தமிழர்களின் தொன்மை வாய்ந்த பாரம்பரியத்தில் பெண்களுக்கு வளையல் அணிவது என்பது வெறும் ஆபரணம் அல்ல, அது ஒரு மங்கலச் சின்னம். ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், ஏன் அறிவியல் ரீதியாகவும் கூட வளையல்கள் அணிவதன் மூலம் பல அற்புதமான பலன்கள் கிட்டும் என நம் முன்னோர்கள் வகுத்துச் சென்றுள்ளனர். ஜாதகம் மற்றும் தினசரி வாழ்வில் இதன் தாக்கம் குறித்து நாம் இங்கே விரிவாக காண்போம்.
வளையல் அணிவதன் முக்கியத்துவம்
நம்முடைய சாஸ்திரங்களில், பெண்கள் கைகளில் வளையல், காலில் கொலுசு, தலையில் பூ, நெற்றியில் குங்குமம் இல்லாமல் இருக்கக் கூடாது என சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவைகள் அவற்றை அணியும் பெண்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் வாழும் குடும்பத்திற்கும் ஏராளமான பலன்களை தரும் என சொல்லப்படுகிறது.
திருமணமானப் பெண்கள் மட்டுமல்ல திருமணம் ஆகாத பெண்களும் கையில் வளையல் அணியாமல் இருக்கக் கூடாது. வளையல் அணிவதற்கு அறிவியல் ரீதியாகவும் சில காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, வளையல் அணியும் போது மணிக்கட்டுக்கு கீழே இருக்கும் பகுதியில் இருப்பதால் வர்ம புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதனால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.
ஆன்மிக ரீதியாக வளையல் அணிவதற்கு மட்டுமல்ல, எந்த நிறத்தில் எந்த எண்ணிக்கையில் வளையல்களை அணிகிறோம் என்பதை பொறுத்தும் பலன்கள் சொல்லப்படுகிறது. பெண்கள் கண்ணாடி வளையல் அணிவது மங்களத்தை ஏற்படுத்தும். வளையல் ஓசை சத்தத்திற்கு அவர்களை தீய சக்திகள் நெருங்காது.
வளையல் நிறங்களும் அதன் சிறப்புப் பலன்களும்
- பச்சை நிற வளையல்: லட்சுமி கடாட்சம் மற்றும் வாழ்வில் அமைதியைத் தரும்.
- சிவப்பு நிற வளையல்: சக்தி அதிகரிக்கும், கண் திருஷ்டி விலகும்.
- ரோஸ் நிற வளையல்: வாழ்வில் எடுத்த காரியம் எளிதாக நிறைவேறும்.
- மஞ்சள் நிற வளையல்: நேர்மறை எண்ணங்களால் ஈர்க்கப்படுவார்கள்.
- பழுப்பு நிற வளையல்: காரிய வெற்றி உண்டாகும்.
- வெளிர் நீல நிற வளையல்: உடல் உஷ்ண பாதிப்புகள் குறையும்.
- வெள்ளை நிற வளையல்: அன்பும், பாசமும் நிறைந்திருக்கும்.
எந்த காரணத்திற்காக பெண்கள் கருப்பு நிறத்தினாலான வளையல்களையோ மரம், பிளாஸ்டிக், இரும்பு, ரப்பர் போன்றவற்றால் ஆன வளையல்களை அணியக் கூடாது. மாறாக தங்கம், வெள்ளி வளையல்களை அணியலாம். இது தமிழர்களின் ஜோதிட நம்பிக்கையுடன் தொடர்புடையது.
வளையல் எண்ணிக்கையும் அதன் பலன்களும்
- இரண்டு வளையல்: குடும்பத்திற்கு நன்மை உண்டாகும்.
- மூன்று வளையல்: சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
- நான்கு வளையல்: அணியக் கூடாது.
- ஐந்து வளையல்: பணப் பிரச்சனை தீரும்.
- ஆறு வளையல்: வசதி வாய்ப்புகளுக்கு குறை வராது.
அதே போல் புதிதாக வளையல் வாங்க செல்லும் போது அதற்கென குறிப்பிடப்பட்ட நாட்களில் சென்று வாங்க வேண்டும். முக்கியமாக செவ்வாய்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வளையல்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதே போல் புதிய வளையல்களை அணியும் போது உச்சிப் பொழுது மற்றும் இரவு நேரங்களில் அணிவதை தவிர்க்க வேண்டும்.
பெண்கள் எப்போதும் இரண்டு கைகளிலும் வளையல் அணிய வேண்டும். இரவு நேரங்களில் கைகளில் இருந்து வளையலை கழற்றக் கூடாது. அதே போல் கையில் வளையல் அணியாமல் விளக்கேற்றக் கூடாது. இவைகள் குடும்பத்திற்கு தீமையான பலன்களையே ஏற்படுத்தும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.