சருமத்தை பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஆயிரக்கணக்கான சருமப் பராமரிப்பு பொருள்கள் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. ஆனால் எந்த சருமப் பராமரிப்பு பொருள்களும் இல்லாத காலகட்டத்தில் நம் மூதாதையர்கள் என்ன மாதிரி ஸ்கின் கேரை பின்பற்றி இருக்கிறார்கள்னு பாருங்கள். பெண்கள் பெரும்பாலும் மஞ்சள் பயன்படுத்துவார்கள். ஆனால் ஆண், பெண் இருவருமே பயன்படுத்திய சில ஸ்கின் கேர் பொருள்களும் இருக்கின்றன. அதில் ஒரு பொருளைப் பற்றிதான் இங்கு பார்க்கப் போகிறோம்.
படிகாரம் என்னும் ஆலும் ஸ்டோன்
படிகாரம் என்பது அலுமினியம், பொட்டாசியம் மற்றும் சலபேட்டு ஆகியவற்றின் கலவையாகும். இந்த மூன்றையும் சேர்த்து படிக வடிவில் தயாரிக்கப்படுவதுதான் படிகாரம். படிகாரம் காலங்காலமாக நம் ஊரில் குறிப்பாக கிராமங்களில் மிக சாதாரணமாக சருமப் பராமரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தண்ணீரைச் சுத்திகரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது சருமத்தில் மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படும். இந்த படிகாரம் சருமத்திற்கு என்ன நன்மைகளைச் செய்யும், இதை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் வாங்க.
குளிக்கும் நீரில் படிகாரம்: அற்புத பலன்கள்
சருமப் பராமரிப்பில் படிகாரத்தை பல வழிகளில் பயன்படுத்த முடியும். நேரடியாகவும் சருமத்தில் இந்த படிகாரத்தை அப்ளை செய்ய முடியும். அதில் மிக மிக எளிமையாகவும் சருமத்துக்கு நிறைய பயன்களும் தரும்படி இந்த படிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதற்கு மிகச்சிறந்த வழிமுறை இதுதான். இந்த ஒரு டிப்ஸை ஃபாலோ பண்ணினாலே பல பிரச்சினைகள் தீரும். அது என்ன தெரியுமா? நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு படிகாரத்தைச் சேர்த்துக் குளிப்பதுதான். அப்படி குளிக்கும் தண்ணீரில் படிகாரத்தைப் போட்டு குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்னனு இங்கே பார்க்கலாமா!
வலிகளைக் குறைக்கும்:
நீங்கள் குளிக்கும் தண்ணீருக்குள் சிறிது படிகாரத்தைச் சேர்த்து குளிப்பதன் மூலம் உடலில் இருக்கும் வலிகள் குறையும். வேலைப்பளு, மன அழுத்தம் என்று உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீங்கள் சோர்வாக இருக்கலாம். ஆனால் இந்த படிகாரத்தைச் சேர்த்துக் குளிக்கும் போது உடல் சோர்வு, மன சோர்வு இரண்டுமே நீங்கும். உடல் வலிக்காக நிறைய தைலங்கள் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பீர்கள். ஆனால் உடல் வலிக்கு நீங்கள் எந்த தைலமும் பயன்படுத்தவே தேவையில்லை. வெந்நீரில் சிறிது படிகாரத்தைச் சேர்த்து குளித்தாலே போதும். உடல் வலி காணாமல் போய்விடும்.
வாசனை இல்லாத சருமப் பராமரிப்பு:
நாம் எப்போதுமே நல்ல நறுமணம் வீசக்கூடிய வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட சருமப் பராமரிப்பு பொருள்களையே பயன்படுத்துகிறோம். ஆனால் வாசனை பொருள்கள் சேர்க்கப்பட்ட சருமப் பராமரிப்பு பொருள்கள் சருமத்திற்கு நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அதனால் வாசனை திரவியங்கள் இல்லாத ஸ்கின் கேர் பொருள்களை பயன்படுத்தவே சருமப் பராமரிப்பு நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். அப்படி பார்க்கும்போது வாசனைகள் எதுவும் இல்லாத சூப்பர் ஸ்கின் கேர் பொருள் என்றால் அது இந்த படிகாரத்தைச் சொல்லலாம். வாசனைதான் இருக்காதே தவிர, படிகாரம் சேர்த்து குளித்தபின் நீங்கள் நாள் முழுக்க புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்.
