Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

மழைக்கால டீடாக்ஸ்: உடல் ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேத மூலிகை தேநீர் வழிகாட்டி

மழைக்காலம் என்பது பலருக்கும் உடல்நல சவால்களைக் கொண்டு வரும். இந்நேரத்தில் செரிமானக் கோளாறுகள், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். நம்முடைய பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில், மழைக்கால நோய்களைத் தடுக்கவும், உடலை நச்சு நீக்கவும் பல சிறந்த மூலிகை தேநீர் வகைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டியில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஆயுர்வேத டீ வகைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மழைக்காலத்தில் உடல் நலன் ஏன் முக்கியம்?

மழைக்காலம் வந்துவிட்டால் அங்கங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். கொசுக்கள் வரத் தொடங்கிவிடும். அதனால் சாதாரண சளி, காய்ச்சல் தொடங்கி ஜீரணக் கோளாறு, டெங்கு, மலேரியா, தொண்டை வலி, ஸ்கின் அழற்சி, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனம்னு நிறைய பிரச்சினைகள் வரும்.

நோயெதிர்ப்பு மண்டல பலவீனத்தை எப்படி உணரலாம்?

நம்முடைய செரிமான ஆற்றலுக்குத் தேவையான சக்தி நெருப்பு. ஆனால் மழைக்காலத்தில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தால் செரிமானம் பாதிக்கப்படும். செரிமானம் பாதிக்கப்படும் போது நச்சுக்கள் உடலில் சேரத் தொடங்கி விடும். நச்சுக்கள் சேரத் தொடங்கும்போது உடல் சோர்வடையத் தொடங்கும். அதனால் சிலருக்கு உடலே வீக்கமாக இருப்பது போலத் தோன்றும். மழை பெய்யும் போது உடல் அதிக சோம்பேறித்தனமாக இருக்கும். சாப்பிட்டு முடித்ததுமே வாய்வுத் தொல்லை மற்றும் வயிறு வீக்கம் ஆகியவை ஏற்படும். இருமல், சளி, காய்ச்சல் மட்டுமின்றி சிலருக்கு வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தும். இரவில் தூக்கத்தில் இடையிடையே விழிப்பது, தூக்கமின்மை, இரவில் உடல் ஆற்றலே இல்லாமல் இருப்பது போன்றவை இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் உண்டானால் உங்கள் உடல் பலவீனமாக இருப்பதோடு நோயெதிர்ப்பு அமைப்பும் பலவீனமாக இருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

உடலை டீடாக்ஸ் செய்ய உதவும் மூலிகை டீ வகைகள்:

துளசி டீ

துளசி ஒரு புனித தாவரம். ஆயுர்வேதத்தில் மிக முக்கியமான மூலிகை இது. இந்த துளசியில் டீ செய்து குடிக்கும் போது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். நோயெதிர்ப்பு மண்டலம் பலப்படும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்தும். சுவாசப் பாதை தொற்றுக்களை நீக்கும். செரிமான ஆற்றலை மேம்படுத்தும். இதனால் பருவ காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கள் குறையும்.

ஆவாரம்பூ டீ

ஆவாரம்பூ டீ என்றாலே அது சர்க்கரை நோயாளிகள் மட்டும் குடிக்கிற டீ என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது அப்படியல்ல. ஆவாரம்பூ ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றும். அதேபோல சருமப் பிரச்சினைகளைச் சரிசெய்வது, சருமத்தை டீடாக்ஸ் செய்வது ஆகிய வேலைகளை இது செய்கிறது. மழைக்காலங்களில் இந்த டீயை குடிப்பதால் உடல் சூடு குறையும். ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ஸ்கின் பளபளப்பாக்கும். எல்லாவற்றையும் விட மழைக்காலங்களில் உண்டாகிற சளி, இருமல் மற்றும் உடல் சோர்வு ஆகியவை நீங்கும்.

