Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

ஆரோக்கியமான ஆயுர்வேத தினசரி பழக்கவழக்கங்கள்: தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், நமது உடல்நலத்தைப் பேணுவது மிகவும் அவசியமாகிறது. ஜோதிடம் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல்களைப் போலவே, தமிழ் மரபின் ஒரு அங்கமான ஆயுர்வேதமும் ஆரோக்கியமான வாழ்வுக்குப் பல அரிய தகவல்களை வழங்குகிறது. இந்த ஆயுர்வேத தினசரி பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், உடல் மற்றும் மனம் இரண்டுமே புத்துணர்ச்சி பெறும்.

ஆயுர்வேதத்தின் தினசரி வழிகாட்டுதல்கள்

உண்மையைச் சொல்லப் போனால் முன்பை போல இப்போதைய வாழ்க்கை முறை இல்லை. எல்லோருமே மிகவும் பரபரப்பாகவே ஓடிக்கொண்டு இருக்கிறோம். எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலே, மூச்சுவிடக் கூட நேரம் இல்லாமால் ஓடிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு இடையில் நீங்கள் ஆரோக்கியமாக ஓட வேண்டாமா? அதற்கு உங்களுடைய உணவுமுறை, உடல் செயல்பாடு (வேலையைத் தாண்டி) பழக்கவழக்கங்கள் எப்படி இருக்கின்றன என்பவை தான் உங்கள் வாழ்க்கையின் ஆரோக்கியமான ஓட்டத்தை தீர்மானிக்கும்.

காலைப் பொழுது - ஆயுர்வேதத்தின் விளக்கம்

ஆயுர்வேதத்தைப் பொருத்தவரையில் காலை என்பது அதிகாலை 3 மணிக்கே தொடங்குகிறது என்கிறார்கள். அதிகாலை 3 மணி முதல் காலை 7.30 மணி வரை தான் காலைப் பொழுது. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களும் மாறி மாறி நிலை பெறும் பொழுது இதுதான். சூரிய உதயத்துக்குப் பின் உடலில் கபம் அதிகமாகும். அதனால் தான் சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

எழுந்ததும் செய்ய வேண்டியவை

காலையில் எழுந்ததும் டீ, காபியில் தான் முழிப்பேன் என்று சொல்பவர் என்றால் இன்றோடு அதை மாற்றி விடுங்கள். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பல் துலக்கி, நாக்கை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி வாய் கொப்பளிக்க வேண்டும். அதையடுத்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்திருக்கும் தண்ணீரைக் குடிக்க வேண்டும். உங்கள் படுக்கைக்கு அருகிலேயே வைத்துக் கொண்டு காலை விழித்ததும் குடித்தாலும் நல்லது தான். இந்த பழமையான முறை ஜீரண மண்டல செயல்பாட்டை சீராக வைத்திருக்கும்.

அதற்கு அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது தியானம் (அ) யோகாசனம். மணிக்கணக்கில் செய்ய வேண்டியதில்லை. 10-15 நிமிடங்கள் செய்தாலே போதும். அப்படி காலையில் யோகாசனம் செய்யும்போது மன அழுத்தம் குறையும். மனம் அமைதியாகும். அதனால் ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கும்.

உணவு முறை - ஆயுர்வேத வழிகாட்டுதல்

இதுதான் உங்கள் அன்றாட வேலைக்கான எனர்ஜியைக் கொடுக்கக்கூடிய முக்கியமான பகுதி. அதில் காலை, மாலை, இரவு உணவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

  • காலை உணவு: காலையில் அரசன் மாதிரி சாப்பிட வேண்டும் என்பார்கள். அதை நாம் நிறைய சாப்பிட வேண்டும் என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம். காலையில் எல்லா வகை ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் சில ஊறவைத்த பாதாம், (அ) பேரிச்சம் பழம். வெண்டைக்காய், மோர், பயறு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அது வயிறு நிறைவாக இருக்கும். சிம்பிளாக சொல்லப்போனால் காலை உணவு உங்களுக்கு மயக்கத்தை தரக்கூடாது. அதற்கு பதிலாக அந்த நாளுக்கான எனர்ஜியை தருவதாக இருக்க வேண்டும்.
  • மதிய உணவு: நண்பகல் 12 - 1 மணி தான் நம் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும் நேரம். அந்த நேரத்தில் தான் நீங்கள் அதிகமாக சாப்பிடலாம். அதிலும் புரதங்கள், கொழுப்பு உணவுகள் எடுத்துக் கொள்வதாக இருந்தால் அதற்கு மதிய நேரம் தான் சரியான நேரம். அதன்பின் வேண்டுமானால் 4 மணியளவில் ஒரு சிற்றுண்டி எடுக்கலாம். அதுவும் அதிகமாக எடுக்கக் கூடாது. ஏதேனும் ஒரு பழம் எடுக்கலாம். நொறுக்குத் தீனி பக்கம் போகவே கூடாது.
  • இரவு உணவு: 7 மணி. அதிகபட்சமாக 7.30 முதல் 8 மணிக்குள் இருக்க வேண்டும். அதற்கு மேல் எடுக்கக் கூடாது.

