உங்கள் எதிர்காலத்தை அறிந்துகொள்ள தினசரி ராசிபலன் உதவும். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் இன்றைய (2025) தினசரி பலன்களை இங்கே காணலாம். இந்த ஜோதிட குறிப்புகள் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டு வர முருகன் அருள்புரிவார்.
இன்றைய ராசிபலன்கள் (2025)
மேஷம்:
சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மறைமுகமான எதிரிகளால் சில எதிர்ப்புகளை சந்திக்க கூடும். பாராட்டுக்கள் நிறைந்த அற்புதமான நாள். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்:
இன்று வரவுக்கு ஏற்ற செலவுகள் கிடைக்கும். பழைய சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய அற்புதமான நாள். செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்:
மனதளவில் ஒரு விதமான குழப்பங்களை சந்திக்க கூடிய நாள். தம்பதிகள் இடையே ஒற்றுமை உண்டாகும். மதியமேல் ஒரு சிலருக்கு குடும்பத்தினருடன் கருத்துவேறு பாடுகள் உண்டாக்கலாம்.
கடகம்:
இன்று மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். சிலருக்கு தூக்கம் இன்மை பிரச்சனை உருவாகலாம். மனதிலும் உடலிலும் ஒருவித சோர்வை சந்திக்க கூடிய நாள்.
சிம்மம்:
மனதில் இருந்த கவலைகள் விலகும். வெளிவட்டாரத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெறுவீர்கள். எதிர்மறையான சிந்தனைகள் மனதை விட்டு விலகும்.
கன்னி:
பொருளாதார நெருக்கடிகள் விலகும் நாள். கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். அரசு வழியில் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றமும் பாராட்டுக்களும் பெறுவீர்கள்.
துலாம்:
நீண்ட நாட்களாக முடிவுக்கு வராத காரியம் நல்ல முடிவைப் பெறும். நண்பர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
நினைத்த இடத்தில் இருந்து சில உதவிகள் கிடைக்க தாமதமாகலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவி இடையே உள்ள விரிசல் விலகும்.
தனுசு:
ஒரு சிலருக்கு மனதளவில் ஏற்பட்ட கவலைகள் விலகும். வீடுகளில் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முறையில் முடிவடையும். நண்பர்களிடையே மகிழ்ந்து பேசக்கூடிய நாள்.
மகரம்:
நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும். வரவு அதிகரிக்கும்.
கும்பம்:
நினைத்த வேலைகளை உடனே முடிக்க முடியாமல் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. யோசித்து செயல்படுவது நல்லது.
மீனம்:
இன்று பிரபலமானவர்களின் சந்திப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் பெறுவீர்கள். தொழில் ரீதியாக சில முக்கிய பொருட்கள் உங்களை தேடி வரலாம். ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
சிறப்பு ஜோதிட பலன்: 2025 தீபாவளிக்குப் பிறகு பணமழையில் குதிக்க போகும் 3 ராசிகள்!
வரும் 2025 தீபாவளி பண்டிகைக்குப் பிறகு, குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், செல்வ செழிப்பும் உண்டாகும் என்று ஜோதிடம் கணிக்கிறது. இவை உங்கள் ஜாதக பலனை மேலும் வலுப்படுத்தும். முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
- மேஷம்: பண வரவு அதிகரிக்கும், புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.
- சிம்மம்: சொத்து சேர்க்கை, பதவி உயர்வு கிடைக்கும்.
- தனுசு: நிதி நிலைமை மேம்படும், வெளிநாட்டுப் பயணங்கள் அமையலாம்.
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் குறித்த முக்கிய தகவல்கள்
தினசரி ஜோதிட பலன்கள் (Daily Horoscope) உங்கள் வாழ்க்கையை திட்டமிட உதவும். ஜோதிட ரீதியாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன், அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகள் (Aarupadai Veedu) மற்றும் பிற முருகன் ஆலயங்கள் (Murugan Aalayam) சென்று வழிபடுவது மன அமைதியையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும்.