Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

காளி தேவி: உக்கிரமான தோற்றமும் கருணையும்

இந்து மத தெய்வங்களில் மிக முக்கியமான தெய்வமாக கருதப்படுபவர் காளி தேவி. இவள் அழிவு, மரணம், நேரத்தை குறிக்கும் தெய்வமாக குறிப்பிடப்படுக்கிறார். அதே சமயம் ஞானம், ஆழ்ந்த அறிவை வழங்கும் தெய்வமாகவும் குறிப்பிடப்படுகிறாள். காளியின் உக்கிரமான தோற்றத்திற்கும், அவளது கருணைக்கும் பின்னணியில் உள்ள ஆழ்ந்த ஆன்மீக ரகசியங்களை இங்கே அறிவோம்.

காளி தேவியின் தனித்துவமான தோற்றம் மற்றும் முக்கியத்துவம்

வெளித் தோற்றத்தில் எப்போதும் கோபமாக காணப்படுவதால் காளி அம்மன், உக்கிர தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் கருதப்படுகிறாள். தாந்த்ரீக நடைமுறைகளை கையாள்பவர்களின் முதன்மை தெய்வமாக காளி தேவி கருதப்படுகிறாள். ஆனால் இவளே பிரபஞ்சத்தின் தாயாகவும், பெண் தெய்வங்களில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறாள். மற்ற பெண் தெய்வங்களை போல் இல்லாமல், காளி தேவி மட்டும் பயங்கரமான உருவத்துடன், பார்த்ததுமே பயத்தை ஏற்படுத்தும் வகையிலான தோற்றத்தில் சித்தரிக்கப்படுகிறார். மற்ற தெய்வங்கள் அசுரர்களை வதம் செய்யும் போது உக்கிரமாகவும், அதற்கு பிறகு சாந்தமான தோற்றத்திற்கும் மாறி விடும் போது, காளி மட்டும் சிவந்த கண்கள், அடர்ந்த கருப்பு நிறம், தொங்கும் நாக்கு, சொட்டும் ரத்தத்துடன் இருக்கும் அசுரர்களின் மண்டை ஓட்டை கையில் ஏந்தி, மண்டைஓட்டு மாலையை அணிந்திருக்கிறாள்.

உருவம் மட்டுமின்றி வழிபாடுகளிலும் காளி, மற்ற தெய்வங்களில் இருந்து வேறுபட்டுள்ளாள். மற்ற தெய்வங்கள் அனைத்தும் கருணை பொங்கும், தெய்வீக முகத்துடன், சாந்தமாகவும் அழகாகவும் காட்சி தரும் போது, காளி மட்டும் ஏன் எப்போதும் கோபமான தோற்றத்திலேயே காட்சி தருகிறாள் என்ற காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.

ரக்தபீஜா அசுரனும் காளி தேவியின் திருவிளையாடலும்

ரக்தபீஜா என்ற அரக்கன் அனைவருக்கும் கொடுமையான துன்பங்களை அளித்து வந்தான். அதனால் அவனை அழிப்பதற்காக பல தெய்வங்களும் அவனுடன் போரிட்டன. ஆனால் போரின் போது அந்த அரக்கன் உடலில் இருந்து தரையில் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தில் இருந்தும் புதிதாக அவனைப் போன்றே உருவமும், பலமும் கொண்ட அரக்கர்கள் ஏராளமாக உருவானதால் அவனது படைகள் பெருகிக் கொண்டே போனது. அதனால் அந்த அரக்கனை அழிக்க முடியாமல் அனைத்து தெய்வங்களும் தோல்வி அடைந்தன.

அந்த அரக்கனை அழிக்க என்ன தான் வழி என யோசித்த போது, அவனை வதம் செய்ய காளியால் மட்டும் முடியும் என நினைத்து, அனைத்து தெய்வங்களும் காளியை அழைத்தன. காளி தனி ஆளாக அந்த அரக்கனுடன் போரிட்டு, அவனது ரத்தத்தை குடித்து கீழே சிந்த விடாமல் செய்ததுடன், அவனது தலையையும் துண்டித்து எடுத்து தன்னுடனேயே வைத்துக் கொண்டு, அந்த அரக்கனை வெற்றிக் கொண்டாள். இந்த திருவிளையாடல் காளி தேவியின் அபரிமிதமான சக்தியை வெளிப்படுத்துகிறது.

சிவன் மற்றும் காளியின் ருத்ர தாண்டவம்

அரக்கனின் ரத்தத்தை குடித்ததால் காளியின் உக்கிரம் குறையாமல் அவள் மிகந்த கொந்தளிப்புடன் ருத்ர தாண்டவம் ஆட துவங்கினாள். இதனால் பூமியே அழியும் நிலைக்கு சென்றது. அவளின் கோர தாண்டவத்தை கண்டு அனைவரும் அஞ்சி நடுக்கினர். அப்போது காளியின் உக்கிரத்தை தனித்து, அவளது நடனத்தை தடுத்து நிறுத்த முயன்றார் சிவ பெருமான். காளிக்கு இணையாக அவரும் தாண்டவம் ஆடினார். இருந்தாலும் காளியின் ஆட்டம் நிற்காமல் மேலும் தீவிரமடைந்தது.

ஆட்டத்தின் போது காளியின் பாதம் தவறுதலாக சிவனின் மீது பட்டது. சிவனின் மீது தனது பாதங்கள் பட்டதுமே காளியின் ஆட்டம் நின்றது. உலகமும் பேரழிவில் இருந்து காக்கப்பட்டது. சிவ பெருமானின் சக்தியை தவிர வேறு ஒருவராலும் காளியை கட்டுப்படுத்த முடியாது என்பது இதன் மூலம் தெரிகிறது. தீமைகளை அச்சம் கொள்ள வைப்பதற்காகவே காளி எப்போதும் கோபமாக காட்சி தருகிறாள். அதே சமயம் அவளை நம்பி சரணடைந்தவர்களுக்கு உடனடியாக அருளையும், வரங்களையும் அள்ளிக் கொடுக்கக் கூடியவள் காளி தேவி. இவளின் அருளைப் பெற ஜோதிடம்360 தொடர்ந்து வழிபாட்டு முறைகள் மற்றும் தகவல்களை வழங்குகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தீமைகளை அச்சம் கொள்ள வைப்பதற்காகவே காளி எப்போதும் கோபமாக காட்சி தருகிறாள். அதே சமயம் அவளை நம்பி சரணடைந்தவர்களுக்கு உடனடியாக அருளையும், வரங்களையும் அள்ளிக் கொடுக்கக் கூடியவள்.

ரக்தபீஜா அசுரன் உடலில் இருந்து சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தில் இருந்தும் புதிதாக அரக்கர்கள் உருவானதால், அவனை அழிக்க பல தெய்வங்களும் தோல்வி அடைந்தன. இறுதியில் காளி தேவி அவனது ரத்தத்தை குடித்து, தலையை துண்டித்து அழித்தாள்.

ரக்தபீஜாவை அழித்த பிறகு காளி தேவியின் உக்கிரம் தணியாமல் ருத்ர தாண்டவம் ஆடியதால் பூமி அழியும் நிலை ஏற்பட்டது. சிவ பெருமான் அவளது பாதத்தின் கீழ் படுத்து அவளது ஆட்டத்தை நிறுத்தினார், உலகம் பேரழிவில் இருந்து காக்கப்பட்டது.

Our Other Services