உடற்பயிற்சி செய்ய சரியான நேரம்

பொதுவாகவே இந்த சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். உடற்பயிற்சி காலையில் செய்வது நல்லதா அல்லது மாலையில் செய்வது நல்லதா என்று. ஆயுர்வேதத்தை பொருத்தவரையில் ஜாகிங், வாக்கிங், ஜிம் பயிற்சிகள் போன்றவற்றுக்கு சரியான நேரம் மாலை நேரம் தான் என்கிறது. அதாவது மாலை 5 மணி முதல் 7 மணி வரை தான் உடற்பயிற்சிக்கான நேரம். அதற்கு பிறகு உடற்பயிற்சி செய்யக் கூடாது. 7 மணிக்கு மேல் சிறிது நேரம் அமைதியாக இருக்கப் பழகுங்கள். மெயில், ரீல்ஸ், சாட் என போன் பார்ப்பதை நிறுத்திவிட்டு சிறிது நேரம் இசை கேளுங்கள். அதன்பிறகு உங்கள் இரவு உணவுக்குச் சென்றுவிட வேண்டும். அப்போது தான் தூக்க சுழற்சியும் ஜீரண செயல்பாடும் சீராக இருக்கும்.

இரவு ஓய்வின் முக்கியத்துவம் (10 PM - 2 AM)

இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இந்த 4 மணி நேரம் மிக மிக முக்கியமான நேரம். நீங்கள் எவ்வளவு நேரம் தூங்கினாலும் சரி, எவ்வளவு நேரம் விழித்திருந்தாலும் சரி இரவு 10 முதல் அதிகாலை 2 வரை விழித்திருக்கவே கூடாது என்கிறது ஆயுர்வேதம். ஏனென்றால் பகலை விட இந்த நேரத்தில் தான் நம் உடல் மெக்கானிசம் பல முக்கியமான, கடினமான வேலைகளைச் செய்கிறது. உடல் தனக்குத்தானே ரிப்பேர் செய்து கொள்ளும் நேரம் இது. தன்னைத் தானே பழுதுபார்த்து, மீட்டமைத்து மீளுருவாக்கம் செய்யும் நேரம்தான் இந்த 4 மணி நேரம். அதனால் எப்படியாவது 10 மணிக்கு முன்பாக தூங்கப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல் தூங்கும் இடம் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உடல் மட்டுமின்றி மூளைக்கும் ஒய்வு கிடைக்கும். அடுத்த நாள் காலையில் மிக மிக உற்சாகத்துடனும் புத்துணர்வுடனும் தொடங்க முடியும்.

இறுதியாக, மேற்கண்ட முறையில் உங்களுடைய தினசரி நாளை தொடங்கி, இரவு வரை பின்பற்றி வந்தாலே எந்த ஆரோக்கியப் பிரச்சினைகளும் குறிப்பாக வளர்சிதை மாற்றப் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். குறிப்பாக குடல் இயக்கமும் வளர்சிதை மாற்றமும் சீராக இருக்கும். இந்த அடிப்படை தான் உங்கள் வாழ்க்கையை இனிமையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றும். முருகன் அருளால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெற, இந்த ஆயுர்வேத வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதுடன், ஆன்மீகப் பயணங்களையும் மேற்கொள்ளலாம். குறிப்பாக, ஆறுபடை வீடுகள் அல்லது பிற முருகன் ஆலயங்கள் சென்று வருவது மன அமைதிக்கு வழிவகுக்கும்.

முக்கிய ஆயுர்வேத தினசரி குறிப்புகள்

  • அதிகாலை 3-7:30 மணிக்குள் விழிப்பது.
  • பல் துலக்கி, நாக்கை சுத்தம் செய்து, எண்ணெய்க் கொப்பளிப்பு (Oil Pulling) செய்வது.
  • செம்பு பாத்திரத்தில் உள்ள நீரைக் குடிப்பது.
  • 10-15 நிமிடங்கள் தியானம் அல்லது யோகாசனம்.
  • காலை உணவை சத்து நிறைந்ததாக, மதிய உணவை பிரதானமாகவும், இரவு உணவை இலகுவாகவும், 7-8 மணிக்குள் முடிப்பது.
  • மாலை 5-7 மணிக்குள் உடற்பயிற்சி செய்வது.
  • இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கட்டாயம் உறங்குவது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

காலை உணவு தான் அன்றைய நாளுக்கான சக்தியை வழங்குகிறது. இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும், வயிறு நிறைவாகவும் அதே சமயம் மயக்கம் தராததாகவும் இருக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஆயுர்வேதம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது போல, முருகன் ஆலயங்கள் மற்றும் ஆறுபடை வீடுகள் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வது மன அமைதியையும் ஆன்மீக பலத்தையும் அளிக்கும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் முழுமையான மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். ஜோதிட ரீதியாகவும் இத்தகைய வழிபாடுகள் நன்மை பயக்கும்.

Our Other Services