுமை அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை.

அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வப்போது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்களை நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி வாழ்வதே சிறந்தது. ஜோதிட ரீதியாக கர்மவினை குறைப்புக்குரிய பரிகாரங்களை அறிந்துகொள்வதுடன், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் திருவருளை நாடுவதும் நலம் பயக்கும். தமிழ் கலாச்சாரத்தில் இந்த புண்ணிய காரியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கர்மவினைகள் என்பது ஒருவர் முந்தைய பிறவிகளிலும், கடந்த காலங்களிலே செய்த செயல்கள் அல்லது பாவங்களின் விளைவுகள் ஆகும். இதை வினைப்பயன் என்றும் சொல்கிறார்கள். இது நம்முடைய தற்போதைய வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.

கர்மவினைகள் மூன்று வகைப்படும்: சஞ்சித கர்மம் (முந்தைய பிறவிகளில் செய்தது), பிராரப்த கர்மம் (இந்த பிறவியில் செய்த பாவங்கள்), ஆகாம்ய கர்மம் (தற்போதைய செயல்களால் எதிர்காலத்தில் ஏற்பட போகும்காரணமான விளைவுகள்).

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளித்தல், தாய் தந்தையரை கவனித்தல், ஏழைகளுக்கு உதவுதல், அன்னதானம் செய்தல், கோயில்களுக்கு உதவுதல், முன்னோர்களை வழிபடுதல் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் கர்ம வினைகளை குறைக்கலாம்.

Our Other Services