சிவபெருமானின் வாகனமாக விளங்கும் நந்தி பகவான், பிரதோஷ காலத்தில் வழிபடுவோருக்கு அளவற்ற அருளைப் பொழிகிறார். இந்த பிரதோஷ நந்தி 108 போற்றி மந்திரங்கள், நந்தியின் பல்வேறு நாமங்களையும் குணங்களையும் போற்றிப் பாடி, பக்தர்களுக்கு மன அமைதியையும், வாழ்வில் நன்மைகளையும் வழங்கும் ஆற்றல் கொண்டவை. இந்த போற்றிகளை பக்தியோடு பாராயணம் செய்வதன் மூலம், நந்தி தேவரின் பரிபூரண அருள் மற்றும் ஜோதிட ரீதியான நற்பலன்களைப் பெறலாம்.
பிரதோஷ நந்தி 108 போற்றி மந்திரங்கள்
- 1. ஓம் அன்பின் வடிவே போற்றி
- 2. ஓம் அறத்தின் உருவே போற்றி
- 3. ஓம் அகிலத்தை காப்பாய் போற்றி
- 4. ஓம் அரனுக்கு காவலனே போற்றி
- 5. ஓம் அரியாய் வந்து அமர்ந்தவனே போற்றி
- 6. ஓம் அம்பலக் கூத்தனே போற்றி
- 7. ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி
- 8. ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி
- 9. ஓம் இடபமே போற்றி
- 10. ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி
- 11. ஓம் இகபரசுகம் அளிப்பவனே போற்றி
- 12. ஓம் ஈகை உடையவனே போற்றி
- 13. ஓம் உலக ரட்சகனே போற்றி
- 14. ஓம் உபதேச காரணனே போற்றி
- 15. ஓம் ஊக்க முடையவனே போற்றி
- 16. ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி
- 17. ஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றி
- 18. ஓம் ஏவல்கள் ஒழித்தவனே போற்றி
- 19. ஓம் ஐயம் பால் அமர்ந்தவனே போற்றி
- 20. ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
- 21. ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி
- 22. ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி
- 23. ஓம் கணநாயகனே போற்றி
- 24. ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி
- 25. ஓம் கல்யாண மங்களமே போற்றி
- 26. ஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றி
- 27. ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி
- 28. ஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றி
- 29. ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி
- 30. ஓம் காலனுக்கும் காவலனே போற்றி
- 31. ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி
- 32. ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி
- 33. ஓம் குணநிதியே போற்றி
- 34. ஓம் குற்றம் களைவாய் போற்றி
- 35. ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி
- 36. ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி
- 37. ஓம் கைலாச வாகனனே போற்றி
- 38. ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி
- 39. ஓம் காமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி
- 40. ஓம் பஞ்சாக்ஷர ஜெபம் செய்பவனே போற்றி
- 41. ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவன் ஆனாய் போற்றி
- 42. ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி
- 43. ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி
- 44. ஓம் பிரதோஷ காலம் உடையவனே போற்றி
- 45. ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
- 46. ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி
- 47. ஓம் புகழ்கள் பல பெற்றோய் போற்றி
- 48. ஓம் பூத கணங்களுக்குத் தலைவனே போற்றி
- 49. ஓம் பூத பிசாசுகளை அடக்குவாய் போற்றி
- 50. ஓம் மகாதேவனே போற்றி
- 51. ஓம் மகிமை பல செய்வாய் போற்றி
- 52. ஓம் மஹேஸ்வரன் தூதனே போற்றி
- 53. ஓம் மங்கள நாயகனே போற்றி
- 54. ஓம் மதோன் மத்தம் தடுப்பாய் போற்றி
- 55. ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி
- 56. ஓம் மணங்கள் செய்காரணனே போற்றி
- 57. ஓம் மந்திர மகிமை உனக்கே போற்றி
- 58. ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி
- 59. ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி
- 60. ஓம் தண்டங்களின் மேல் அமர்ந்தாய் போற்றி
- 61. ஓம் தன்மைகமெல்லாம் அறிந்தோய் போற்றி
- 62. ஓம் தயாபரன் அருள் பெற்றவனே போற்றி