அழற்சி மற்றும் இன்ஃபிளமேஷன்கள் குறைய:
படிகாரத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. சருமத்தில் அழற்சி மற்றும் இன்ஃபிளமேஷன்கள் ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும். குறிப்பாக பாக்டீரியாக்களின் தொற்றால் ஏற்படக்கூடிய முகப்பருக்கள் மறையச் செய்யவும் வர விடாமல் தடுக்கவும் உதவி செய்யும். அதோடு படிகாரத்தைப் பயன்படுத்திக் குளிக்கும் போது சருமத்தில் ஏற்படும் அழற்சி, எரிச்சல், சருமத் தடிப்புகள், தோல் பிரச்சினைகள் ஆகியவற்றைக் குறைக்கும்.
வேறு என்னென்ன பயன்கள் கிடைக்கும்?
- - உடலில் ஏற்படும் நிறைய தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
- - ஆண்கள் ஷேவிங் செய்யும் போது சருமத்தில் ஏற்படும் காயங்கள், கீறல்கள் ஆகியவற்றை குணப்படுத்துவதோடு அதனால் ஏற்படும் எரிச்சல் மற்றும் காயங்களைக் குறைக்கும்.
- - காயத்தில் இருந்து வரும் இரத்தப் போக்கையும் குறைக்கும்.
- - சருமச் சுருக்கங்களையும் நுண் கோடுகளையும் குறைக்கும்.
குளிக்கும் போது படிகாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?
குளியல் தண்ணீரில் படிகாரத்தை சேர்த்துக் குளிப்பது மிக மிக எளிமையான ஒன்றுதான். நீங்கள் குளிப்பதற்கு எடுத்து வைத்திருக்கும் நீரில் 2 ஸ்பூன் அளவு படிகாரப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது ஒரு சிறு துண்டு படிகாரத்தை உள்ளே சேர்க்கலாம். இந்த நீரை எதுவும் செய்யாமல் அப்படியே அரை மணி நேரத்திற்கு விட்டு விடுங்கள். பின்பு நீங்கள் அந்த நீரில் வெந்நீரை கலந்தோ அல்லது அப்படியே கூட குளிக்கலாம்.
இறுதியாக, மற்ற சருமப் பராமரிப்பு பொருள்களைப் போல படிகாரம் அதிக விலையும் கிடையாது. மிக எளிதாக உங்கள் வீட்டுப் பக்கத்திலேயே இருக்கும் நாட்டு மருந்து கடைகளிலேயே உங்களுக்குக் கிடைக்கும். பயன்படுத்துவதற்கு மிக மிக எளிதானது. ஆனால் நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவு பயன்கள் தரக்கூடியது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
படிகாரம் என்பது அலுமினியம், பொட்டாசியம் மற்றும் சலபேட்டு ஆகியவற்றின் கலவையாகும். இது சருமத்தில் கிருமி நாசினியாகவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடனும் செயல்படும்.
இது உடல் வலிகளைக் குறைக்கும், நாள் முழுவதும் புத்துணர்ச்சி அளிக்கும், சரும அழற்சியைக் கட்டுப்படுத்தும், முகப்பருக்களைத் தடுக்கும் மற்றும் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும்.
குளிக்கும் நீரில் 2 ஸ்பூன் படிகாரப் பொடியைச் சேர்க்கலாம் அல்லது ஒரு சிறு துண்டு படிகாரத்தை அரை மணி நேரம் ஊறவைத்து பயன்படுத்தலாம். இது மிகவும் எளிமையான வழிமுறை.