முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் அள்ள அள்ள குறையாத நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காண்போம். குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் முருகன் ஆலயங்கள் அல்லது வீட்டில் செய்யும் பூஜை பலன்களை முருகன் அடியார்கள் அறிந்து கொள்ளலாம். ஜோதிடம் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.
அறுபடை வீடு கொண்ட முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் ஆறுமுகனின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு செய்யப்படும் எந்த ஒரு விஷயத்தையும் ஆறாக செய்வது, நம் வேண்டுதல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு வழிமுறையாகும். கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய மகா சஷ்டி விரத நாளில் 6 நாட்கள் தொடர்ந்து விரதத்தை கடைபிடிப்பது வழக்கம். இந்நாட்களில் முருகனின் மந்திரங்களை உச்சரித்து, முருகனை நினைத்து உண்ணாமல் நோன்பு இருந்து குழந்தைக்காக பெண்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம்.
சஷ்டி நாட்களில் மட்டும் அல்லாமல், பொதுவாக செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்கு விரதமிருந்து முருகனுடைய திருவிளையாடல்களை படித்து, திருப்புகழ் பாடி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்பவர்களுக்கு, முறையாக விரதம் இருப்பவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்களை வாரி வழங்குகிறார். குறிப்பாக குழந்தைப் பேறு உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகன் படத்தை வைத்து அவருக்கு ஆறு விதமான நைவேத்தியங்கள் படைத்து, 6 புதிய அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, மனதார முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும். ஷட்கோண கோலமிட்டு விளக்கு ஏற்றுவதும், வெற்றிலை தீபம் ஏற்றுவதும் நல்ல பலன் கிடைக்கும்.
சொந்த வீடு கட்ட வேண்டும், சொந்த நிலம் வாங்க வேண்டும் என்கிற ஆசை உடையவர்களுக்கு செவ்வாய் பகவானுடைய அருள் தேவை. செவ்வாய் காரகத்துவம் பெற்ற வீடு பேறு அமைய, அவருடைய அதிபதியாக விளங்கும் முருகனை வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்கு ஆறு விளக்குகள் செவ்வாய் தோறும் ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு விரைவிலேயே சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
வீட்டில் அடிக்கடி கணவன்-மனைவிக்குள் சண்டை, கருத்து வேறுபாடு ஆகியவை நிலவினால் வீட்டில் எளிமையான முருகன் பரிகாரத்தை மேற்கொள்ளலாம். சாதாரணமாக எல்லோருடைய வீடுகளிலும், முருகனுடைய படம் நிச்சயம் இருக்கும். அந்த படத்திற்கு தம்பதியராக சேர்ந்து மாலை இட்டு, புதிய 6 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, முருகன் மந்திரங்களை உச்சரித்து ஒன்றாக பூஜை செய்தால் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து, மன ஒற்றுமை நிச்சயம் ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சியும் நிலைக்கும். கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், ஒரு முறை செய்து பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியப்படும் விஷயங்கள் எல்லாம் நடக்கும்.
வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு சஷ்டி திதிகளில் முருகனை இவ்வாறு வழிபட்டு வர, எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும். அது மட்டுமல்லாமல் அடிக்கடி முருகன் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து வருபவர்களுக்கும், எண்ணற்ற நன்மைகள் நடைபெறும். கலியுகத்தில் காக்கும் கடவுளாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முருகனுக்கு பழனி என்றால் விருப்பம் தான். அறுபடை வீடுகளில் பழனியில் இருக்கும் நவபாஷாண சிலை இன்றும் விஞ்ஞானிகள் வியக்கும் ஒரு அதிசயம் தான். எனவே வாரந்தோறும் முருகப் பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபட்டு வந்தால் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிசய மாற்றங்கள் நடப்பதை காண முடியும்.
ஆறு விளக்குகள் ஏற்றி முருகனை வழிபடுவதால் கிடைக்கும் முக்கிய பலன்கள்
- குழந்தைப் பேறு: குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு பூஜை செய்து பலன் பெறலாம்.
- செல்வ செழிப்பு: முருகனின் அருளால் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும்.
- சொந்த வீடு யோகம்: செவ்வாய் பகவானின் அருளால் விரைவிலேயே சொந்த வீடு அமையும்.
- கணவன் மனைவி ஒற்றுமை: குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி மன ஒற்றுமை உண்டாகும்.
- எண்ணிய காரிய சித்தி: முருகனுக்கு உகந்த நாட்களில் வழிபடுவதால் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஈடேறும்.
- பொது நலன்கள்: முருகன் ஆலயங்கள் சென்று தரிசிப்பதும், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் எண்ணற்ற நன்மைகளைத் தரும்.