நம்முடைய வாழ்க்கையில் கடினமாக உழைப்பது சிறிதளவு பணத்தையாவது சேமித்து, நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே. ஜோதிடம் மற்றும் ஆன்மிக வழிகாட்டுதல்களைப் போலவே, நம்முடைய தினசரி பழக்கவழக்கங்களும் செல்வ வளத்தைப் பெற மிகவும் அவசியம். சாணக்கியரின் கூற்றுப்படி, பணப் பிரச்சனைகள் தீரவும், வாழ்க்கையில் வசந்தம் மலரவும் நாம் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய பழக்கங்கள் இதோ.
அதிகாலையில் எழவும்
யார் ஒருவர் விடியற்காலையில் எழுகிறாரோ, அவர் வாழ்க்கையில் சாதித்துவிடலாம். விடிந்த பின்னரும் தூங்கிக் கொண்டிருந்தால் அவரின் வாழ்க்கையில் தன் வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமலே போக நேரிடும். அதே போல இரவில் தாமதமாகத் தூங்குபவனும் வாழ்க்கையில் வறுமையை கொண்டுவர வாய்ப்புள்ளது. மேலும், உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். விடியற்காலையில் எழுந்து சிந்தித்து உழைக்கத் தொடங்கினாலே அவர் வெற்றியையும், பணத்தையும் சம்பாதித்துவிடலாம்.
அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம்
யார் ஒருவர் அளவுக்கு அதிகமாக தினமும் சாப்பிடுகிறாரோ அவரின் உடல் நிலை பாதிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. பலரும் சாப்பிட்டே தன் சொத்தை அழித்தவர்கள் உள்ளனர். நேரத்துக்கு சாப்பிட்டே ஆக வேண்டும் என நினைப்பதை விட நன்றாக பசித்த பின்னர் உணவு எடுத்துக் கொள்வதும், அதையும் நொறுங்கத் தின்பது அவசியம். அதிகமாக சாப்பிட்டால் சோம்பலும், உடல் பருமனும், உடல் நோயும் வாய்ப்படுகிறது.
சுத்தமாக இருக்கவும்
உங்கள் வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். தான் இருக்கும் இடத்தை சுற்றியும் சுத்தத்தை பராமரிக்கவும். தினமும் குளிக்காதவர்கள் அல்லது துவைத்த ஆடைகளை அணியாதவர்கள், உடல் சுத்தத்தை கவனித்துக் கொள்ளாதவர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். இது முருகப் பெருமான் அருள் தடைபடுவதற்கும் ஒரு காரணமாக அமையலாம்.
பெற்றோரை குறை சொல்லாதீர்கள்
சாணக்கியர் கூற்றுப்படி, யார் ஒருவர் தன்னுடைய முன்னேற்றத்திற்கும் சிந்திக்காமல், பெற்றோரை குறை சொல்கிறாரோ அவர் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது கடினம். வயதான பெற்றோரிடம் தவறாக நடந்து கொள்ள வேண்டாம். மற்றவர்களிடம் உங்களின் பெற்றோரை குறைவாக பேச வேண்டாம். பெற்றோரை மதிப்பது ஆன்மிக பலத்தையும், செல்வ வளத்தையும் பெருக்கும்.
பேச்சைக் கட்டுப்படுத்தவும்
யார் ஒருவர் பிறர் பேசுவதை காது கொடுத்து கேட்காமல், தான் மட்டும் பேசிக் கொண்டே இருக்கிறாரோ, பேச்சைக் கட்டுப்படுத்தாமல் இருக்கிறாரோ, தன் வார்த்தைகளில் கவனமில்லாமல் இருக்கிறாரோ அவரால் பணத்தை சம்பாதிக்க முடியாது என்பது ஐதீகம். அதோடு அவர் தன் நற்பெயரை கெடுத்துக் கொள்வதோடு, உறவினர்கள், நண்பர்களுடன் மோதல் போக்கு ஏற்படும். அமைதியான பேச்சு செல்வ வளத்திற்கு வழிவகுக்கும்.
சாணக்கிய நீதியின் முக்கிய அம்சங்கள்
- அதிகாலையில் எழுந்து திட்டமிட்டு உழைப்பது.
- உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் அதிகப்படியான உணவைத் தவிர்ப்பது.
- உடல் மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பேணுவது.
- பெற்றோரை மதித்து, அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவது.
- கவனமான, கட்டுப்படுத்தப்பட்ட பேச்சைப் பழகுவது.