துன்பங்களும், பிரச்சனைகளும் ஏற்படும்போது, "தலைவிதி" என்று புலம்புவது சகஜம். ஆனால், நம்முடைய தலையெழுத்தை மாற்றவும், கஷ்டங்களில் இருந்து விடுதலை பெறவும் சில வழிகள் உள்ளன. தினசரி வாழ்க்கையில் நாம் மறக்காமல் வணங்க வேண்டிய ஐந்து தெய்வங்களையும், அவற்றின் சக்தி வாய்ந்த மந்திரங்களையும், ஜோதிடம் மற்றும் ஆன்மீக ரீதியாக எப்படிப் பின்பற்றுவது என்பதையும் இந்தக் கட்டுரை விளக்குகிறது. இந்த வழிபாட்டின் மூலம் உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், ஆனந்தத்தையும் பெறலாம்.
உங்கள் தலைவிதியை மாற்றக்கூடிய 5 தெய்வங்கள் மற்றும் மந்திரங்கள்
நாம் எத்தனையோ தெய்வங்களை வணங்கி, நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என ஆயிரம் ஆயிரம் பிரார்த்தனைகளை முன் வைத்தாலும், சில தெய்வங்களை மனம் உருகி, நம்பிக்கையுடன் அழைத்த உடனேயே ஓடி வந்து அருள் செய்யும். நம்முடைய தினசரி வாழ்க்கையில் நாம் என்ன செய்ய மறந்தாலும் இந்த ஐந்து தெய்வங்களை மட்டும் மறக்காமல் வணங்க வேண்டும். இந்த தெய்வங்களுக்கு உரிய மந்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் சொல்லி வழிபடும் போது கண்டிப்பாக நம்முடைய தலைவிதி மாறும் என சொல்லப்படுகிறது.
1. முருகன்
முருகப் பெருமானை வணங்குவதன் மூலம் துன்பங்கள், எதிரிகள் தொல்லைகள் நீங்கும். தினமும் "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். அதை விட கைகளால் எழுதுவது மிகவும் சிறப்பான பலனை தரும்.
2. மகாலட்சுமி
மகாலட்சுமியின் அருளால் வீட்டில் செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை இரவு சுக்கிர ஹோரையில் "ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். வீட்டில் இருக்கும் வறுமை கரைந்து, பணப் புழக்கம் ஆறு போல பெருகி உங்களை தேடி வரும்.
3. சிவபெருமான்
சிவபெருமானை வணங்குவதன் மூலம் கர்மவினைகள் நீங்கி, வாழ்க்கையில் அமைதியும் ஆனந்தமும் பெருகும். தினமும் "ஓம் நம சிவாய நமஹ" என்ற மந்திரத்தை 21 முறை சொல்ல வேண்டும். இதனால் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக மாறி, நன்மைகள் அதிகரிக்கும்.
4. விநாயகப் பெருமான்
எந்த காரியத்தை துவங்குவதற்கு முன்பும் விநாயகப் பெருமானை வணங்குவது தடைகளை நீக்கும். "ஓம் கணபதியே நமஹ" என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி வணங்குங்கள். எவ்வளவு கஷ்டமான காரியமாக இருந்தாலும் தடைகள் விலகி, வெற்றிகரமாக நிறைவடையும்.
5. பராசக்தி
உலகை தாய் போல் காக்கும் பராசக்தி அம்மனை வணங்குவதன் மூலம் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். அமாவாசை நாளில் "ஓம் பராசக்தியே நமஹ" என்ற மந்திரத்தை 27 முறை வழிபட வேண்டும். இதனால் சொல்ல முடியாத கஷ்டங்கள் விலகி, வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.