- 63. ஓம் தஞ்ச மென்றவர்கருள் செய்வாய் போற்றி
- 64. ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி
- 65. ஓம் நாக நந்தனின் நயனம் தெறிந்தவனே போற்றி
- 66. ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி
- 67. ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி
- 68. ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி
- 69. ஓம் பாரெல்லாம் உன்புகழ் போற்றி
- 70. ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி
- 71. ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி
- 72. ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி
- 73. ஓம் ஆதாரசக்தி மயம் பெற்றாய் போற்றி
- 74. ஓம் சிவனின் வாகனம் ஆனாய் போற்றி
- 75. ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி
- 76. ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி
- 77. ஓம் நீலாயதாட்சி அருள் பெற்றாய் போற்றி
- 78. ஓம் நீலகண்டன் முன் நின்றாய் போற்றி
- 79. ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி
- 80. ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி
- 81. ஓம் வித்யா காரணனே போற்றி
- 82. ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி
- 83. ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி
- 84. ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி
- 85. ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி
- 86. ஓம் வேல் உடையவனே போற்றி
- 87. ஓம் மகா காளனே போற்றி
- 88. ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி
- 89. ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி
- 90. ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி
- 91. ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி
- 92. ஓம் உன்மகிமை உலகமெல்லாம் போற்றி
- 93. ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி
- 94. ஓம் ஊடலுக்குதவியனே போற்றி
- 95. ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி
- 96. ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி
- 97. ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி
- 98. ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி
- 99. ஓம் மாயை ஏடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி
- 100. ஓம் மாமன்னநம் உன்பனி செய்வார் போற்றி
- 101. ஓம் மகாதேவன் கருணையே போற்றி
- 102. ஓம் பரப்பிரம்மமே போற்றி
- 103. ஓம் விண்ணோர்க்கு அரிய மருந்தே போற்றி
- 104. ஓம் கண்டனின் வாகனமானாய் போற்றி
- 105. ஓம் சிவனின் பாதியை சுமந்தாய் போற்றி
- 106. ஓம் கையிலையின் காவலனே போற்றி
- 107. ஓம் மக்கள் குறைதீர்ப்பாய் போற்றி
- 108. ஓம் பிரதோஷ நாயகனே போற்றி போற்றி
நந்தி வழிபாட்டின் சிறப்புப் பலன்கள்
- இடர்களை நீக்கி, வாழ்வில் நல்ல திருப்பங்களை உண்டாக்கும்.
- மன நிம்மதி, ஆரோக்கியம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும்.
- பிரதோஷ வேளையில் நந்தியை வழிபடுவது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.
- நீண்ட ஆயுள், செல்வம் மற்றும் நல்ல சந்தான பாக்கியம் கிட்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சிவபெருமானின் வாகனமாக போற்றப்படும் நந்தி தேவர், பிரதோஷ காலத்தில் முக்கியமாக வழிபடப்படுபவர். இவரை பிரதோஷ நந்தி என்பர்.
பிரதோஷ வேளையில் சிவபெருமான் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையில் தாண்டவமாடுவதாக ஐதீகம். இக்காலத்தில் நந்தியை வழிபடுவது அனைத்து தோஷங்களையும் நீக்கி நற்பலன்களைத் தரும். ஜோதிட ரீதியாகவும் இது மிகவும் உகந்த நேரம்.
இந்த போற்றிகளை தினமும் காலையிலோ அல்லது பிரதோஷ வேளையிலோ பக்தியுடனும், சுத்தமான மனதுடனும் உச்சரிக்கலாம். இது நந்தி தேவரின் அருளைப் பெற்றுத் தரும்.
மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த நேரத்தில் சிவபெருமானையும் நந்தியையும் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.