தினசரி வாழ்க்கையில் நம் கால்கள் பெரும் பங்காற்றுகின்றன. தொடர்ந்து நின்று கொண்டோ, நடந்தோ அல்லது ஷூ அணிந்தோ வேலை செய்வதால், பாதங்களில் வியர்வை, அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் சேர்ந்து துர்நாற்றம் வீசக்கூடும். இந்த சங்கடமான பிரச்சனைக்கு தீர்வு காண, சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களை இங்கு காணலாம். உங்கள் பாதங்களை புத்துணர்ச்சியுடன், ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த வழிகாட்டி உதவும்.
சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
உடலை தினமும் குளித்து சுத்தம் செய்வது போல, குளிக்கும்போது கால் பாதங்களிலும் கவனம் செலுத்துங்கள். கால்களை நன்கு சுத்தம் செய்யுங்கள். கால் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தவிர்க்கலாம். வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு அல்லது லிக்விடு சோப் சேர்த்து அதில் பாதங்களை ஊறவைத்து பின் நன்கு தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.
எக்ஸ்ஃபோலியேட் (Exfoliate) செய்யுங்கள்
முகம் மற்றும் சருமத்தை க்ளன்சிங் செய்துவிட்டு வாரத்திற்கு ஒருமுறையேனும் எக்ஸ்ஃபோலியேட் செய்வது போல, கால் பாதங்களையும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையேனும் எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும். ஏனெனில் பாதங்களில் தேங்கியிருக்கும் இறந்த செல்களால் கூட பாக்டீரியா தொற்றுக்கள் அதிகரிக்கலாம். அதனால் துர்நாற்றமும் உண்டாகக்கூடும். அதை தவிர்க்க கட்டாயம் வாரத்திற்கு இரண்டு முறை எக்ஸ்ஃபோலியேட் செய்து இறந்த செல்களை நீக்குங்கள்.
கால்களை உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள்
வெயில் காலத்தில் தூசி மற்றும் மாசுக்கள் மட்டும் இல்லாமல் வியர்வையும் அதிகமாக இருக்கும். அதனால் கால்களை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல பாதங்களைக் கழுவிவிட்டு அப்படியே விடக்கூடாது. நன்கு துணியால் துடைத்து ஈரம் இல்லாமல் உலர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். ஈரமதாக அப்படியே விட்டுவிட்டால் பாக்டீரியா தொற்றுக்கள் உண்டாகும். ஈரப்பதம் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகும். கழுவிய பின், சாக்ஸ் அல்லது காலணிகளை அணிவதற்கு முன் உங்கள் பாதங்கள் முற்றிலும் வறண்டு இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு கால் பொடிகள் அல்லது சோள மாவுகளையும் பயன்படுத்தலாம்.
ஈரப்பதத்தை உறிஞ்சும் சாக்ஸ்
தினமும் ஷூ அணிபவராக இருந்தாலும் சரி, செருப்பு அணிந்தாலும் வெயில் காலத்தில் நீங்கள் சாக்ஸ் அணிவது நல்லது. அப்படி சாக்ஸ் அணியும்போது ஈரத்தை (வியர்வையை) நன்கு உறிஞ்சும் தன்மை கொண்ட காட்டன் மற்றும் சில துணி வகைகளால் ஆன சாக்ஸ்களை தேர்வு செய்து அணியுங்கள். நன்கு காற்று உள்ளே போகும்படி காற்றோட்டமான சாக்ஸ் அணிய வேண்டியது அவசியம். குளிர்காலத்தில் அணியும் திக்கான சாக்ஸ்களை இப்போது அணியாதீர்கள்.
காலணிகளில் மாற்றம்
சிலர் தொடர்ச்சியாக ஒரே காலணிகளை தினமும் அணிவார்கள். அது சௌகரியமாக இருந்தாலும், கால்களில் சில சமயங்களில் தொற்றுக்களை உண்டாக்கும். அதனால் தினமும் ஒரே காலணிகள் அணிவதைத் தவிர்த்து வெவ்வேறு காலணிகளை மாற்றுங்கள். குறைந்தது இரண்டு ஜோடி காலணிகளை மாற்றி மாற்றி பயன்படுத்துங்கள். அதேபோல ஷூ டியோடரைசர்கள் அல்லது நாற்றங்களை நீக்க பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம்.
நேச்சரல் பொருள்கள் பயன்படுத்துங்கள்
மார்க்கெட்டுகளில் நிறைய foot க்ரீம்களும் மாய்ஸ்ச்சரைஸர்களும் கிடைக்கின்றன. ஆனாலும் வீட்டில் இருக்கிற சில இயற்கையான பொருள்களையும் பயன்படுத்துங்கள். குறிப்பாக வினிகரில் சிறிது நீர் கலந்து பயன்படுத்தலாம். அதேபோல டீ ட்ரீ ஆயில் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கால்களில் பரவும் பாக்டீரியாக்களை அழிப்பதோடு துர்நாற்றம் இல்லாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.
நீரேற்றமாக இருங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவைப் பராமரிக்கவும்
ஆரோக்கியமான உணவுமுறையும் நல்ல நீரேற்றத்துடன் இருப்பதும் கூட கால் பாதங்களை வறட்சி இல்லாமலும் துர்நாற்றம் வீசாமலும் வைத்திருக்க அவசியமானது. நிறைய தண்ணீர் குடித்து உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி டீடாக்ஸ் செய்ய உதவும். இதனால் கடுமையான நாற்றங்கள் குறையும். அதிலும் காய்கறி மற்றும் பழங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதால் நல்ல நறுமணமும் வீசும்.
முக்கிய குறிப்புகள்
- தினமும் கால்களை நன்கு சுத்தம் செய்து பராமரிக்கவும்.
- வாரத்திற்கு இருமுறை இறந்த செல்களை நீக்க எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்.
- கால் பாதங்களை ஈரம் இல்லாமல் உலர்வாக வைத்துக் கொள்ளவும்.
- வியர்வையை உறிஞ்சும் காட்டன் சாக்ஸ்களை அணியவும்.
- தொடர்ந்து ஒரே காலணிகளை அணியாமல் மாற்றி அணியவும்.
- வினிகர், டீ ட்ரீ ஆயில் போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தவும்.
- உடலை நீரேற்றமாக வைத்து, ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
உங்கள் உடல் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் ஆன்மீக நல்வாழ்வு குறித்து மேலும் அறிய, Jothidam360 தளத்துடன் இணைந்திருங்கள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் போல, நமது உடலும் ஒரு கோவில். அதை தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் பேணுவது, மன அமைதிக்கும், நல்ல ஜோதிட பலன்களுக்கும் அடிப்படையாகும். இந்த தமிழ் வழிகாட்டியைப் பின்பற்றி உங்கள் பாதங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!