இந்த ஆண்டிற்கான மகா கந்த சஷ்டி விரதம் துவங்கி, இன்று நான்காவது நாளை எட்டி உள்ளோம். இந்த நாளில் முருகப் பெருமானை வழிபட்டு, வாழ்க்கையில் இருக்கும் தடைகளை நீக்கி, வெற்றி பெற சில எளிய பரிகாரங்களை காண்போம்.
கந்த சஷ்டி விரதம் 4 ஆம் நாள் முக்கியத்துவம்
கந்த சஷ்டி விரதத்தின் நான்காவது நாளான இன்று, வீட்டில் காலை மற்றும் மாலையில் ஷட்கோண தீபம் ஏற்ற வேண்டும். "ண" என்ற எழுத்தின் மீது தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முதல் நாள் போட்ட கோலத்தை சுத்தம் செய்து விட்டு, புதியதாக கோலம் போட்டு அதன் மீது விளக்கு ஏற்ற வேண்டும். மாலையில் மீண்டும் கோலம் போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இன்று முருகப் பெருமானுக்கு என்ன கிடைக்கிறதோ அதை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
இந்த நான்காவது நாளில் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி திதியும் இணைந்து வருவது சிறப்புக்குரியதாகும். இந்த நாளில் விநாயகப் பெருமானையும், முருகப் பெருமானையும் ஒரே நேரத்தில் வழிபடுவதால் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் விலகி, வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
வேலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு எளிய பரிகாரங்கள்
பல நாட்களாக முயற்சி செய்தும் நல்ல வேலை கிடைக்கவில்லை, நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கவில்லை, கடைசி நிமிடத்தில் வேலை தட்டி போகிறது, அரசு வேலை கிடைக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது, தொழிலில் வளர்ச்சி இல்லை என்பவர்கள் கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்து வாழ்வில் வளம் பெறலாம்:
- அருணகிரிநாதர் திருப்புகழ்: அருணகிரி நாதர் திருச்செந்தூர் திருத்தலத்தில் பாடிய திருப்புகழையும் தினமும் சொல்லி பாடி வரலாம். இது நல்ல வேலை கிடைக்க மிகவும் சக்தி வாய்ந்த முருகன் துதி ஆகும்.
- கந்தர் அனுபூதி: மிகவும் சக்தி வாய்ந்த பலன் தரும் கந்தர் அனுபூதி பாடலையும் தினமும் சொல்லி பாடி வரலாம். ஜோதிடம் ரீதியாக வேலை மற்றும் தொழில் தடைகளை நீக்க இது ஒரு சிறந்த வழி.
திருப்புகழ் - நல்ல வேலை கிடைக்க, தொழிலில் லாபம் அடைய
"பெருக்கச் சஞ்சலித்துக் கந்தல் உற்றுப் புந்தி அற்றுப் பின் பிழைப்பு அற்றும் குறைப்பு உற்றும் பொது மாதர் ப்ரியப்பட்டு அங்கு அழைத்துத் தம் கலைக்குள் தங்கிடப் பட்சம் பிணித்துத் தம் தனத்தைத் தந்து அணையாதே புரக்கைக்கு உன் பதத்தைத் தந்து எனக்குத் தொண்டு உறப் பற்றும் புலத்துக் கண் செழிக்கச் செந்தமிழ் பாடும் புலப் பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் படக் கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம் புரிவாயே தருக்கிக் கண் களிக்கத் தெண்டனிட்டுத் தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புறச் சித்தம் தளர்வோனே சலிப்பு உற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்துத் தன் சமர்த்தில் சங்கரிக்கத் தண்டிய சூரன் சிரத்தைச் சென்று அறுத்துப் பந்தடித்துத் திண் குவட்டைக் கண்டு இடித்துச் செந்திலில் புக்கு அங்கு உறைவோனே சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திருச் சிற்றம்பலத்து அத்தன் செவிக்குப் பண்பு உறச் செப்பும் பெருமாளே."
கந்தர் அநுபூதி - நல்ல வேலை கிடைக்க, தொழிலில் லாபம் அடைய
"உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்ப், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே."
தானம் செய்ய வேண்டியவை: அரசு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைக்கு
- சூரிய வழிபாடு: அரசு வேலை, வெளிநாட்டு வேலை கிடைக்க வேண்டும் என்பவர்கள் தினமும் சூரிய உதய நேரமான 6 மணிக்கு சூரிய பகவானை மனதார நினைத்து வழிபாடு செய்து வந்தால் சூரிய பகவானின் அருளால் அரசு வேலை கிடைக்கும்.
- சஸ்திர பந்தம் பாடல்: அதே போல் வேலை கிடைக்க வேண்டும், தொழிலில் சிறக்க வேண்டும் என்பவர்கள் பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம் பாடலை தினமும் படித்து வரலாம்.
- தேங்காய் தானம்: உங்களின் வசதிக்கு ஏற்ப தேங்காய் வாங்கி யாருக்காவது தானம் செய்யலாம். அதிக தேங்காய் வாங்கி தானம் செய்ய வசதி இல்லாதவர்கள், ஒரு தேங்காய் வாங்கி, அதை துருவி எடுத்து, அதில் தேங்காய் சாதமாக செய்து, முருகப் பெருமானுக்கு படைத்து வழிபட்டு விட்டு, மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். இதனால் அடுத்த ஆண்டு கந்த சஷ்டி விரதத்திற்குள் உங்களின் சொந்த வருமானத்தில் நிறைய தேங்காய் வாங்கி தானம் செய்யும் அளவிற்கு வருமானமும், வசதி வாய்ப்புகளும் பெருகும்.