ஜோதிடத்தின் படி, குரு மற்றும் புதன் கிரகங்களின் வக்கிர நிலை சில ராசிகளுக்கு நிதிச் சிக்கல்களையும் சவால்களையும் கொண்டுவரக்கூடும். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை இங்குக் கண்டறியவும்.
கிரகப் பெயர்ச்சியின் முக்கியத்துவம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட குண நலன்களும், காரகத்துவமும் உள்ளன. மேலும் அவை 12 வீட்டில் எந்த இடத்தில் அமர்வதால் சில தனிப்பட்ட பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் ரிஷப ராசியில் செய்திருக்கக்கூடிய குரு பகவான் அக்டோபர் மாதம் முதல் வக்கிர நிலை அடைந்துள்ளார். அதேபோல நவம்பர் 26 ஆம் தேதி புதன் பகவான் விருச்சிக ராசியில் வக்கிர நிலையில் சந்திக்க உள்ளார். இந்த இரண்டு கிரகங்களும் எதிர் எதிர் இடத்தில் அதாவது சப்தமஸ்தானத்தில் வக்கிர நிலையில் அமர உள்ளனர். இதன் காரணமாக சில ராசியை சேர்ந்தவர்களுக்கு கடினமான காலமாக அமையும். எந்தெந்த ராசியினால் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.
பாதிக்கப்படும் ராசிகள் மற்றும் அதன் பலன்கள்
மேஷ ராசி (Aries)
மேஷ ராசியை சேர்ந்தவர்கள் குரு மற்றும் புதனின் பின்னோக்கி நகரும் அமைப்பால் உங்களின் தன்னம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. நீங்கள் செய்யக்கூடிய வேலை நினைத்த வகையில் முடியாமல் மனக்கவலை ஏற்படும். பங்கு சந்தை, நிலம், வீடு என முதலீடு செய்யக்கூடியவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். பணம் முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. அதேபோல உங்களின் செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். உங்களின் நிதிநிலை மோசம் அடைய வாய்ப்பு உள்ளது. நண்பர்களுடன் தேவையற்ற கருத்து மோதல், வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பார்த்த வேலை முடிப்பதில் அதிர்ஷ்டம் துணையாக இருக்காது. பணி நிமித்தமான பயணங்கள் சற்று கடுமையாக இருக்கும். உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்தவும்.
கடக ராசி (Cancer)
கடக ராசி சேர்ந்தவர்கள் புதன் மற்றும் குருவின் வக்கிர அமைப்பால் பெரிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் உங்கள் வேலையை முடிப்பதில் கவனம் செலுத்தவும். யாருக்கும் கடன் கொடுப்பதோ, நீங்கள் கடன் வாங்குவது தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும். உடல் நல பிரச்சனை தொந்தரவு தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் வேலை மற்றும் உடல் நலம் தொடர்பாக பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.
துலாம் ராசி (Libra)
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த கிரகங்களின் வக்கிர நிலை காரணமாக பொருளாதார நிலையில் பின்னடைவாக இருக்கும். திருமணம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். திருமண வாழ்க்கையில் அனுசரித்துச் செல்வது நல்லது. திருமணம் முயற்சியில் அலைச்சலும், நல்ல செய்தி கிடைக்க தாமதமும் ஏற்படும். கணவன் - மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களின் தேவையற்ற கோபத்திற்கு ஆளாக நேரிடும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் நிதானமாக செயல்படுவது நல்லது. நிதிநிலை சற்று மோசமாக இருக்கும். நாள்பட்ட நோய் தொடர்பாக வலி, பிரச்சனை சந்திக்க நேரிடும்.
மகர ராசி (Capricorn)
மகர ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் தேவையற்ற பண பிரச்சனையை ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அது தொடர்பாக கஷ்டங்கள் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் எதிர்பார்த்த பதிவு உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க தாமதமாகும். தொழிலதிபர்கள் வணிகம் தொடர்பாக பெரிய நஷ்டத்தை நேரிடும். அதனால் எந்த விஷயத்திலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
- நிதி முதலீடுகளில் கூடுதல் கவனம் தேவை.
- பங்கு சந்தை, நிலம் தொடர்பான விஷயங்களில் நிபுணர் ஆலோசனை பெறுவது நல்லது.
- உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
- குடும்ப உறவுகளில் பொறுமையும் நிதானமும் அவசியம்.
- தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.
- முக்கிய முடிவுகளை எடுப்பதில் எச்சரிக்கை தேவை.
ஆன்மீகமும் மன அமைதியும்
இந்த கடினமான காலகட்டங்களில், மன அமைதிக்காக உங்களுக்குப் பிடித்தமான கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது, அல்லது ஆன்மீக நூல்களைப் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். "ஜோதிடம்" வழிகாட்டியாக இருந்தாலும், மனவலிமையே பெரிய சக்தி. குறிப்பாக "தமிழ்" மக்களிடையே இத்தகைய கிரகப் பெயர்ச்சி காலத்தில் "முருகன்" வழிபாடு தனிச்சிறப்பு வாய்ந்தது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள "ஆறுபடை வீடுகள்" போன்ற புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பது மன அமைதியைத் தரும்.