திரிகடுகு டீ

திரிகடுகு என்பது வேறொன்றுமில்லை. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மூலிகைகளின் கலவை தான். இந்த மூன்றையும் சேர்த்து பொடி செய்து டீயாக செய்து குடித்து வரும்போது உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். செரிமான ஆற்றலை மேம்படுத்தும். மார்பு சளி, சைனஸ் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு தரும். குறிப்பாக மழைக்காலங்களில் ஒட்டுமொத்த உடலையுமே கதகதப்பாக வைத்திருக்க உதவி செய்யும்.

செம்பருத்தி டீ

செம்பருத்தி பூ டீ குடிப்பது இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இது குடித்ததும் உடனடி புத்துணர்ச்சியைக் கொடுக்கும். செம்பருத்தி டீயை மழைக்காலத்தில் எடுத்துக் கொள்ளும் போது சருமம் பளபளப்பாகும். உடல் எடை குறையும். ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க முடியும். இன்னும் ஏராளமான நன்மைகளைத் தரும். ஒட்டுமொத்த உடலையுமே டீடாக்ஸ் செய்யும்.

கொய்யா இலை டீ

கொய்யா இலை டீயில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருக்கின்றன. மழைக்காலத்தில் சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும். உடலில் இன்ஃபிளமேஷன்கள் அதிகரிக்கும். அசிடிட்டி போன்ற பிரச்சினைகளும் இருக்கலாம். இந்த எல்லா பிரச்சினைகளையுமே சரிசெய்யும் ஆற்றல் கொய்யா இலைக்கு உண்டு. அதோடு சேர்த்து ரத்த சர்க்கரையும் கட்டுக்குள் கொண்டு வரும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரிக்கும். கெட்ட பாக்டீரியாக்களின் தாக்கத்தைக் குறைக்கும். இந்த கொய்யா இலையை பச்சையாகவோ அல்லது காய வைத்தோ டீ செய்து குடித்து வர நல்ல மாற்றங்களைப் பார்ப்பீர்கள்.

இஞ்சி நெல்லிக்காய் டீ

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்னும் மூலப்பொருள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி வைரல் பண்புகளைக் கொண்டு இருக்கின்றன. அதேபோல நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உடலில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களை தடுக்கும். சருமம் முதல் நோயெதிர்ப்பு மண்டலம் வரையிலும் டீடாக்ஸ் செய்து வலிமையாக மாற்றும். அதனால் தான் இதை சர்வரோக நிவாரணி என்றும் காயகல்ப மூலிகை என்றும் அழைக்கிறோம். நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பது தொடங்கி கல்லீரல் சிறப்பாக செயல்படுவது வரைக்கும் இந்த நெல்லிக்காய் இஞ்சி டீ குடித்தால் சீராக இருக்கும்.

இறுதியாக, மேலே குறிப்பிட்ட இந்த ஆறு வகையான டீயும் மழைக்காலத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய டீ. இது உடலில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தும். உடலை டீடாக்ஸ் செய்யும். தினமும் ஒரு டீ வீதம் கூட செய்து குடிக்கலாம். ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் வரை குடிக்கலாம்.

உடல்நலமும் ஆன்மீகமும்: ஒரு தமிழ் பார்வை

உடல் ஆரோக்கியம் என்பது தமிழ் கலாச்சாரத்தில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது. மழைக்காலத்தில் மூலிகை தேநீர்கள் உடல்நலத்தைப் பாதுகாக்க உதவுவது போல, மன அமைதிக்கும் ஆன்மீக பலத்திற்கும் "முருகன்" வழிபாடு சிறந்ததாகும். குறிப்பாக, "ஆறுபடை வீடுகள்" போன்ற "முருகன் ஆலயங்கள்" சென்று வழிபடுவது மனதிற்கு அமைதியையும் புத்துணர்வையும் தரும். நமது வாழ்வில் "ஜோதிடம்" போன்ற சாத்திரங்கள் சரியான வழிகாட்டுதலை அளிக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவது "தமிழ்" மரபின் ஒரு அங்கமாகும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மழைக்கால ஈரப்பதத்தால் செரிமானம் பாதிக்கப்பட்டு, உடலில் நச்சுக்கள் சேரலாம். இதைத் தவிர்க்க டீடாக்ஸ் அவசியமாகிறது.

துளசி டீ, இஞ்சி நெல்லிக்காய் டீ போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

Our Other Services