நமது தமிழ் பாரம்பரியத்தில், இறைவனின் அருளும், ஜோதிடம் சார்ந்த புரிதலும் நம் வாழ்வை மேம்படுத்தும். நவகிரகங்களில் தளபதியாக விளங்கும் செவ்வாய் பகவானின் சுப பலன்களைப் பெறவும், வாழ்க்கையில் தைரியத்தையும் வெற்றியையும் ஈட்டவும் சில எளிய பரிகாரங்களை இங்கே காணலாம். முருகன் பெருமானின் அருள் வேண்டி செய்யப்படும் பூஜைகளும், ஆறுபடை வீடுகள் தரிசனமும் மன அமைதி அளிக்கும் வேளையில், செவ்வாய் பகவானின் தோஷ நிவர்த்திக்கும் சில எளிய வழிகள் உள்ளன.
செவ்வாய் கிரகத்தின் முக்கியத்துவம்
ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதி என அழைக்கப்படுபவர் செவ்வாய் பகவான். மேஷம் மற்றும் விருச்சிக ராசி அதிபதியான அங்காரகன் ஒருவருக்கு வாழ்க்கையில் வலிமை, தைரியம், ஆற்றல் மற்றும் வீரம் ஆகியவற்றை தரக்கூடியவர். ஒரு செயலை செய்து முடிப்பதில் அச்சத்தைப் போக்கி தைரியமாக செயல்பட உதவுவார். இதனால் வாழ்க்கையில் சுப பலன்கள் கிடைக்கும். செவ்வாய் கிரகத்தின் சுப பலன்களைப் பெற, எளிய பரிகாரங்களை பின்பற்றுவது நல்லது.
செவ்வாய் கிரக பரிகாரங்கள்
செவ்வாய் பகவானின் அருளைப் பெற்று, வாழ்க்கையில் முன்னேற்றம் காண உதவும் சில எளிய பரிகாரங்கள்:
- சிவப்பு நிறம்: செவ்வாய் கிரகத்துக்குரிய நிறம் சிவப்பு. இந்த கிரகத்தின் ஆசீர்வாதம் பெற்றிடவும், வாழ்க்கையில் தைரியத்துடன் முன்னேறிட, உங்கள் வாழ்க்கையில் சிவப்பு நிறப் பொருட்களை கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். செவ்வாய்க்குரிய சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தி வர உங்களின் செயல்பாடுகளில் தைரியம், வேகம் அதிகரிக்கும். உங்களுக்கு நேர்மறையான முடிவுகள் பெறலாம். சிவப்பு நிற ஆடைகளை அடிக்கடி அணிந்து வருவது நல்லது.
- செம்பு: செம்பு பாத்திரம், செப்பு உலோகம் அங்காரகனுடன் தொடர்புடையது. ஜோதிட சாஸ்திரத்தின்படி ரத்தம் தொடர்பான பிரச்னைகள் வராமல் இருக்க, செம்பு காப்பு நம் கைகளில் அணிந்திருப்பது நல்லது. செவ்வாய் கிழமையன்று தாமிரத்தால் செய்யப்பட்ட பொருட்களை தானமாக வழங்குவதும் நன்மை தரும். இதை அணிந்து வருவதால் உங்களின் நம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
- வெல்லம்: செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடைய உணவுப் பொருள் வெல்லம். இதை நீங்கள் உட்கொள்வதும், தானம் கொடுப்பதும் உங்கள் உடலில் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கும். உங்கள் செயல்கள் வேகமடையும். வெல்லம் மற்றும் சப்பாத்தி சேர்த்து பசுக்களுக்கு கொடுப்பது நல்லது. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- பார்லி: பார்லி தானியம் செவ்வாய் கிரகத்திற்குரியதாக கருதப்படுகிறது. இது சிறப்பான ஆற்றலை வழங்கக்கூடியது. பார்லி சாப்பிட்டு வருவதால் உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், செழிப்பும் அதிகரிக்கும். பெளர்ணமி மற்றும் அமாவாசை நாளில் பார்லி மாவை தானம் கொடுக்கலாம். நீங்களும் சமைத்து சாப்பிடலாம். இதனால் நேர்மறையான ஆற்றல் அதிகரிக்கும். உங்களுக்கு செவ்வாய் கிரகத்தின் நல்லருள் கிடைக்கும்.
- மண்: செவ்வாய் பகவான் பூமாதேவியின் மகனாக கருதப்படுகிறார். புராண நம்பிக்கைகளின் படி, வீடு, மனை சார்ந்த அனைத்து பொருட்களிலும் செவ்வாய் கிரகத்தின் தாக்கம் நிறைந்திருக்கும். கோபத்தைத் தரக்கூடிய செவ்வாய் பகவான், மண் பானையில் தண்ணீர் வைத்து குடித்து வர உடல் நலனுக்கும் நன்மையும், குளுமையையும் தரக்கூடியதாக இருக்கும். கோபமும் கட்டுக்குள் வரும்.