தினமும் மோர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சிட்டிகை பெருங்காயம் சேர்ப்பது சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கும். பாரம்பரியமாகவே தினசரி உணவில் மோர் சேர்ப்பது வழக்கம். பெருங்காயம் சேர்ப்பதன் மூலம் வயிறு உப்புசம், அசெளகரியம் குறைந்து செரிமானம் சீராக இருக்க உதவுகிறது. குறிப்பாக கோடைக் காலத்தில் மோருடன் பெருங்காயம் சேர்த்து எடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை விரிவாகப் பார்ப்போம்.
மோரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்
ஒரு கப் மோரில் உள்ள ஊட்டச்சத்து விவரங்கள்:
- கலோரிகள் - 98
- புரதம் - 8 கி
- கொழுப்பு - 3 கி
- நார்ச்சத்து - 0 கி
- கார்போஹைஹைட்ரேட்டுகள் - 12 கி
- கால்சியம் - 22% தினசரி மதிப்பில்
- சோடியம் - 16%
- வைட்டமின் பி12 - 22%
- ரிபோஃப்ளேவின் - 29%
- பாந்தோனிக் அமிலம் - 13%
மோரின் ஆரோக்கிய நன்மைகள்
மோர் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது:
- செரிமானம்: மற்ற பால் பொருள்களை விட இது ஜீரணிக்க எளிதாக இருக்கலாம்.
- எலும்பு ஆரோக்கியம்: மோரில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி, வைட்டமின் கே போன்றவை வலுவான எலும்புகளை ஆதரிக்கும்.
- பல் பாதுகாப்பு: மோரில் இருக்கும் புளிப்புத்தன்மையிலிருந்து பெறும் கால்சியம் பீரியண்டோண்டிடிஸை குறைக்கும்.
- கொழுப்பைக் குறைக்கும்: உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்க உதவும்.
- இரத்த அழுத்தம்: மோர் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
மோருடன் ஏன் பெருங்காயம் சேர்த்து எடுக்க வேண்டும்?
மோரில் இருக்கும் லாக்டோஸ் ஆனது சிலருக்கு ஒவ்வாமை அல்லது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது சகிப்புத்தன்மையற்ற இயற்கை சர்க்கரை. லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளடக்கத்துக்கு உணர்திறன் கொண்டவர்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாயு ஏற்படலாம். இந்த வாயு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை தவிர்க்கவே மோரில் பெருங்காயம் சேர்த்து எடுக்கப்படுகிறது. இதன் மூலம் சிறந்த செரிமானமும் சிறந்த உடல் ஆரோக்கியமும் பெறலாம்.
மோரில் பெருங்காயம் சேர்ப்பதன் நன்மைகள்
- வயிறு உப்புசம் குறைக்கும்: வயிறு உப்புசம், வாயு போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது வயிறு அசெளகரியம் அதிகமாக இருக்கும். இது அஜீரண பிரச்சனைகளை உண்டு செய்யும்.
- செரிமானத்தை மேம்படுத்தும்: பெருங்காயம் இரைப்பை குழாயின் தசைகளை தளர்த்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
- குடல் பிடிப்புகளை நீக்கும்: கனமான உணவுக்கு பிறகு குடல் பிடிப்புகள், வீக்கம் மற்றும் வாயு உள்ளிட்ட எரிச்சல் நோய்க்குறி அறிகுறிகளை போக்க இவை உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மோர் சிலருக்கு செரிமான பிரச்சனை ஏற்படுத்தும் என்று நினைத்தால், அவர்கள் பெருங்காயம் சிட்டிகை சேர்த்து எடுப்பது ஆச்சரியமான ஆரோக்கியத்தை அளிக்கும்.
பெருங்காய மோர் தயாரிக்கும் முறை
இந்த எளிய முறையில் பெருங்காய மோரை தயாரிக்கலாம்:
- மோர்: 1 கப் (கொழுப்பு இல்லாத மோர்)
- உப்பு: சுவைக்கேற்ப
- மிளகுத்தூள்: கால் டீஸ்பூன்
- பெருங்காயம்: 2 சிட்டிகை அளவு
அனைத்தையும் சேர்த்து நன்றாக ப்ளெண்டர் செய்து குடிக்கலாம். மோர் அதிகம் புளிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். தினமும் ஒரு டம்ளர் மோர் காலை உணவுக்கு பிறகு எடுத்துகொள்ளலாம். மதிய உணவு கனமாக அதிகமாக இருக்கும் போது இந்த மோர் ஒரு டம்ளர் குடித்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.
முடிவுரை
மோர் மிக அற்புதமான பானம் என்பதையும், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன, அவை உடலுக்கு செய்யும் நன்மைகள் என்ன என்பதையும் தெரிந்துகொண்டோம். மோர் சிலருக்கு வாயு உண்டு செய்யலாம் என்பதால் அவர்கள் அதை தவிர்க்க பெருங்காயம் சேர்த்து எடுக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டோம்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு சமயம் தமிழ் பொறுப்பேற்காது.