ஜோதிடத்தின் அடிப்படையில் சில ராசியைச் சேர்ந்தவர்கள் எப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும், மிகக் குளுமையான மனதோடு அதைச் சமாளிக்க அல்லது எதிர்கொள்ளக்கூடிய நபர்களாக இருப்பார்கள். குடும்பப் பிரச்சனைகளிலும், தனிப்பட்ட இலக்குகளை அடைதலிலும் இவர்கள் உணர்ச்சிவசப்படாமல் குளுமையாகக் கையாள்வார்கள். இந்தத் தமிழ் ஜோதிடக் கட்டுரையில், தங்களின் நிதானத்தை இழக்காமல், இயல்பான மனநிலையுடன் செயல்படும் ராசியினர் குறித்து விரிவாகக் காண்போம்.
குளிர்ச்சியான ஆளுமைகள் கொண்ட ராசி அறிகுறிகள்
எல்லோருடைய மனதிலும் சிறிதளவு அன்பு, பாசம் இருக்கும். ஆனால் அதை பலரும் வெளிப்படுத்துவதில்லை. ஆனால் சிலர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களின் நிதானத்தை இழக்காமல் மிகவும் இயல்பான மனநிலையுடன் நடந்து கொள்வார்கள். அதற்கு காரணம் அவர்கள் தங்கள் மனதில் இறந்த காலம், எதிர்காலம் குறித்து பெரியளவில் எதிர்பார்ப்பு, சிந்தனைகளின்றி இருப்பதால், நிகழ்காலத்திற்கு என்ன தேவை என அறிந்து பனிக்கட்டி போல குளுமையாக சூழலை கையாளக்கூடியவர்களாக இருப்பார்கள். எந்த வித உணர்ச்சிகளுக்கும் வசப்படாமல் நிலைமையை சமாளிக்கும் ராசியினர் குறித்து இங்கே பார்ப்போம்:
மிதுனம்
மிதுன ராசியை சேர்ந்தவர்கள் இயல்பாகவே குளிர்ச்சியான மனநிலை கொண்டவர்கள். அன்பு, அரவணைப்பும் நிறைந்த இவர்கள் பல நேரத்தில் பற்றின்மை உணர்வுடன் இருப்பார்கள். சித்தாந்த மனநிலை கொண்டவர்கள் என்பதால் எதிலும் பெரியளவில் உணர்ச்சிவசப்படமாட்டார்கள். அதனால் குடும்பத்திலும், பணியிடத்திலும் அனைவரிடமும் நேசமானவர்களாக இருப்பார்கள்.
கன்னி
புதன் பகவான் ஆளக்கூடிய ராசி என்பதால் எதையும் புத்திசாலித்தனத்துடன் அணுகுவார்கள். இவர்கள் பிரச்னையை தீர்க்க உணர்ச்சிகளை விட விவாதம் தான் சிறந்தது என நினைக்கக்கூடியவர்கள். மேலும் எந்த சூழ்நிலையிலும் தங்களின் உணர்வுகளை அன்பாகவும், பாசமாகவும் பிறரிடம் வெளிப்படுத்துவார்கள். இவர்கள் தங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஒழுங்கும், கவனமுடன் கூட செயல்திறனும் நிறைந்திருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியை சேர்ந்த நபர்கள் தங்கள் செயலில் தீவிரமாகவும், ரகசியமாகவும் வைத்திருப்பார்கள். உணர்ச்சிவசப்படுவதற்குப் பதிலாக உண்மை நிலை என்ன, பிறரின் மனநிலை என்ன என்பதை உணர்ந்து செயல்படுவார்கள். பிரச்னையின் தீவிரம் என்ன?, அதை எப்படி நிதானமாக கையாள வேண்டும் என்ற வகையில் செயல்படுவார்கள்.
மகரம்
மகர ராசியினர் எதையும் பொறுமையாகவும், தீவிரமாகவும் யோசித்துத் தீர்வு காண நினைப்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படாமல் எதையும் சமாளிக்க நினைப்பவர்கள். தங்களின் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதோடு, பிறரின் உணர்வுகளையும் மதிக்கக்கூடியவர்கள். எதையும் குளுமையான மனதோடு சமாளிக்க திட்டமிட்டு தன்னம்பிக்கையோடு உழைப்பார்கள். அதனால் இவர்களுக்கு வெற்றி அதிகம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியினர் பெரும்பாலும் எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படுவதிலிருந்து விலகி இருப்பார்கள். புதிய யோசனைகள், அதை செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். தனிப்பட்ட உறவில் சுதந்திரம் விரும்புவார்கள். அதே போல தன் துணையின் உணர்வுகளையும் மதித்து நடப்பார்கள். குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள், பிரச்னைகளை விவாதிப்பதற்கும், பேசி தீர்க்கவும் நினைப்பார்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
ஜோதிடம், ராசி பலன் மற்றும் ஆன்மீக தகவல்கள் பற்றி மேலும் அறிய Jothidam360.in உடன் இணைந்திருங்கள். முருகன் ஆலயங்கள், ஆறுபடை வீடுகள் பற்றிய தகவல்களையும் எங்கள் தளத்தில் காணலாம். தமிழ் மொழியில் ஜோதிட அறிவை மேம்படுத்துங்கள்!