Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

திருப்பதி தரிசன ரகசியங்கள்: திருப்பம் தரும் பெருமாள் அருள்!

திருப்பதிக்கு செல்வதை வெறும் சுற்றுலா பயணமாக எண்ணாமல், உண்மையான பக்தியுடன் ஸ்ரீ வெங்கடேச பெருமாளை தரிசித்தால் வாழ்வில் எண்ணற்ற நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் பெறலாம். 'திருப்பதி சென்றால் திருப்பம் வரும்' என்பது வெறும் வார்த்தையல்ல, பலரின் வாழ்வில் நிஜமாகவே நடந்த அனுபவம் ஆகும். இதில் உள்ள ஆன்மீக மற்றும் அறிவியல் ரகசியங்களை இங்கே அறிவோம்.

திருப்பதி தரிசனம்: வாழ்வில் திருப்பம் தரும் ரகசியங்கள்

திருப்பதி என்றாலே கூட்டம் தான் முதலில் நினைவிற்கு வரும். பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும் என்பதற்காகவே திருப்பதி செல்வதையே பலர் தவிர்ப்பதும் உண்டு. அப்படி இருக்கும் போது, எதனால் திருப்பதி சென்று வந்தால் மட்டும் வாழ்க்கையில் திருப்பம் என்கிறார்கள்? இதில் அப்படி என்ன ரகசியம் உள்ளது என்பதை நாமும் தெரிந்து கொள்ளலாம்.

திருமலையின் சிறப்பு: இந்தியாவில் சந்திரனின் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரனின் சக்தி அதிகம் நிறைந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும்.

ஸ்ரீராமானுஜர் யந்திர சக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர். கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும் என சொல்லப்படுகிறது.

பிரபஞ்ச சக்தி மற்றும் ஆரோக்கிய நன்மைகள்: பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது. இதனால் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.

வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது. தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும், மக்கள் கூட்டம் அலைமோதும், செல்வம் மலை போல குவியும் என்பது ஐதீகம். உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள் தான். சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால் தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள். அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

திருப்பதி மலை ஏறி செல்வதன் நன்மைகள்

வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது. நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும். சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும். திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

யாரெல்லாம் ஏழுமலையானை வழிபடலாம்?

அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம். அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம். அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது. ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம். அப்படி செய்யும் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும்.

திருப்பதி ஏழுமலையானை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும். சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய லக்னம் உடையவர்கள் வருடம் ஒரு முறை மட்டும் சென்று வருவது சிறப்பு.

திருப்பதி ஏழுமலையான் அருள் பெற மந்திரங்கள்

ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் அருளைப் பெற சில சக்திவாய்ந்த மந்திரங்கள் இங்கே:

  • "ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ" - இந்த மந்திரத்தை தினமும் சொன்னால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
  • "ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம் ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்"
  • "ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித, வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!"

இந்த மந்திரங்களை தினமும் சொன்னால் அளவில்லாத செல்வத்தையும், வேண்டும் வரங்களையும் வெங்கடேச பெருமாள் அள்ளிக் கொடுப்பார் என்பது நம்பிக்கை.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

திருப்பதி சந்திரனின் தாக்கம் அதிக அளவில் உள்ள இடமாக கருதப்படுகிறது. இங்குள்ள பிரபஞ்ச சக்தி நமது மூளை செயல்பாட்டை மேம்படுத்தி தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. மேலும், ஸ்ரீராமானுஜர் பதித்த யந்திர சக்ரங்களும், மூலிகைகளின் சக்தியும் மன அமைதி மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கின்றன.

திருப்பதி மலை ஏறுவது அக்குபஞ்சர் சிகிச்சைக்கு ஒப்பானது. இது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, மூலாதார சக்கரங்களை நன்கு சுழலச் செய்கிறது. குறிப்பாக சந்திர தசை, புக்தி உள்ளவர்கள், தோல் நோய், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்த பரிகாரமாகும்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய லக்னம் உடையவர்கள் அடிக்கடி திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட வேண்டும். சிம்மம், தனுசு, கும்பம் லக்னம் உடையவர்கள் வருடத்திற்கு ஒருமுறை செல்வது சிறப்பு.

ஆம், குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி வெங்கடேச பெருமாளை தங்கள் குல தெய்வமாக ஏற்று வழிபடலாம். அவர் கலி காலத்திலும் பக்தர்களுக்கு உதவி செய்பவராக கருதப்படுகிறார்.

Our Other Services