Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

நவராத்திரி விரதம்: ஆண்கள் விரதமிருக்கலாமா?

நவராத்திரி விரதம் யார் யார் இருக்கலாம்? குறிப்பாக ஆண்கள் நவராத்திரி விரதம் மேற்கொள்வது சரியா? ஆண்கள் நவராத்திரி விரதம் இருந்து வழிபாடுகள் செய்வதன் சிறப்புகள் என்ன? நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை எப்படி வழிபட்டு அருளைப் பெறுவது என்பதை ஜோதிடம்360 உடன் தெரிந்துகொள்ளலாம்.

நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரி விழா என்பது பெண் சக்தியை போற்றிக் கொண்டாடும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகையை ஒவ்வொரு விதமாக அலங்கரித்து, ஒவ்வொரு வடிவத்தையும் வழிபட வேண்டும். இந்த ஆண்டு நவராத்திரி விழா செப்டம்பர் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 01ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. பத்தாவது நாளான அக்டோபர் 02ம் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது.

நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை மகேஸ்வரியாக வழிபட வேண்டும். ஸ்ரீ மகேஸ்வரி அம்மன் காயத்ரி மந்திரம்:

"ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்"

நவராத்திரி முதல் நாள் என்ன செய்ய வேண்டும்?

நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும், அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக் கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள் மற்றும் ஆன்மீக தகவல்கள். சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம், இந்த நவராத்திரி விரதம்.

  • அரிசி மாவில் பொட்டுக் கோலம்: நவராத்திரியின் முதல் நாள் அரிசி மாவில் பொட்டுக் கோலமிட வேண்டும்.
  • தோடி ராகம்: மிருதங்கம் வாசிக்கத் தெரிந்தவர்கள் தோடி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது.
  • இரண்டு வயது குழந்தை: முதல் நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும்.
  • வில்வத்தால் அர்ச்சனை: அன்று அம்பிகையை வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பான பலனை அருளும்.
  • வெண்பொங்கல் நைவேத்தியம்: முதல்நாள் அம்பிகைக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து, கொலுவைப் பார்க்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இதனால் அளவற்ற நன்மைகள் நமக்கு ஏற்படும்.
  • குமாரி பூஜை பலன்கள்: முதல்நாள் அம்பிகையை குமாரியாக பூஜித்தால் நமக்கு எதிரி, கடன் போன்ற தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதுடன் ஆயுள் விருத்தியும் செல்வ விருத்தியும் ஏற்படும் என்பது நம்பிக்கை.

ஆண்களும் நவராத்திரி விரதம் இருக்கலாமா?

சர்வமும் சக்தி மயம் என்ற தத்துவ அடிப்படையில் நவராத்திரி கொலு வைத்து கொண்டாடப்படுகிறது. கொலு வைத்து வணங்கினால் அனைத்து அம்சங்களுடன் அம்பிகை அந்த வீட்டில் எழுந்தருளுவார் என்பது நம்பிக்கை. நவராத்திரி பண்டிகை கொண்டாடினால் உடம்பிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். தோஷங்கள் நீங்கும்.

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் விரதம் இருந்து கொண்டாடினால் நோய் நொடிகள் தீரும், மன அமைதி பெருகும். புரட்டாசியில் கொண்டாடும் நவராத்திரியை, சாரதா நவராத்திரி என்பர். சித்திரை, புரட்டாசி மாதங்களில் வெயில், மழையினால் ஏற்படும் நோயிலிருந்து காப்பதற்காகவே சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியில் திருப்பதி பெருமாள் வழிபாடு

புரட்டாசியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட சீனிவாச பெருமாளை அடைவதற்காக, மகாலட்சுமி தாயார் அலமேலுமங்கை என்ற திருநாமத்துடன் எழுந்தருளினார். பெருமாளை அடைவதற்காக அவர் 9 நாட்கள் விரதம் இருந்து ஏழுமலையானை அடைந்தார். இதன் காரணமாகவே நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று கூறப்படுகிறது.

கல்வி, செல்வம், வீரத்திற்காக கலைமகள், மலைமகள், அலைமகளை வணங்குகிறோம். நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும். கொலுவைத் திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகங்களினால் நன்மைகளும் ஏற்படும்.

நவராத்திரி வழிபாட்டு பலன்கள்

  • திருமண பாக்கியம்: இந்த விரதம் மேற்கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும்.
  • மாங்கல்ய பலம்: மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.
  • மங்கலப் பொருட்கள் தானம்: சுமங்கலி பெண்களுக்கு நவராத்திரி பண்டிகை நாட்களில் மங்கலப் பொருட்களை தானம் கொடுக்க நன்மைகள் நடக்கும்.
  • ஆண்களுக்கும் சக்தி: இது பெண்கள் மட்டுமே கொண்டாடும் பண்டிகை அல்ல. ஆண்களும் விரதம் இருந்து கொண்டாடினால் சக்தியும் அதிகரிக்கும். காரணம் அசுரனை அழிக்க அனைத்து சக்திகளும் ஆண் தெய்வங்களின் மூலம் உருவானவர்கள் தான்.

நவராத்திரி வழிபாட்டினை ஆண்கள் ஏன் செய்ய வேண்டும்?

நவ சக்திகள் பிரம்மனின் மூலம் உருவான பிராஹ்மணி, சிவன் மூலம் உருவான மகேஸ்வரி, விஷ்ணுவிடம் இருந்து உருவான வைஷ்ணவி, முருகனிடம் இருந்து உருவான கவுமாரி, வராக மூர்த்தியிடம் இருந்து உருவான வாராஹி, நரசிம்மர் மூலம் உருவான நரசிம்ஹி, இந்திரன் மூலம் உருவான இந்திராணி என அனைத்து சக்தி ரூபாங்களும் ஆண் தெய்வங்களின் மூலம் சக்திகளையும் ஆயுதங்களையும் பெற்று அசுரனை எதிர்த்து போரிட்டு அசுர வதம் செய்தனர். எனவே இந்த நவராத்திரி பண்டிகையை ஆண்களும் கொண்டாடலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

நவராத்திரி விரதத்தை ஆண்கள், பெண்கள் என அனைவரும் மேற்கொள்ளலாம். இது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளித்து, தோஷங்களை நீக்கும்.

நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை மகேஸ்வரியாக பாவித்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து, வெண்பொங்கல் நைவேத்தியம் படைக்க வேண்டும். அரிசி மாவில் கோலமிட்டு, தோடி ராகம் இசைப்பதும் சிறப்பு.

அனைத்து சக்தி ரூபாங்களும் ஆண் தெய்வங்களின் மூலம் சக்திகளையும் ஆயுதங்களையும் பெற்று அசுரனை எதிர்த்து போரிட்டு அசுர வதம் செய்ததால், ஆண்களும் இந்த நவராத்திரி பண்டிகையை கொண்டாடுவது சக்தி அதிகரிக்கும்.

Our Other Services