பிளாக் காபி உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. ஆனால் அதை ஜாதிக்காய் பொடியுடன் சேர்த்து குடிக்கும் போது, உடல் எடை குறைப்பு முதல் ஆழ்ந்த தூக்கம் வரை பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இந்த அற்புத கலவை உங்கள் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்தும் என்பதை முழுமையாக அறிந்து கொள்வோம்.
ஜாதிக்காயுடன் பிளாக் காபி: ஆரோக்கிய நன்மைகள்
நீங்கள் குடிக்கும் சாதாரண பிளாக் காபியுடன் ஜாதிக்காய் பொடியைச் சேர்ப்பது பல அதிசயமான பலன்களை அளிக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். மேலும், தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமையும். ஜாதிக்காய் பொடியின் மருத்துவ குணங்கள், பிளாக் காபியின் பண்புகளுடன் இணைந்து உங்கள் ஆரோக்கியத்தை பல மடங்கு மேம்படுத்துகிறது.
உடலை டீடாக்ஸ் செய்யும்
பிளாக் காபியில் நீங்கள் சேர்க்கப் போகும் இந்த ஒரு பொருள், உடலில் இருக்கும் நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி உடலை முழுமையாக டீடாக்ஸ் செய்யும். அஜீரணம் மற்றும் வயிற்று குமட்டல் போன்ற செரிமானப் பிரச்சினைகளையும் இது சரிசெய்யும். இதன்மூலம் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் செயல்பாடு துரிதப்படுத்தப்படும். இது ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.
பசியைக் கட்டுப்படுத்தும்
ஜாதிக்காய் பொடியை பொதுவாக இரவு நேரத்தில் பாலில் கலந்து எடுத்துக் கொள்ள ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த பொடியை நீங்கள் பிளாக் காபியில் சேர்த்து பகலில் எடுத்துக் கொள்ளும்போது, அது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும். இதனால் கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தடுக்க முடியும். இந்த காபியைக் குடித்ததுமே வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். குறிப்பாக இரண்டு உணவுக்கு இடையே குடிக்கும்போது தேவையில்லாத ஜங்க் உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க முடியும்.
கொழுப்பை எரிக்கும்
பிளாக் காபியில் இந்த ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து குடித்துப் பாருங்கள். இது உடலில் இருக்கும் கொழுப்பை எப்படி குறைக்கிறது என்று பாருங்கள். இந்த பொடியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக மினரல்கள் அதிகம், மாங்கனீசு அதிகமாக இருக்கிறது. இது கொழுப்புகளைக் குறைக்க உதவும். கொழுப்பு எரிக்கப்படும்போது இயற்கையாகவே உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
தூக்கமின்மை (இன்சோம்னியா) பிரச்சனைக்கு தீர்வு
இன்சோம்னியா என்பது தூக்கமின்மை பிரச்சினையைக் குறிக்கும். உலகில் பலரும் இந்த பிரச்சினையால் அவதிப்பட்டுகின்றனர். தூக்கமின்மை பிரச்சனை வெறுமனே தூக்கத்தை மட்டும் பாதிப்பதில்லை. அது உடல் எடையை அதிகரிப்பது போன்ற வேறு பல பிரச்சினைகளையும் கொடுக்கும். ஜாதிக்காய் தூக்கக் கோளாறுகளுக்கு மிகச்சிறந்த தீர்வைக் கொடுக்கும். ஆயுர்வேதத்தில் பசும்பாலில் ஜாதிக்காய் பொடியை சேர்த்து குடித்தால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஜாதிக்காய் பொடியை எப்படி பயன்படுத்துவது?
உங்கள் பிளாக் காபியில் 2 சிட்டிகை அளவு மட்டும் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து குடிக்க ஆரம்பிக்கலாம். இதை தினமும் 1 அல்லது 2 கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.