நம்முடைய ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் நம் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடியதாக அமைகின்றன. சில கிரகங்களின் அமைப்பானது யோகத்தையும், சில அமைப்பால் அவயோகமும் ஏற்படும். எப்படிப்பட்ட கிரக அமைப்பு அதிர்ஷ்டமற்றதாக இருக்கும் என்பதை இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
பந்தன யோகம்
பந்தனம் என்றால் கயிற்றால் கட்டப்படுதல், தண்டனை பெறுதல் என அர்த்தம் கொள்ளலாம். இந்த அவயோகத்தைப் பெற்றவர் காவல்துறையால் காவலில் வைக்கப்படுதல், குறைந்த கால சிறை தண்டனை பெறுதல் போன்ற தண்டனைகளை அனுபவிக்க வாய்ப்புள்ளது.
பந்தன யோகம் எப்படி ஏற்படும்?
ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினாதிபதியும், 6க்கு உடையவரும் இணைந்து கேந்திர ஸ்தானம் (1, 4, 7, 10) அல்லது திரிகோண ஸ்தானம் (1, 5, 9) ஆகிய இடங்களில் சனி, கேது, ராகு ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து இருப்பின் பந்தன யோகம் ஏற்படும். இது ஜோதிடத்தில் முக்கியமானது.
பந்தன யோகத்திற்கான பரிகாரம்
இந்த அசுப யோகம் இருப்பின் அவருக்கு அசுப யோகத்தை தரக்கூடிய தசபுத்தி காலங்களில் தண்டனை அனுபவிக்க நேரிடும். இதற்கு தனியாக பரிகாரம் என்று இல்லை. இந்த ஜாதகர் நேர்மையாகவும், உண்மையாகவும் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்தால் சுக வாழ்வு பெறலாம். அதே சமயம் ஒருவர் நேர்மையாக, உண்மையாக வாழ்ந்து இந்த அசுப யோகம் ஏற்படுமாயின், அவர் தொடர்ந்து சிவ வழிபாடு, பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளுதல், சனி, புதன் கிழமைகளில் மகாவிஷ்ணு வழிபாடு செய்து வர இவருக்கான பிரச்னைகளிலிருந்து ஆரம்பத்திலேயே வெளிவர முடியும்.
அபகீர்த்தி யோகம்
ஒருவருக்கு கீர்த்தி எனும் புகழை, ஜாதகத்தில் 10ம் இடத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். இந்த இடத்தை சூரியன் மற்றும் சனி சேர்ந்து பார்வை பெற்றால் அல்லது இங்கு சேர்ந்திருந்தால் அல்லது நவாம்சத்தில் இவர்களின் இணைவு அல்லது பார்வை பெற்றிருந்தால் இந்த அபகீர்த்தி யோகம் ஏற்படும். இதன் மூலம் ஜாதகருக்கு புகழ், கெளரவம் பாதிக்கப்படும். அவர்களிடம் செல்வம் அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு புகழ் கிடைக்காது. நல்லது செய்தாலும் எதிர்பார்த்த புகழ் கிடைக்காது. தமிழகத்தை உயர்த்த பாடுபட்டவரும், படிக்காமலேயே அரசியலில் சாதித்தவருமான கர்மவீரர் காமராஜரை இந்த யோகத்திற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இந்த அவயோகம் பற்றிய புரிதல் ஜோதிடப் பலன்களுக்கு அவசியம்.
புத்திர களத்திர ஹீன யோகம்
ஒருவருக்கு குழந்தை பாக்கியம் தரக்கூடியது பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் இடமாகும். இந்த 5ம் இடத்தில் தேய்பிறை சந்திரனில் இருந்து 1, 7, 12ம் இடங்களில் பாப கிரகங்களான சனி, சூரியன், செவ்வாய் கிரகங்கள் தனித்தனியாக இருப்பின் இந்த புத்திர களத்திர ஹீன யோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ளவர்கள் தன்னுடைய வாழ்க்கைத் துணை, பிள்ளைகளை இழப்பது அல்லது பிரிய வாய்ப்புள்ளது.
யாருக்கு பாதிப்பில்லை?
மேலே குறிப்பிட்டுள்ளதன்படி சந்திரனிலிருந்து 1-7-12 ஆகிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சனி ஆகிய பாப கிரகங்கள் எவரேனும் ஒருவர் இல்லாவிட்டாலும் இந்த யோகம் நிகழாது. அதே போல சூரியன், செவ்வாய், சனி கிரகங்கள் இதே வரிசையில் இருக்க வேண்டும் என்பதில்லை. மாறி மாறி இருந்தாலும் இந்த அசுப யோகம் ஏற்படும்.
தேக கஷ்ட யோகம்
தேகம் என்றால் உடல், கஷ்டம் என்றால் துன்பம். ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி அஷ்டம ஸ்தானமான 8ம் இடத்தில் இருந்தாலோ அல்லது பலம் பெற்ற பாவ கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ அவருக்கு தேக கஷ்ட யோகம் ஏற்படும். இதனால் அந்த நபருக்கு உடல் நல பிரச்னை, உடல் கஷ்டம் தொடர்பான இன்னல் அனுபவிப்பார். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் தங்கள் வேலை தொடர்பாக அதிக உடல் உழைப்பு தேவைப்படும். வேலை தொடர்பாக ஏற்படும் உடல் வலிகளைத் தீர்க்க பெரும்பாலானோர் போதைப் பொருளைப் பயன்படுத்துவர். இவர்களின் வாழ்க்கை முழுவதும் கடிமான சூழலை அனுபவிக்க வாய்ப்புள்ளது. தமிழ் ஜோதிடத்தில் இந்த யோகங்கள் குறித்த ஆழமான புரிதல் அவசியம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
ஜோதிடத்தின்படி, ஒருவரின் ஜாதகத்தில் சில கிரக அமைப்புகள் காரணமாக ஏற்படும் பாதகமான விளைவுகளைக் குறிப்பதே அசுப யோகம் அல்லது அவயோகம் ஆகும். இது ஒருவரின் வாழ்வில் அதிர்ஷ்டமற்ற தன்மையை ஏற்படுத்தும்.
பந்தன யோகத்திற்கு குறிப்பிட்ட பரிகாரங்கள் இல்லை என்றாலும், ஜாதகர் நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்வது அவசியம். அசுப தசாபுத்தி காலங்களில் சிவ வழிபாடு, பிரதோஷ பூஜை, சனி மற்றும் புதன் கிழமைகளில் மகாவிஷ்ணு வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.
அபகீர்த்தி யோகம் ஒருவருக்கு புகழ், கெளரவம் மற்றும் நற்பெயரைப் பாதிக்கும். செல்வம் இருந்தாலும் எதிர்பார்த்த புகழ் கிடைக்காமல் போகலாம். ஜோதிடத்தில் இது ஒரு முக்கிய அவயோகமாக கருதப்படுகிறது.