நம்மில் பலருக்கும் இரவில் உறங்கும்போது பல்வேறு கனவுகள் வருவதுண்டு. அவை பல நேரங்களில் நாம் விழித்தவுடன் மறந்துவிடும், ஆனால் சில கனவுகள் நமது மனதில் ஆழப் பதிந்துவிடும். குறிப்பாக, சில கனவுகள் நமக்கு கோடீஸ்வர யோகத்தையும், செல்வ செழிப்பையும் தரக்கூடியதாக அமையும் என கனவு சாஸ்திரம் மற்றும் ஜோதிடம் கூறுகிறது. பணக்காரன் ஆக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு, அதற்கான உழைப்புடன் அதிர்ஷ்டமும் சேரும்போது, நாம் காணும் கனவுகள் ஒரு வழிகாட்டியாக மாறலாம்.
செல்வ செழிப்பிற்கான கனவுகள்
பணக்காரன் ஆகும் எண்ணம்
பணக்காரன் ஆக வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருப்பது இயல்பு. அதற்காக ஒவ்வொருவரும் கடினமாக உழைப்பதுடன், அதற்கான அதிர்ஷ்டமும் அமைய வேண்டும் என எதிர்பார்ப்பது உண்டு. பல்வேறு நேரங்களில் நாம் காணக்கூடிய கனவுகள் நமக்கு அதிர்ஷ்டமாக மாறுகிறது. நம்முடைய எண்ணங்கள் தான் செயலாக மாறுகிறது என அறிவியலில் குறிப்பிடுவது போல, நாம் காணக்கூடிய கனவுகளும் பல நேரத்தில் நமக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியதாக அமைகிறது. எந்தெந்த விஷயங்கள் நம் கனவில் வந்தால் பணம் வந்து சேரும் என கனவு சாஸ்திரம் கூறுகிறது என தெரிந்து கொள்வோம்.
கனவில் கோவிலை பார்ப்பது
உங்களுக்கு ஏதேனும் ஒரு கோவில் கோபுரம் தெரிவது, கோயிலுக்கு செல்வது போன்ற கனவு வந்தால் உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் உங்கள் மீது விழப் போகிறது என்று அர்த்தம். கோவில் தொடர்பான கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி நடை போட உள்ளீர்கள் என்று பொருள். கடின உழைப்பிற்கான பலனையும், நிதி நன்மைகளையும் பெறுவீர்கள்.
கனவில் மயில் பார்ப்பது
உங்களுடைய கனவில் மயில் பார்ப்பதும், மயில் தோகை விரித்த ஆடுவது போன்றும் கனவு கண்டால், சொப்பன சாஸ்திரத்தின் படி அது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற பலனும், இலக்கை அடைவதற்கான சூழலும் சாதகமாக அமையும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்திருக்கும். பல்வேறு இனிமையான மாற்றங்கள் உங்கள் குடும்பத்தில் உண்டாகும்.
படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற கனவு
சொப்பன சாஸ்திரத்தின் படி ஒருவர் படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற கனவு கண்டால் அது மிகவும் அதிர்ஷ்ட பலனை தரப்போவதை உணர்த்துகிறது. இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துச் சிறப்பான வெற்றி அடைய முடியும் என்று பொருள். மேலும் உங்களின் முயற்சிகள் சிறப்பான பலனையும், அதன் மூலம் நிதிநிலை உயரவும் வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் கனவில் மஞ்சள் அல்லது சிவப்பு நிற மலர்களை பார்ப்பது
பொதுவாக மலர்கள் மங்களகரத்தைத் தரக்கூடியது. ஒருவர் தன்னுடைய கனவில் சிவப்பு அல்லது மஞ்சள் நிற மலர்களை கண்டால் அது உங்களுக்கு சுப பலனையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்கப் போகிறது என்று பொருள். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த கனவு வந்திருந்தால் அவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
கனவில் மகாலட்சுமி தேவியை காண்பது
செல்வத்திற்கான கடவுளாக நாம் மகாலட்சுமி தேவியை வணங்குவது உண்டு. அந்த கடவுளை உங்கள் கனவில் காணும்போது, உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்று பொருள். இந்த கனவுகள் மூலமாக உங்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை பெறலாம். நீங்கள் எதிர்பார்த்த நிதி நன்மைகளும், வாழ்க்கையில் சிக்கல்கள் விலகி, எதிலும் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். இதன் மூலம் கோடீஸ்வரன் ஆகக்கூடிய வாய்ப்பு உண்டு.
செல்வ செழிப்பு தரும் முக்கிய கனவுகள்:
- கோவில் அல்லது கோவில் கோபுரத்தை கனவில் காண்பது
- மயில் மற்றும் மயில் தோகை விரித்து ஆடுவதை கனவில் பார்ப்பது
- படிக்கட்டுகளில் ஏறி மேலே செல்வது போன்ற கனவுகள்
- மஞ்சள் அல்லது சிவப்பு நிற மலர்களை கனவில் காண்பது
- மகாலட்சுமி தேவியை கனவில் காண்பது
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கோவில், மயில், படிக்கட்டுகளில் ஏறுதல், மஞ்சள் அல்லது சிவப்பு நிற மலர்கள் மற்றும் மகாலட்சுமி தேவியை கனவில் காண்பது போன்ற கனவுகள் செல்வ செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் தரக்கூடியவை என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.
செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தேவியை கனவில் காண்பது மிகவும் மங்களகரமானது. இது உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதையும், எதிர்பாராத நிதி நன்மைகளையும், பெரிய வெற்றிகளையும் குறிக்கும். கோடீஸ்வர யோகத்திற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.